Sunday, February 22, 2009

வாசகர் வாக்கெடுப்பு: மன்மோகன் முன்னிலை

இந்தப் பதிவில் சில வாக்கெடுப்புக்களை நடத்தி வருகிறோம். இங்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை இந்திய வாக்காளர் எண்ணிக்கையில் மிகச் சிறிய துளி என்பதால் இந்தக் கணிப்புகள் எவ்வளவு தூரம் தேர்தலில் பிரதிபலிக்கும் எனத் தெரியாது. அப்படிக் கண்டு பிடிப்பதும் அவற்றின் நோக்கமல்ல.

மூட் மீட்டர்ஸ்

அவை இந்தப் பதிவிற்கு வரும் வாசகர்களின் மனநிலை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்ட Mood Meters. இந்த வாசகர்கள் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிப்பவர்கள், அதைக் குறித்து ஒரு கருத்துக் கொண்டவர்கள், அதை வெளிப்படுத்த முனைபவர்கள் என்பதால் இந்த வாக்கெடுப்புக்களும் என்னளவில் முகியமானவையே. இந்த 'மூட் மீட்டர்'களில் கிடைத்த தகவல்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

அடுத்த பிரதமர் யார்?

அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி வாசகர்கள் முன் வைக்கப்பட்டது. ஒரு வார காலம் நடந்த இந்தக் கணிப்பு பிப்ரவரி 19ம் தேதி இந்திய நேரம் 12:17க்கு முடிவடைந்தது. இந்தக் கணிப்பில் 481 வாசகர்கள் வாக்களித்துள்ளார்கள்

இந்த வாக்கெடுப்பில் மன்மோகன்சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 167 வாசகர்கள் தங்கள் ஆதரவை அவருக்குத் தெரிவித்துள்ளனர். அதாவது பதிவான வாக்குகளில் 34 சதவீதம் அவருக்கு ஆதரவாகப் பதிவாகி உள்ளது

ஆனால் போட்டியில் அத்வானி அவருக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டார். அவர் பெற்ற வாக்குகள் 150. அதாவது 31%

மற்ற எவரையும் வாக்காளர்கள் பொருட்படுத்தவே இல்லை. ராகுல் காந்தி, நரேந்திர மோடி இருவரும் சற்றேறக்குறைய அடுத்த நிலையில் இருக்கிறார்கள். ஒருவேளை அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-பாஜக அவர்களை தங்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தலாம் (Next Generation Prime Minstrerial Candidates) ஆனால் அந்தச் சூழ்நிலையை இப்போது கணிக்க முடியாது. அதற்குள் கூவத்தில் நிறைய தண்ணீர் (சாக்கடை என்று வாசிக்க) ஓடியிருக்கும்.

வாக்கெடுப்பின் முடிவுகள்:

பதிவான வாக்குகள்: 481

மன்மோகன் சிங்: 167 (34%)
பிராணப் முகர்ஜி: 7 (1%)
ராகுல் காந்தி: 40 (8%)
அத்வானி 150 (31%)
நரேந்திர மோடி 34 (7%)
மாயாவதி 8 (1%)
ஜெயலலிதா 23 (4%)
இவர்களில் எவரும் இல்லை 52% (10)

வாக்குப் பதிவு முடிந்த தேதி 19/2/09 12:17

கூட்டணிகள் உறுதிப்பட்டு, பிரசாரங்கள் சூடு பிடித்த பின்னர், தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதே கேள்வியை மீண்டும் முன் வைத்து வாக்கெடுப்பு நடத்த எண்ணியுள்ளேன்

இதே போல வேறு சில கேள்விகளை முன் வைத்தும் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.

இலங்கைப் பிரசினை தேர்தலின் போது மறக்கடிக்கப்பட்டுவிடுமா?

இலங்கைப் பிரசினை தேர்தலின் போது மறக்கடிக்கப்பட்டுவிடுமா?என்ற கேள்வி மீதான வாக்கெடுப்பு பிப்ரவரி 10ம் தேதி இந்திய நேரம் காலை 6:09க்குத் துவங்கியது பிப்ரவரி 16ம் தேதி மாலை 4:48 வரை வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இலங்கைப் பிரசினை காங்கிரசிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை வாக்களித்தவர்கள் உரத்த குரலில் சொல்லியிருக்கிறார்கள்.(59%)

வாக்கெடுப்பின் முடிவுகள்:

பதிவான வாக்குகள் 176

காங்,கிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்: 104 (59%)
விஜயகாந்த் வளர்ச்சியைப் பாதிக்கும்: 14 (7%)
மறக்கடிக்கப்பட்டுவிடும் 58 (32%)

கட்சிகளின் தேர்தல் நிதி வசூல்

கட்சிகளின் தேர்தல் நிதி வசூல் பற்றியும் ஒரு கேள்வி வாசகர்கள் முன் வைக்கப்பட்டது. அது குறித்த வாக்கெடுப்பின் விவரங்கள்:

பதிவானவை 79
கட்சிகளின் தேர்தல் நிதி வசூல்:

வெளிப்படையாக இருக்க வேண்டும்: 31 (39%)
தடைசெய்யப்படவேண்டும் : 29 (36%)
உச்ச வரம்பு வேண்டும் 19 (24%)
வரி விதிக்கப்பட வேண்டும் 34 (43%)

ஏன் இந்தத் தனிப்பதிவு?

இந்த வாக்கெடுப்பின் முடிவுகள்தான் Side Barல் இருக்கின்றனவே, எதற்கு தனியாக ஒரு பதிவு என நீங்கள் கேட்கலாம். இனி வரும் வாக்கெடுப்புக்களுக்கு இடமளிக்கும் வகையிலும், லேஅவுட் அடைசலாக மாறுவதைத் தவிர்க்கும் பொருட்டும் பழைய வாக்கெடுப்புக்களை அகற்றத் தீர்மானித்திருக்கிறேன். அதே நேரம் அந்தத் தகவல்கள் சேமிக்கப்பட வேண்டும் என்பதால் இந்தத் தனிப் பதிவு

இந்தத் தனிப்பதிவு வெளியான பின் இரு தினங்கள் வரை Side Barல் இந்த வாக்கெடுப்பின் விவரங்கள் தொடர்ந்து இடம் பெறும். எவரேனும் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு. இரு தினங்களுக்குப் பின் அந்த 'மூட் மீட்டர்'கள் சைட்பாரிலிருந்து அகற்றப்படும்.

-மாலன்

No comments: