Thursday, February 19, 2009

முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு

"முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு" செய்தி பற்றி - ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 19.2.09 இதழ்.

தொகுதி பங்கீட்டு விஷயத்தில் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க ஏற்கனவே ஷரத் பவாருடன் இணக்கமாக பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் எஸ் பி தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் அடுத்த அஸ்திரமான -"பிஜேபி" கூட்டணிக்காக அவர் சொல்லும் நிபந்தனைகள்:

"ராமர் கோவில் கட்டும் எண்ணத்தை விட வேண்டும்; ஆர்டிகிள் 370 ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட வேண்டும்; "முஸ்லீம் எதிர்ப்பு" நிலையை விட வேண்டும். இதெல்லாம் பிஜேபி செய்தால் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள நாங்கள் தயார். வாஜ்பாயிடம், எங்களுடன் சேரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம்; இதே அழைப்பை அத்வானிக்கோ அல்லது வேறு எந்த பிஜேபி தலைவருக்குமோ விடுக்க தயார் - அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்." -

காங்கிரசுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க எஸ்.பி'க்க்கு இஷ்டம் இல்லை. 25 தொகுதிகளுக்கு கீழே இறங்கிவர காங்கிரஸ் தயாராக இல்லை. பல மாதங்களாக தொடரும் இந்த இழுபறி தொடரும் நிலையில், எஸ் பியின் பிஜேபி தந்திரம், தற்போது உ.பியில் ஆட்சியில் இருக்கும் பிஎஸ்பி'க்கு, எஸ் பி ஐ தாக்க நல்ல அஸ்திரமாக பயன்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், " எஸ் பி'யுடன் கூட்டா? சான்ஸே இல்லை" என்று சொல்லிவிட்டார். " தேர்தலுக்கு முன்னும் இல்லல - பின்னும் இல்லை - இதெல்லாம் ஒரு சதி," என்று திட்டவட்டமாக சொன்னதோடல்லாமல், " பிஜேபியின் எந்த தலைவராவது முலாயமிடம் எனக்கு தெரியாமல் அப்படியெல்லாம் பேசிவிட முடியுமா என்ன?" என்று ஒரு அதிரடியும் கொடுத்துள்ளார்.

என் 2 பைசா:

காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!!! போகாத ஊருக்கு வழி கேட்கும் முலாயமின் பூச்சாண்டி அதற்கு தெரியாதா என்ன?!

1 comment:

Boston Bala said...

நல்ல கட்டுரை.

விரிவாக பதில் பதிவு எழுதும் எண்ணம் வருது. இன்ஷா இறைவா :)