Showing posts with label BJP. Show all posts
Showing posts with label BJP. Show all posts

Saturday, March 14, 2009

எங்கள் ஓட்டு Open Sourceக்கே!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திறவூற்றில் (open source) அமைந்த மென்பொருட்களைப் பயன்படுத்தப்போவதாக பாஜக இன்று வெளியிட்ட தனது தகவல் தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வை (IT Vision Document) ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

கடந்தமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அன்றைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிரமோத் மகாஜன், எல்லாவிதங்களிலும் மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை ஆதரித்ததோடு மட்டுமல்லால், லினக்ஸ் ஆதரவாளர்களைக் கடிந்து கொள்ளவும் செய்தார். இன்று பாஜக அதற்கு நேர் எதிரான நிலையை அறிவித்திருக்கிறது.

இன்று கட்சியின் கணினி சம்பந்தப்பட்ட அலுவல்களில் திறவூற்று மென் பொருட்களையே பாஜக பயன்படுத்தி வருகிறது. மேலை நாடுகள் சில சில்ல்றைத் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதற்கு ராயல்டி என்ற பெயரில் நம்மிடம் கொள்ளைப் பணம் கறக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்போவதாகவும் டிஜிட்டல் இறையாண்மையைக் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்திருக்கிறது பாஜக.

அட பரவாயில்லையே, நம் அரசியல் கட்சிகள் இதைப் பற்றியெல்லாம் கூட யோசிக்கிறார்களா?

Friday, March 06, 2009

BJP Strategy: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல்

பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 46 பா.ஜனதா வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்துடன் சேர்த்து, இதுவரை 166 வேட்பாளர்களின் பெயர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருக்கிறது.

இந்தப்பட்டியலில் பெரும்பாலோர் நடப்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மக்களவையில் பணத்தை கொண்டு வந்து காட்டிய 3 எம்.பி.க்களில் ஒருவரான பக்கான்சிங் குலாஸ்தேவும் (Fagan Singh Kulste) இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இதில்
  • கர்நாடகம் - 11 வேட்பாளர்கள்
  • சத்தீஸ்கர் மாநிலம் - 11
  • மத்தியப்பிரதேசம் - 12
  • ராஜஸ்தான் - 12
வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  • கர்நாடக மாநிலத்தின் தற்போதைய எம்.பி.க்கள் 9 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. 
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தற்போதைய எம்.பி.க்கள் 5 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப் பட்டுள்ளது.
  • மத்தியப்பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் தற்போதைய நாடாளு மன்ற உறுப்பினர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் 8 நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்தப்படுகின்றனர்.
வேட்பாளர் பட்டியல்
  • சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேசத்தின் விதிஷா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் நிறுத்தப்படு கிறார்.
  • அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தி (பெல்லாரி)
  • பொதுப் பணித்துறை மந்திரி சி.எம். உதாழியின் மகன் சிவ்குமார் உதாதி (ஹலேரி)
  • சுகாதாரத் துறை மந்திரி உமேஷ் கட்டியின் சகோதரர் ரமேஷ் கட்டி (சிக்கொடி)
  • கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ரெவு நாயக் பெலமகி (குல்பர்கா)
  • ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் சகோதரி யசோதரா ராஜே குவாலியர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • பிகானீர் தொகுதியின் உறுப்பினரான நடிகர் தர்மேந்திராவின் பெயர் இந்த பட்டியலில் இல்லை. தற்போது ரிசர்வ் தொகுதியாக உள்ள இது அர்ஜூன் மேக்வால் என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுவார்.
  • ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் ஜலவார் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங் பார்மர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • முன்னாள் மந்திரி பக்கன் சிங் லோவ்தே (மண்டியா)
  • அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கின் சகோதரர் லட்சுமண் சிங் (ராஜ்கார்)
  • பா.ஜனதா கட்சி யின் பொதுச்செயலாளர் தவார் சந்த் கெலாட் (டெவாஷ்)
  • முன்னாள் மத்திய மந்திரி சத்யநாராயண் ஜடியா (உஜ்ஜயினி)

பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் வெங்கையா நாயுடு, அருண்ஜேட்லி ஆகியோர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவ தில்லை என்றும், அவர்கள் கட்சியின் தேர்தல் பணிகளை கவனிப்பார்கள் என்றும் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தற்போது ராஜ்யசபா எம்.பி.களாக இருந்து வருகின்றனர்.

அருண் ஜேட்லி
  • பீகார்,
  • உத்தரபிரதேசம்,
  • டெல்லி,
  • பஞ்சாப்,
  • சண்டிகார்
ஆகிய மாநிலங்களின் தேர்தல் பணிகளை பார்த்துக்கொள்கிறார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பொறுப்புகளையும் அருண்ஜேட்லி கவனித்துக் கொள்கிறார்.

சுஷ்மா சுவராஜ்
  • மத்திய பிரதேசம்,
  • சட்டீஸ்கர்,
  • ஜார்கண்ட்
மாநிலங்களின் தேர்தல் பொறுப்புகளையும்

சாந்த குமார் மற்றும் பகத்சிங் கொசூரி
  • ஜம்முகாஷ்மீர்,
  • இமாச்சல் பிரதேசம்,
  • உத்தரகாண்ட்,
  • அரியானா
மாநிலங்களின் தேர்தல் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
  • குஜராத்,
  • மகாராஷ்டிரா,
  • கோவா,
  • டையூ,
  • டாமன் உள்ளிட்ட மேற்கு மண்டல மாநிலங்களின்
தேர்தல் பொறுப்புகளை கவனித்துக்கொள்கிறார்.

ஒரிசா மாநில தேர்தல் பொறுப் பாளராக வி.சதீஷும், ராஜஸ்தானைச் சேர்ந்த கட்சி தலைவர் சவுதன்சிங், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாமில் தேர்தல் பொறுப்புகளை பார்த்துக் கொள்கின்றனர்.

முந்தைய செய்தி: நாராயணன்: பாஜகவின் தேர்தல் முகங்கள்

Wednesday, March 04, 2009

Tamil Nadu Therthal: தமிழக கம்யூனிஸ்ட் திமுக கூட்டணிக்கு செல்கிறதா?

1. BJP launches LS campaign from TN; Advani to speak in Nagerkovil:
தமிழகத்திலிருந்து பிரச்சாரம் தொடங்கும் அத்வானி

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன்:

நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தால் அவர்களை சேர்க்க தயாராக இருக்கிறோம்.

~oOo~

2. Regional News Headlines in Tamil - Yahoo! Tamil News:
கருணா‌நி‌‌தியுட‌ன் தா.பா‌ண்டிய‌ன் திடீர் ச‌‌ந்‌தி‌ப்பு

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை இ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் திடீரென் ச‌ந்‌தி‌த்து உட‌ல் நல‌‌ம் கு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்தா‌ர்.

~oOo~

3. TamilNadu News - Dinamani.com:  
தமிழகத்தில் 10 தொகுதிகளைப் பெற கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி

2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 தொகுதிகளில் போட்டியிட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • மதுரை, 
  • நாகர்கோவில் தொகுதிகளிலும், 
இந்திய கம்யூனிஸ்ட்
  • கோயம்புத்தூர், 
  • தென்காசி தொகுதிகளிலும் 
போட்டியிட்டு வெற்றி பெற்றன.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்
  • மதுரை, 
  • கன்னியாகுமரி, 
  • திருச்சி, 
  • கோவை, 
  • சிதம்பரம் 
உள்ளிட்ட 10 தொகுதிகளின் பட்டியலை அ.தி.மு.க.விடம் அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
  • நாகப்பட்டினம், 
  • தென்காசி, 
  • திருப்பூர், 
  • கிருஷ்ணகிரி, 
  • விருதுநகர், 
  • வடசென்னை 
உள்ளிட்ட 10 தொகுதிகளின் பட்டியலை அளிப்பது என அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்பினாலும், அக்கட்சிகள் 6 இடங்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்றும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை தலா 3 தொகுதிகள் வழங்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

~oOo~

4. Chiranjeevi file case against EC:
பொது சின்னம் இல்லை-குழப்பத்தில் சிரஞ்சீவி

சிரஞ்சீவி துவக்கிய பிரஜா ராஜ்யம் முதன் முறையாக நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. இதையடுத்து தனது கட்சிக்கு பொது சின்னம் வேண்டும் என்றும், அதை ரயில் சின்னமாக தரும்படியும் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார்.

பொது சின்னம் கிடைக்காததை அடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய நிலை.

~oOo~

5. TamilNadu News - Dinamani.com:  
சோனியாவை திட்டியதை மறந்துவிட்டார்களா? - கருணாநிதி

"15 தொகுதிகள் வேண்டும்' என்று தமிழக காங்கிரசார் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதிடம் வற்புறுத்திய செய்திக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: Cadres should Work for DMK-Cong win: Karunanidhi, திமுக- காங். கூட்டணி: "உடல் எல்லாம் மூளை, சிந்தனை, வஞ்சனை: கருணாநிதி"

~oOo~

6. Sivagami IAS to contest in Kanyakumari constituency:
கன்னியாகுமரியில் சிவகாமி ஐஏஎஸ் போட்டி

மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி போட்டியிடுகிறார். சிவகாமியின் கணவரின் சொந்த ஊரான கற்காடு கிராமம் இந்தத் தொகுதியில் தான் உள்ளது.

கடந்த தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியுடன் இருந்தது. இப்போது தொகுதி மறுவரையின்படி நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 40,000 தலித் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இந்த தொகுதிக்குள் அடங்கிய
  • நாகர்கோவில், 
  • குளச்சல், 
  • பத்மநாபபுரம், 
  • விளவங்கோடு, 
  • கிள்ளியூர் 
ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் தலித் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

கட்சிகள். கூட்டணிகள். கணக்குகள்

- நாராயணன்

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கும்.இறுதியாக இப்போது காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பா.ஜ.க முன்னிறுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. தேவ கெளடாவின் மூன்றாவது அணீ மார்ச் 12 அன்றைக்கு அனைத்து தலைவர்களோடும் தன் தேர்தல் பிரச்சாரத்தினை தொடக்க இருக்கிறது. ஆனால், இந்த மூன்றாவது அணி ஒட்டினை பிரித்து, யார் பதவிக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களோடு போய்விடும் என்பது தான் பரவலான எண்ணம்.

இப்போதைக்கு யார் யாரோடு இருக்கிறார்கள் என்று பார்ப்போம்

ஐக்கிய முற்போக்கு அணி (UPA)
  • காங்கிரஸ் - சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் மற்றும் மாநில ரீதியான காங்கிரஸ் தலைவர்கள்
  • ராஷ்ட்ரிய ஜனதா தள் (RJD + LJP) - லாலு பிரசாத் யாதவ் (பீகார்)
  • ஜனதா முக்தி மோர்ச்சா (JMM)- சிபு சோரன், (ஜார்கண்ட்) (சமீபத்திய செய்திகளில், முதலமைச்சர் பதவி தராததால் சிபு சோரன் கோவமடைந்து இருப்பதாக கேள்வி)
  • திரிணாமுல் காங்கிரஸ் (TP) - மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்)
  • தேசிய காங்கிரஸ் - உமர்/பரூக் அப்துல்லா (ஜம்மு & காஷ்மீர்)
  • சமாஜ்வாடி கட்சி (SP) - முலாயம் சிங்/அமர் சிங் கூட்டணி (உத்தரப்பிரதேசம்). முலாயம் நடுவில் “சரத் பவார்” பிரதமர் வேட்பாளராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று வேறு சொல்லியிருக்கிறார். இது தாண்டி, உ.பியின் தொகுதி பங்கீட்டில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை.
  • தேசியவாத காங்கிரஸ் (NCP) - சரத் பவார். மஹாராஷ்ட்ராவின் கிங் மேக்கர். காங்கிரஸோடு தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார். இன்னமும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. கூடவே, சிவசேனாவோடு வேறு தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார். மஹாராஷ்டிராவில் இப்போது காங்கிரஸ் + தேசியவாத காங்கிரஸின் கூட்டணி அரசு நடந்து கொண்டிருக்கிறது.
  • திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) - கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா (தமிழ்நாடு) தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலை இருப்பதாக தெரிகிறது.காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கொடுப்பதாக கருணாநிதி கூட்டணியை தக்கவைத்து கொண்டு இருக்கிறார். தேர்தலின் முடிவுக்கு பின், காங்கிரஸ் கூட்டணி பற்றி பரிசீலனை செய்யலாம்.
  • விடுதலைச் சிறுத்தைகள் (VCK) - திருமாவளவன் (தமிழ்நாடு).கருணாநிதியோடு கூட்டணியில் இருக்கிறார். தலித் மக்களின் ஒட்டு இன்னமும் விடுதலைச் சிறுத்தைகள் பக்கம் இருக்கிறது. ஆனால், இலங்கைப்பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் கவனமும், கருணாநிதியோடு கூட்டும் எதிர்மறையானது.

ஆக இப்போதைக்கு
UPA = INC + RJD + LJP + TP + SP + NCP + NC + DMK + VCK + உதிரிக் கட்சிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)

  • பாரதீய ஜனதா கட்சி - அத்வானி, மோடி, அருண் ஜெட்லீ, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்.
  • அகாலி தளம் (AD) - பஞ்சாப்.கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • இந்திய தேசிய லோக் தளம் (INLD) - சவுதாலா. ஹரியானாவின் மிக முக்கியமான தலைவர். கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) - அஜித் சிங். உத்தரப்பிரதேசம். ஜாட் இன மக்களின் முக்கியமான தலைவர். கூட்டணியும், தொகுதி பங்கீடும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு உ.பியின் ஜாட் இன மக்கள் அதிகம். மாயாவதிக்கும், சமாஜ்வாடி பார்ட்டிக்கும் கடுமையான போட்டியாக இருக்கும்.
  • பாரதீய ஜனதா தள் (BJD) - பிஜு பட்நாயக்.ஒரிஸ்ஸா.கூட்டணி உறுதி. தொகுதி பங்கீடு இன்னமும் முடியவில்லை.
  • சிவ சேனா - பால் தாக்கரே. மஹாராஷ்டிரா. பெரியதாக இப்போதைக்கு மஹாராஷ்டிராவில் சிவ சேனாவிற்கு மரியாதை இல்லை. பா.ஜ.கவோடு பல சமயங்களில் கருத்து ரீதியான மோதல்கள் இருந்திருக்கிறது. ஆனாலும், இந்த தேர்தலை சேர்ந்தே சந்தித்தாக வேண்டிய கட்டாயம். ஒரு வேளை சரத் பவார் மனசு மாறினாறென்றால், சிவசேனா + பாஜக + தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸினை இடம் தெரியாமல் ஒட வைக்கலாம்.
  • அஸ்ஸாம் கன பரிஷத் (AGP) - பிரபல் குமார் மகந்தா. அஸ்ஸாம். பாஜக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸிற்கு எதிரானது என்பதால், உடன்படிக்கை ஏற்படலாம் என்பது நம்பிக்கை.
  • தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) - விஜயகாந்த். தமிழ்நாடு. இதை எழுதும் இந்த நிமிடம் வரை எவ்விதமான கூட்டணியும் இல்லை. ஆனால் செய்திகள் தேமுதிகவும் பாஜகவும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கின்றன. சென்ற மாநில தேர்தல்களில் 8.33% ஒட்டு பெற்று மக்களி்ன் கவனத்தினை ஈர்த்த கட்சி. இளைஞர்கள் மத்தியில் விஜயகாந்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. இப்போதைக்கு எதுவும் நிச்சயமில்லை. இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று வேறு நடுவில் சொல்லியிருந்தார்கள்

ஆக இப்போதைக்கு
NDA = BJP + Shiv Sena + AD + INLD + AGP + RLD + உதிரிக் கட்சிகள்

மூன்றாவது அணி

மார்ச் 12 ஆம் தேதி தேவ கெளடா தலைமையில் துவக்கம் இருக்கிறது. இப்போதைக்கு கொஞ்சம் இன்பார்மலாக பல கட்சிகள் அதில் இருக்கின்றன.

ஜனதா தளம் (இணைப்பு) (JD (U)) - முந்திய பிரதமர் தேவ கெளடா. முன்னாளைய கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி. கர்நாடாகாவில் மிக முக்கியமானn கட்சி. கன்னடிகா, கன்னட எழுச்சி என்று பெங்களூர் சாராத கர்நாடாகாவில் வலிமையோடு இருக்கக்கூடிய கட்சி.
பிரச்சனை: ஒரு வேளை தேர்தலில் ஜெயித்து, ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வருமெனில் அங்கே தாவி விடக் கூடிய அபாயமிருக்கிறது. அவர்களுடைய பிரச்சனை மாநிலத்தில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து, பிறகு கவிழ்த்து, இப்போதைக்கு பாஜக ஆட்சி நடந்து வருவது.

கம்யுனிஸ்டுகள் (CPI /CPM) -பிரகாஷ் காரத். பிருந்தா காரத்.புத்ததேவ் பட்டாச்சார்யா. பரதன். பின்ராயி விஜயன். மேற்கு வங்காளம், கேரளாவில் ஆட்சி்யிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் வெளியேறினார்கள். பிரகாஷ் காரத்திற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு கூட்டணியில் இருக்கவேண்டிய கட்டாயம். இந்தியா முழுக்க கம்யுனிஸ்டு அனுதாபிகள் இருக்கிறார்கள். காங்கிரஸ், பாஜகவை விட இந்தியாவெங்கும் ஒரளவிற்கு பரவலான வாக்காளர்களை கொண்ட கட்சி.
பிரச்சனை: தனித்து இருப்பதால், வாக்கினை பிரிக்கலாமெயொழிய ஆட்சி அமைக்க முடியாது. நல்ல எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கமுடியும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ADMK) - ஜெயலலிதா. தமிழ்நாடு. திமுக எதிர்ப்பலையில் இப்போதைக்கு உற்சாகமாக இருக்கிறார்கள். மூன்றாவது அணியில் இருக்கிறேன் என்று போயஸ் கார்டனில் தலைவர்களோடு தேனீர் அருந்திவிட்டு, காங்கிரஸை தன்னோடு சேருங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தவர். தென் தமிழகத்தில் கட்சியின் வாக்கு வங்கி அதிகம். மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகள் களத்தில் இறங்கி வேலை செய்வார்கள் என்பது கூடுதல் பலம். இப்போதைக்கு மூன்றாம் அணி.
பிரச்சனை: காங்கிரஸுக்கு பகிரங்க அழைப்பு விட்டதால், தேர்தலுக்கு பின்னான நிலைமை சொல்ல முடியாது. ஜெயலலிதாவின் தேவை, திமுக ஆட்சி கலைப்பு. அதற்கு தோதாக தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து ஐ.மு.கூ க்கு 15-20 இடங்கள் தேவைப்படுமெனில் காங்கிரஸ் திமு்கவை கழட்டிவிட்டு அதிமுகவோடு சேரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதரவு வி்லக்கப்படும்.அதிமுக ஆட்சியில் அமர ஒரு வாய்ப்பிருக்கும்.

தெலுகு தேசம் (TDP) , தெலுங்கானா ராஷ்ட்ரியா சமிதி (TRS) - சந்திரபாபு நாயுடு.ராகவேந்தர் ராவ். ஆந்திரா. உத்வேகத்தோடு காங்கிரஸ் எதிர்ப்பலையில் போட்டி போ்டுகிறார்கள். தெலுகு தேசம் + தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி + கம்யுனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து மாநிலத்துக்கும், நாடாளுமன்றத்திற்குமான தொகுதி உடன்பாடுகள் பேசப்பட்டு வருகின்றன. சந்திரபாபு நாயுடுவிற்கு தன்னை நிறுப்பித்தாகவேண்டிய கட்டாயம்.
பிரச்சனை: ஐ.மு.கூக்கு கண்டிப்பாக போக மாட்டார்கள். ஆனால் ஒரு வேளை தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில், தெலுகு டதேசம் பாஜகவுக்கு வெளியிலிருந்தோ, இல்லை உள்ளே போயோ ஆதரவு கொடுக்கலாம். பாஜகவும் இப்போது தெலுங்கானா பற்றி பேசுவதால் தெலு்ங்கான ராஷ்ட்ரிய சமிதியும் பாஜகவுக்கு ஆதரவு தரலாம்

ஆக இப்போதைக்கு
Third Front = JD(U)+ CPI +CPM + TDP + TRS + AIADMK + உதிரிக் கட்சிகள்

மதில் மேல் பூனைகள்

பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) - மாயாவதி. உத்தரப்பிரதேசம். தலித் மக்களின் எழுச்சி என்று நம்பப்படுபவர். டெல்லியின் மீதும், பிரதமர் பதவி மீதும் எப்போதும் ஒரு கண் இருக்கிறது. உ.பியின் 80 தொகுதிகளில் பிஎஸ்பியின் கை ஒங்கியி்ருக்கிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு கூட்டணி இல்லாமல் கனவுகள் நிறைவேறாது. ஆனாலும், இன்னமும் மூன்றாவது அணியினை நம்பி இறங்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏதேனும் வியுகங்கள் வகுக்கலாம்

பாட்டாளி மக்கள் கட்சி - ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். தமிழ்நாடு. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், கூட்டணியிலிருந்து விலகி விட்டார் என்று தமிழ்நாட்டில் நம்பப்படுகிறது. தொடர்ச்சியாக 12 வருடங்கள், பாஜகவுடனும், காங்கிரஸுடனும் இருந்து மத்தியில் அமைச்சரவைகள் பெற்றுக் கொண்ட கட்சி. இலங்கை தமிழர் பிரச்சனையில் கருத்து வேறுபாடுகள், ஆளும் திமுக + காங்கிரஸ் கூட்டணியோடு உருவாகியிருக்கிறது. பல்வேறு மாநிலம் தொ்டர்பான பிரச்சனைகளிலும் பாமகவின் பார்வை புறக்கணிக்கப்பட்டது, ஆழமான விரிசலை உண்டாக்கியிருக்கிறது. ஹேஷ்யங்கள், ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணிக்கு போவார் என்று சொல்கிறது. இன்னமும் கூட்டணி பற்றி முடிவெடுக்கவில்லை.

மேற்சொன்னவை தேர்தலுக்கு முன்னான இப்போதைய நிலைமை.

நிகழ்சூழல் 1

ஒரு வேளை காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐ.மு.கூ தொகுதிகள் அடிப்படையில் மு்ன்னிலை பெறும் பட்சத்தில், ஜனதா தள் (இணைந்தது), அதிமுக, ஒரு சாரார் கம்யுனிஸ்டுகளே அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம்.

நிகழ்சூழல் 2

ஒரு வேளை பாஜக முன்னிறுத்தும் தே.ஜ.கூ தொகுதிகள் அடிப்படையில் முன்னிலைப் பெறும் பட்சத்தில், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி பார்ட்டி, தெலுகு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகள் அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம். பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவிற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாம். அதிமுகவிற்கும் அதே நிலை.ஆனால் பாஜகவினர் முன்பு நடந்ததை மறந்திருக்க மாட்டார்கள்.

நிகழ்சூழல் 3

மூன்றாவது அணி பெருவாரியான தொகுதிகள் முன்னிலைப் பெறுவது என்பது இப்போதைக்கு சொல்லமுடியாத காரியம். அப்படி ஒருக்கால் நடக்கும்பட்சத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், அஸ்ஸாம் கன பரிஷத், அகாலி தளம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மேற்சொன்ன மூன்று சூழல்களிலும் பாமக பொதுவான ஒரு ஆதரவினை, சூழலைப் பொறுத்து எடுத்து அமைச்சரவையில் இடம் பிடிப்பார்கள் என்று தோன்றுகிறது.

THE GAME JUST BEGINS.

Tuesday, March 03, 2009

ரஜினிகாந்த் கடிதம்: யாருக்கு என் ஆதரவு

நன்றி: மக்களவைத் தேர்தல் 2004

ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது அது பாராளுமன்றத் தேர்தல் ஆகட்டும் அல்லது சட்டமன்றத் தேர்தல் ஆகட்டும் என்னுடைய ஆதரவு யாருக்குஇஅதாவது என்னுடைய வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது.

இந்த முறையும் அந்த கேள்வி எழுந்துள்ளது.
நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். பல காரணங்களுக்காக இந்த பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. 
 ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். என் அன்பார்ந்த தமிழக மக்களே, இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்சினை தண்ணீர் பிரச்சினை. ஏழைகளிலிருந்து பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக்கொண்டிருப்பது தண்ணீருக்காக.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் இந்த கடுமையான பிரச்சினை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்தை நீக்க இந்த ஒரே வழிதான். குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப்போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் எல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்துவரும் எந்த ஜீவநதியும் இல்லை.

நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயம். மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும். நான் இந்த ஒரு மாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களை சுற்றி வந்தேன். எனக்கு ஒன்று நேரிடையாக தெளிவாக தெரிந்தது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்க போகிறதோ எனக்கு தெரியாது.
ஆனால், இந்த தேர்தலில் மத்தியில் அமரப் போவது (பாஜக) வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசுதான். இது உறுதி.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய நாட்டின் முக்கியப் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசின் தேர்தல் அறிக்கையில் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள்.

திரு. அத்வானி அவர்களே அதை செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதை செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆக, இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணிக்குத்தான் என் ஓட்டு.

தமிழக மக்களே, அன்பான ரசிகர்களே, மறுபடியும் சொல்கிறேன். இது எந்த கூட்டணிக்கும் என் ஆதரவு அல்ல. இது என் ஓட்டு மட்டும்தான். இதற்காக தமிழக மக்களையோ, என் ரசிகர்களையோ நான் ஓட்டு போடும் கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன். நான் இந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவதாலே என் ரசிகர்களும், இந்த கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பல கட்சிகளில் இருக்கிறீர்கள்இ உங்களின் ஓட்டு உரிமையை நான் பறிக்க மாட்டேன்.

ஆனால் சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே குறிப்பாக தாய்மார்களே, இளைஞர்களே, மாணவஇமாணவிகளே, படித்தவர்களே, நீங்கள் ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்போட போகும்போது நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை தண்ணீ வேணும்னு ஓட்டு போட போறீங்களா? நீங்களே முடிவு பண்ணுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தியுங்கள். செயல்படுங்கள்.

வாழ்க தமிழக மக்கள்! வளர்க தமிழ்நாடு!

நதிகள் இணையட்டும்! இந்தியா ஒளிரட்டும்!

- ஜெய் ஹிந்த்.

Thursday, February 26, 2009

வாயில்லாப் பூச்சி எம்.பி.க்கள்

எம்.பி.யாக தேர்ந்தெடுப்பது
  • விவாதத்தில் பங்கெடுக்கவும், 
  • கேள்வி நேரத்தில் தொகுதிக்காக கவன ஈர்ப்புக் கோரவும், 
  • கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும்
குரல் கொடுக்க என்பதை அறியாதவர்கள் சட்டசபையை நிறைத்து இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசவே பேசாத மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல்:
  1. இந்தி  நடிகர் தர்மேந்திரா - பிக்கானெர்
  2. கன்னட நடிகர் அம்பரீஷ் - காங்கிரஸ்: மான்டியா
  3. Biren Singh Engti
  4. Manikrao Hodlya Gavit  
  5. மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா
  6. Baliram Kashyap - பாஜக
  7. Sohan Potai - பாஜக
  8. Somabhai Gandalal Koli Patel - பாஜக
  9. நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தெரிந்த சிவ சேனாவின் Prakash Paranjpe
  10. Beni Prasad Verma - சமாஜ்வாதி
  11. Saleem Iqbal Shervani - சமாஜ்வாதி
  12. Bhishma Shankar - பகுஜன் சமாஜ்
  13. Akbar Ahmad Dumpy - பகுஜன் சமாஜ்
  14. Kunwar Sarvraj Singh - ஜனதா தளம்
  15. Laxman Rao Pandurang Patil - NCP
மேலே சொன்னவர்கள் கொட்டாவி விட மட்டும் வாயைத் திறந்தார்கள். கூச்சல் போட மட்டும் டப்பிங் குரல் கொடுத்தார்கள்.

இவர்கள் வாயில்லாப் பூச்சிகள்.

ஆனால், வாக்களித்தவர்களுக்காக வாயைத் திறக்காதவர்கள் இன்னும் எக்கச்சக்கம். வக்கணையாக வாய் கிழிய விவாதங்களில் புஜபல பராக்கிரமத்தை நிலைநாட்டினாலும், சொந்தத் தொகுதிக்காக துறும்பைக் கூட கிள்ளிப் போடும் கேள்விகளை எழுப்பாதவர்களின் சாம்பிள்:
  • பாரதீய ஜனதாவின் பிரதம மந்திரி வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானி
  • காங்கிரசு தலைவி சோனியா காந்தி
  • இன்னாள் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா
இவர்களின் தொகுதியில் 'குறையொன்றுமில்லை போல!?
நாடாளுமன்றம் ஒரு நிமிடம் நடக்க எடுக்கும் செலவுத் தொகை: ரூபாய். 34,500/-

ஆங்கிலத்தில்: Just seen, never heard: 15 MPs who didn't speak

Thursday, February 19, 2009

முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு

"முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு" செய்தி பற்றி - ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 19.2.09 இதழ்.

தொகுதி பங்கீட்டு விஷயத்தில் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க ஏற்கனவே ஷரத் பவாருடன் இணக்கமாக பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் எஸ் பி தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் அடுத்த அஸ்திரமான -"பிஜேபி" கூட்டணிக்காக அவர் சொல்லும் நிபந்தனைகள்:

"ராமர் கோவில் கட்டும் எண்ணத்தை விட வேண்டும்; ஆர்டிகிள் 370 ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட வேண்டும்; "முஸ்லீம் எதிர்ப்பு" நிலையை விட வேண்டும். இதெல்லாம் பிஜேபி செய்தால் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள நாங்கள் தயார். வாஜ்பாயிடம், எங்களுடன் சேரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம்; இதே அழைப்பை அத்வானிக்கோ அல்லது வேறு எந்த பிஜேபி தலைவருக்குமோ விடுக்க தயார் - அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்." -

காங்கிரசுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க எஸ்.பி'க்க்கு இஷ்டம் இல்லை. 25 தொகுதிகளுக்கு கீழே இறங்கிவர காங்கிரஸ் தயாராக இல்லை. பல மாதங்களாக தொடரும் இந்த இழுபறி தொடரும் நிலையில், எஸ் பியின் பிஜேபி தந்திரம், தற்போது உ.பியில் ஆட்சியில் இருக்கும் பிஎஸ்பி'க்கு, எஸ் பி ஐ தாக்க நல்ல அஸ்திரமாக பயன்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், " எஸ் பி'யுடன் கூட்டா? சான்ஸே இல்லை" என்று சொல்லிவிட்டார். " தேர்தலுக்கு முன்னும் இல்லல - பின்னும் இல்லை - இதெல்லாம் ஒரு சதி," என்று திட்டவட்டமாக சொன்னதோடல்லாமல், " பிஜேபியின் எந்த தலைவராவது முலாயமிடம் எனக்கு தெரியாமல் அப்படியெல்லாம் பேசிவிட முடியுமா என்ன?" என்று ஒரு அதிரடியும் கொடுத்துள்ளார்.

என் 2 பைசா:

காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!!! போகாத ஊருக்கு வழி கேட்கும் முலாயமின் பூச்சாண்டி அதற்கு தெரியாதா என்ன?!