Monday, February 16, 2009

சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு

"காங்கிரஸ் பிச்சை கேட்காது"
அம்ர்க்களம் ஆறு-2/உ.பி
(17.2.2009)
குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பதிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.

"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது இயலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன." என்றார் சிங்.

ஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.2.2009

அமர்க்களம் ஆறு-1/உ.பி


தேசியவாத காங்கிரஸ் தலைவர்
சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு


புதுடெல்லி, பிப்.16-

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில், "தற்போது, மன்மோகன் சிங்கை பிரதமராக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒருவேளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அல்லது எங்கள் கட்சியின் தலைவர் முலாயம் சிங் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் இரு கட்சிகளுமே ஒன்றுக்கொன்று எதிர்ப்பு தெரிவிக்காது'' என்றார்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரிபாதி, `சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையிலான உறவை மராட்டிய மாநிலத்தை தாண்டி வலுப்படுத்துவதற்காக சரத் பவாரும் அமர்சிங்கும் நடத்திய பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.
தினத் தந்தி பிப்-16
முன் வந்த செய்தி கீழே: (பிப்14)

அமர்சிங் அதிருப்தி

Saturday, 14 February, 2009 12:28 PM
.
புதுடெல்லி, பிப்.14: கல்யாண்சிங் உடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இந்த விவகாரத்தை சில காங்கிரஸ் தலைவர்கள் ஊதிப் பெரிதாக்கி வருவதாக சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தி யுள்ளார்.
.
சி.என்.என். ஐ.பி.என். தொலைக் காட்சியின் "டெவில்ஸ் அட்வகேட்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் பேட்டியளித்தார். அப்போது அவர், பிஜேபியிலிருந்து விலகியுள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்குடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்திருப்பதை சில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டு மென்றே ஊதிப்பெரிதாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

""பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் இருந்த கல்யாண் சிங் தலைமை யிலான அரசும்தான் காரணம். அப்படிப்பட்ட காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருக்கும்போது, தற்போது பிஜேபியை எதிர்க்கும் கொள்கை களைக் கொண்ட கல்யாண்சிங்குடன் ஏன் கூட்டணி வைத்துக்கொள்ளக் கூடாது'' என்று அமர்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நல்லுறவு நீடிப்பதாக அவர் தெரிவித்தார். காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக்கொண்டால் சமாஜ்வாதி கட்சிக்கு அரசியலில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதற்காக அந்தக் கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள விரும்ப வில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமர்சிங் அதனை மறுத்தார்.
உத்தரப்பிரதேசத்தில் தொகுதி பங்கீடு செய்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தை மற்றும் கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு எதிரான சிபிஐ வழக்கு ஆகியவை காரண மாகவே காங்கிரசுடன் சமாஜ்வாதி கட்சிக்கு கசப்புணர்வு ஏற்பட்டி ருப்பதாக கூறப்படுவதையும் அமர்சிங் நிராகரித்தார்.
-மாலைச்சுடர்- பிப் 14

No comments: