Showing posts with label கூட்டணி. Show all posts
Showing posts with label கூட்டணி. Show all posts

Friday, March 06, 2009

Uttar Pradesh Alliances: உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு

முந்தைய பதிவுகள்:
1. உ.பி.: முலாயம் சிங் யாதவ்-ன் பிஜேபி கூட்டு

2. முலாயம் சிங் யாதவ்: 'கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !'

3. 'காங்கிரஸ் பிச்சை கேட்காது'

4. சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை, அறிவித்து இருக்கிறது. சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தில் காங்கிரசும், முலாயம் சிங்கின் சமாஜ்வா‌தி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கா‌ங்‌கிர‌ஸ் கேட்டது. ஆனால் அ‌ந்த தொகுதிகளை கொடுக்க சமாஜ்வா‌தி முன்வராததா‌ல் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்த நிலையில் ‌திடீரான சமா‌ஜ்வாடி க‌ட்‌சி 62 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

இந்தி நடிகர் ராஜ் பப்பரின் பெயரும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. அவர் பதேபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நடிகை நூர் பானு, ராம்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குரேஷி, பருக்காபாத் பாராளுமன்ற தொகுதியிலும், சஞ்சய் சிங் சுல்தான்பூரிலும் களம் இறங்குகிறார்கள்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய் சிங் கூறுகையில், "உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி சமாஜ்வா‌தி கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. எங்கள் கதவு திறந்தே இருக்கிறது'' என்றார்.

Thursday, March 05, 2009

India Therdhal: தமிழ்ப் பதிவுகளில் இந்தியத் தேர்தல்

சமீபத்தில் கவனத்தை ஈர்த்த பதிவுகள்:

முதற்கண் மேற்கோள்

நான் வாக்களிக்கறவன்(ள்) ஜெயிக்கணும்னு நினைக்கறது வேற. ஜெயிக்கறவனுக்கு என் வாக்கு போகணும்னு நினைக்கறது வேற. - பத்ரி

~oOo~

உண்மைத்தமிழன் கிசுகிசுக்களையும் கூட்டணி கணக்குகளையும் ஹேஷ்யங்களையும் கொடுக்கிறார்: தேர்தல் ஸ்பெஷல்: இன்றைய அரசியல் நிலவரம் - 04-03-2009

ஒரு வதந்தி:

குலாம்நபி ஆசாத் இன்னொரு திருப்பமாக விஜயகாந்தை தங்களது கூட்டணிக்கு வரும்படி அழைத்துள்ளார். விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தையும் நடந்தேறியதாக டெல்லி வட்டாரத் தகவல். 7 தொகுதி கேட்டு 5 உறுதியாகியுள்ளதாம். கூடவே ஒரு தொகுதிக்கு '2 சி' என்று தேர்தல் நிதியும் தரப்படுமாம்.

ஒரு நிதர்சனம்:

பா.ம.க.வின் நிலைமை திரிசங்கு சொர்க்கம்தான். இந்த முறை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக என்று தனித்து நிற்க வேண்டி வரலாம் என்கிறார்கள்.

~oOo~

அமெரிக்காவிற்கு மட்டும்தான் மாற்றம் என்னும் தாரக மந்திரம் வேலை செய்ய வேண்டுமா?

தமிழகத்திற்கு மாற்றம் கோரும் பதிவு பார்த்தேன்.

அமெரிக்காவில் டெமொக்ரட்சும் ரிபப்ளிகன்சும் அல்லாத க்ரீன் கட்சி (பசுமைத் தாயகம்?) போல் நிறைய மாற்று சித்தாந்தத்தை வலியுறுத்தும் முன்னணிகள் இருக்கின்றன.

தேர்தல் புறக்கணிப்பு அவசியமா? மாற்றம் சாத்தியமா?
கருணாநிதியாகட்டும், காங்கிரஸாகட்டும், அதிமுகவாகட்டும் - ஈழப்பிரச்சினை பற்றியெறியும் போதும் , நமது தொப்புள் கொடி உறவுகள் குண்டடி பட்டுச் சாகின்ற போதும் கவலையொன்றுமின்றி கூட்டணிக் கணக்குகளை போடுகிறார்கள்.

இன்னமும் தமிழுணர்வு கொண்ட கட்சிகளாக நாம் நம்பும் மதிமுக , பாமக , வி.சிறுத்தைகள் ஆகட்டும் , தேர்தல் என்று வந்தவுடன் சீட்டுக்களுக்காக தாம் போட்ட கோசத்தை மறந்து எத்தனை சீட்டு என்று பேரம் பேச ஆரம்பித்துவிட்டன. விஜயகாந்த் பற்றியோ , சரத்குமார் பற்றியோ பேசி பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை.

குழலி, மதிபாலா, தமிழ் சசி, கார்த்திக்ராமஸ் மற்றும் மாற்றம்நம்பி ஆகியோர் தமிழகத்தில் வலுவான மூன்றாவது அணிக்கான தேவையையும், எவ்வாறு அதை அமைப்பது என்பன குறித்தும் கட்டுரை எழுதியுள்ளார்கள்.

~oOo~

ஆந்திராவில் 'மாற்றம் கொண்டுவருகிறேன்' என்று தெலுங்கு தேச சந்திரபாபு நாயுடுவிற்கும் காங்கிரஸ் ராஜசேகர ரெட்டிக்கும் மாற்றாக களத்தில் குதித்த சிரஞ்சீவிக்கு பொதுவான கட்சி சின்னம் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் மூன்றாம் அணியாக வரமாட்டார் என்று சந்தேகிக்கப்படும் ரஜினியின் நிலை என்னவென்று ஆர். முத்துக்குமார் சொல்கிறார்: இந்தியா 360 டிகிரி

தேர்தல் பிரசாரத்தில் ரஜினி!
கலைஞர்: இப்போ கேப்டனு, பைலட்டு, டிரைவருன்னு ஏகப்பட்ட பொடிப்பசங்க வந்து பாலிடிக்ஸ் பண்றானுங்க!

ஜெயலலிதா: யெஸ்.. நீங்க பிரசாரம் பண்ண்ணும்.. பட்.. எனக்கு இல்ல.. கருணாநிதி கூட்டணிக்கு.. (என்று ஜெ சற்று நிறுத்த, ரஜினி ஆச்சர்யமாகப் பார்க்கிறார்)

~oOo~

ஜெயலலிதா, ரஜினி என்றால் குட்டிக் கதை வேண்டுமே. அக்னி பார்வை சொல்கிறார்: தேர்தல் 2009

லோக் சபாவா? லொள்ளு சபாவா

ஒருவர் தன் வீட்டில் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அதை வீட்டின் வேலைகளை செய்ய பழக வைத்தார். குரங்கு எந்த வேலையை நன்றாக செய்தாலும் சரி பிரம்பால் ஒரு அடி விழும்.

ஒரு நாள் தன் நண்பரை, தன் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்தார். நண்பர் வந்ததும்,
குரங்கிடம் நாற்காலி போட சொன்னார்; ஒழுங்காக போட்டது ஒரு பிரம்படி.

தண்ணீர் கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்தது; ஒரு பிரம்படி.

விசிறி கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்த்து; ஒரு பிரம்படி.

நண்பருக்கு சற்று கோபம் வந்தது. 'அது தான் ஒழுங்காக வேலை செய்கிறதே, பின்பு ஏன் பிரம்பால் அடிக்கிறாய்? விடு! அது ஒழுங்காக நடந்துக்கொள்ளும். அடிக்காதே' என்றார். அவரும் ஒப்புக்கொண்டார்.

பின்பு மதிய நேரம் குரங்கை இலை போட சொன்னார். இலை போட்டது ஆனால் அடி விழவில்லை.அது இலையை மெதுவாக பிராண்டியது. அடி விழவில்லை. சாம்பார் சட்டிக்குள் கை விட்டு சிரித்தது, அடி விழவில்லை. மோரை எட்டி உதைத்து அடி விழவில்லை. பொறுத்து பார்த்தவர், அடுத்த அது செய்த வேலைக்கு பிரம்படி கொடுக்க ஆரம்பித்தார், குரங்கு வழிக்கு வந்த்து.

இந்த கதை தான் போது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும். அவர்களை மக்கள் கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால்..

~oOo~

'தேவையா இப்படி ஒரு பட்டன்?' கேட்டதிற்கு பதிலாக எம் எஸ் வி முத்து எழுதுகிறார்: குர‌ல்வ‌லை

தேர்தல் நடத்தி விட்டால் ஜனநாயகமா?

ஓட்டுப் போட்டாலே நம்ம ஊர் அரசியல்வாதிங்க ஒன்னும் செய்யறதில்ல. இதில பாரம் வாங்கி பூர்த்தி செய்து ஓட்டுப்போட மாட்டேன்னு எழுதிக்கொடுத்தா, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருவாங்க.

நான் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது ரகசியமாக வைக்கப்படுவது போலவே, நாம் ஓட்டுப்போடலை என்பதையும் ரகசியமாக வைக்கவேண்டாமா?

யாருக்கு அதிக ஓட்டோ அவர் தானே வெற்றி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும்? யாருக்குமே டெபாஸ்ட் கிடைக்கலன்னா?

மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். நம் வரிப்பணம் தான் விரயம் ஆகும்.

~oOo~

அதனால் தேர்தலே வேண்டாமா? 'இந்தியா ஒளிர்கிறது' என்று பத்தாண்டு(தானே?) முன்பு பாஜக சொன்னது போல், 'ஜெய் ஹோ' என்று காங்கிரஸ் பல்லவி பாடுவது போல் பிரதிபா பட்டீல் ஆட்சி, கவர்னர் பர்னாலா அரசு என்று செட்டில் ஆகிவிடலாமா என்னும் கேள்விகள் வெங்கடேஷின் பதிவில் தொக்கி நிற்கின்றன: தேர்தல் நெருங்கிவிட்டது

பொருளாதார சரிவு நிலையில் இச்செலவு தேவையா?

ஏற்கனவே, தமிழக அரசு, இந்தத் தேர்தலை மனத்தில் வைத்துத்தான், வெள்ள நிவாரண நிதி என்று ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 2000 வழங்கியிருக்கிறது. இன்னும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அதை முழுமையாகக் கொடுப்பதற்கு முன்பு, குறிப்பட்ட தொகையை முன்பணமாகவும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

~oOo~

ஏப்ரல் 16-ல் மக்களவை தேர்தல் குறித்து உயிரோசையில் மனோஜ்:

ஜனநாயகமும் பணவிரயமும்

  • வரும் மக்களவைத் தேர்தலில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும்.
  • மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 1300 கோடி செலவிடப்படும்.
  • மத்திய, மாநில அரசுகள் தனியாக ரூ. 700 கோடி செலவு செய்யும். (போட்டோ ஐ.டி. கார்டு, எலெக்ட்ரானிக் ஓட்டு மெஷின்கள் போன்றவற்றுக்காக).
  • தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் ரூ. 1650 கோடி செலவு செய்யும்.
  • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா மட்டும் ரூ. 1000 கோடி வரை செலவு செய்யும்.
  • வாக்காளர்களுக்கு பணம் வழங்க அரசியல் கட்சிகள் செலவு செய்யும் தொகை ரூ. 2500 கோடியை தொடும்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவானது.


~oOo~

கடைசியாக அருள்வாக்கு

Election prediction of the day: அடுத்த பிரதம மந்திரியாக மாயாவதி பதவியேற்பார். கம்யுனிஸ்ட்கள் அமைச்சரவையில் இடம்பெற்றும் காங்கிரஸ் வெளியில் இருந்தும் ஆதரவு தரும்.

Friday, February 20, 2009

ஜெயலலிதாவின் காங்கிரஸ் கலாட்டா

-நாராயணன்

நேற்று ஜெயலலிதா பகிரங்கமாக காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ”திமுக வினை யாராலும் காப்பாற்ற முடியாது, திமுகவோடு சேர்ந்து காங்கிரஸும் முழுகவேண்டியதுதான்.யார் யாரெல்லாம் அதிமுகவோடு சேர்கிறார்களோ அவர்களே ஜெயிப்பார்கள்”. இதனை காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஏற்கவில்லை. திமுகவோடு காங்கிரஸின் உறவு நீடிக்கும் என்று சொல்லிவிட்டார். கம்யுனிஸ்டுகளுக்கு இந்த தடாலடி பல்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இது ஒரு வழக்கமான தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது.ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு வேறு. இப்போது காங்கிரஸின் வேலை தமிழகத்தில் எளிதாகி விட்டது. வழக்கமாக கருணாநிதி காங்கிரஸுக்கு குறைவான இடங்களும், பிற கட்சிகளுக்கு ஒரிரு இடங்களும், மற்றவர்களுக்கு இதயத்தில் இடமும் கொடுப்பார். இப்போது கதையினை ஒரளவிற்கு திருப்பியாகிவிட்டது. இப்போதிருக்கும் மாநில ஆட்சியே ஒரு கூட்டணி ஆட்சி என்பதாலும், ஏற்கனவே மாநிலத்தில் பங்கு வேண்டும் என்று ஒரு சாரார் கேட்டு கொண்டிருப்பதும், கருணாநிதி சோனியாவிடம் சமாதானம் பேசி சமன் படுத்துவதுமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அழைப்பு முக்கியமானதாகிறது. இந்த அழைப்பினை காங்கிரஸ் ஏற்காவிட்டாலும் கூட, தமிழக காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. மேலும், இது தொகுதி உடன்பாடு பேசும்போது காங்கிரஸின் கையினை மேலே நிற்க வைக்கும், இதன் மூலம் ஒருவிதமான கசப்புணர்வு தொண்டர்கள் மத்தியில் உருவாகலாம். தான் சேராவிட்டாலும், நம்பகத்தன்மையினை குலைக்கும்விதத்தில் இது திமுக-காங்கிரஸ் தொண்டர்களுக்கு பரப்பப்படும்.

தமிழகத்தின் 40 தொகுதிகள் காங்கிரஸுக்கு மிக முக்கியமானவை. ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு சேரும் பட்சத்தில் ஜெயலலிதா மூன்றாவது அணியினை விட்டு கழண்டுவிடுவார். அப்படி கழண்டால், தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து வரும் ஆதரவினை விலகி கொள்ள சொல்வார். ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு இணையும் பட்சத்தில், பாமகவும் இடம் மாறலாம். ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் பாமகவும் - திமுகவும் நேரெதிர் நிலைகளில் இருக்கின்றார்கள். சூசகமாக அறிக்கையில் காங்கிரஸிற்கும் - அதிமுகவிற்குமிருந்த கடந்த கால உறவினை முன்னிறுத்தி பேசியவர், இந்நாளைய உறவினை கொண்டு என்ன சாதிக்கமுடியும் என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவினால் செயல்பட முடியாது என்பது ஒரளவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக ஆட்சியின் மீது இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் கடுங்கோவத்தில் இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், வந்த வரைக்கும் லாபம் என்று குளிர்காயும் நோக்கமே ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.

Thursday, February 19, 2009

முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு

"முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு" செய்தி பற்றி - ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 19.2.09 இதழ்.

தொகுதி பங்கீட்டு விஷயத்தில் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க ஏற்கனவே ஷரத் பவாருடன் இணக்கமாக பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் எஸ் பி தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் அடுத்த அஸ்திரமான -"பிஜேபி" கூட்டணிக்காக அவர் சொல்லும் நிபந்தனைகள்:

"ராமர் கோவில் கட்டும் எண்ணத்தை விட வேண்டும்; ஆர்டிகிள் 370 ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட வேண்டும்; "முஸ்லீம் எதிர்ப்பு" நிலையை விட வேண்டும். இதெல்லாம் பிஜேபி செய்தால் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள நாங்கள் தயார். வாஜ்பாயிடம், எங்களுடன் சேரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம்; இதே அழைப்பை அத்வானிக்கோ அல்லது வேறு எந்த பிஜேபி தலைவருக்குமோ விடுக்க தயார் - அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்." -

காங்கிரசுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க எஸ்.பி'க்க்கு இஷ்டம் இல்லை. 25 தொகுதிகளுக்கு கீழே இறங்கிவர காங்கிரஸ் தயாராக இல்லை. பல மாதங்களாக தொடரும் இந்த இழுபறி தொடரும் நிலையில், எஸ் பியின் பிஜேபி தந்திரம், தற்போது உ.பியில் ஆட்சியில் இருக்கும் பிஎஸ்பி'க்கு, எஸ் பி ஐ தாக்க நல்ல அஸ்திரமாக பயன்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், " எஸ் பி'யுடன் கூட்டா? சான்ஸே இல்லை" என்று சொல்லிவிட்டார். " தேர்தலுக்கு முன்னும் இல்லல - பின்னும் இல்லை - இதெல்லாம் ஒரு சதி," என்று திட்டவட்டமாக சொன்னதோடல்லாமல், " பிஜேபியின் எந்த தலைவராவது முலாயமிடம் எனக்கு தெரியாமல் அப்படியெல்லாம் பேசிவிட முடியுமா என்ன?" என்று ஒரு அதிரடியும் கொடுத்துள்ளார்.

என் 2 பைசா:

காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!!! போகாத ஊருக்கு வழி கேட்கும் முலாயமின் பூச்சாண்டி அதற்கு தெரியாதா என்ன?!

Tuesday, February 17, 2009

பைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்டி(?!!)

அத்வானி தான் பா.ஜ.கவின் பிரதம மந்திரி வேட்பாளர் என்று அறிவித்து, கூகிள் ஆட்வேர்ஸில் வேறு விளம்பரன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், என்.டி.ஏ காலத்து துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷிகாவத், முஷ்டியினை மடித்து கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.

ராஜ்நாத் சிங் மற்றும் இன்ன பிற தேர்தலையே சந்திக்காத நபர்கள் எல்லாம் கட்சியில் முன்னிலைப்டுத்த படுவதும், அத்வானி/வாஜ்பாயினை விட சீனியரான தன்னை யாரும் கண்டுகொள்ளாததும் இந்த முறைப்புக்கு காரணமாக இருக்கிறது.

ஏற்கனவே பெரியதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லாத பட்சத்தில் [ஸ்திரத்தன்மை, நாட்டின் பாதுகாப்பு] இப்போது பைரோன் சிங் ஷிகாவத் பேசி கொண்டிருக்கும், மாற்று பிரதம மந்திரி பேச்சு இன்னமும் பா.ஜ.க தொண்டர்களை பிளவுப் படுத்தும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பிண்ணணியில் தான் இது நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், பழமைவாத பாஜக தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இது அல்வா சாப்பிடுவது போன்ற தருணம்.

என்னத்தான், ராமர் கோயில் கட்டுவோம் என்று சவடால் விட்டாலும், அது கட்ட முடியாது என்பது பாஜக ஆட்சியில் இருக்கும்போதே தெளிவாக ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தெரிந்துவிட்டது. இப்போது மீண்டும் அந்த சவடாலை ஆரம்பிக்கும்போது அதை நம்ப அவர்கள் தயாராக இல்லை.

பாஜகவின் உள்கட்சி பூசல் பூதாகாரமாய் வெடித்தால், பெற போகும் கொஞ்ச நஞ்ச தொகுதிகளிலும் பாஜக பெரும் எதிர்ப்பையும் தோல்வியையும் சந்திக்குமென்று தோன்றுகிறது.

கேள்வி: நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பிரதமராக முடியுமா?

பார்க்க: ஹிந்துஸ்தான் டைம்ஸில் பங்கஜ் வோராவின் பத்தி.

இந்த பதிவு மறுவெளியீடு செய்யப்பட்டது.

Monday, February 16, 2009

சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு

"காங்கிரஸ் பிச்சை கேட்காது"
அம்ர்க்களம் ஆறு-2/உ.பி
(17.2.2009)
குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பதிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.

"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது இயலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன." என்றார் சிங்.

ஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.2.2009

அமர்க்களம் ஆறு-1/உ.பி


தேசியவாத காங்கிரஸ் தலைவர்
சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு


புதுடெல்லி, பிப்.16-

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில், "தற்போது, மன்மோகன் சிங்கை பிரதமராக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒருவேளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அல்லது எங்கள் கட்சியின் தலைவர் முலாயம் சிங் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் இரு கட்சிகளுமே ஒன்றுக்கொன்று எதிர்ப்பு தெரிவிக்காது'' என்றார்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரிபாதி, `சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையிலான உறவை மராட்டிய மாநிலத்தை தாண்டி வலுப்படுத்துவதற்காக சரத் பவாரும் அமர்சிங்கும் நடத்திய பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.
தினத் தந்தி பிப்-16
முன் வந்த செய்தி கீழே: (பிப்14)

அமர்சிங் அதிருப்தி

Saturday, 14 February, 2009 12:28 PM
.
புதுடெல்லி, பிப்.14: கல்யாண்சிங் உடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இந்த விவகாரத்தை சில காங்கிரஸ் தலைவர்கள் ஊதிப் பெரிதாக்கி வருவதாக சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தி யுள்ளார்.
.
சி.என்.என். ஐ.பி.என். தொலைக் காட்சியின் "டெவில்ஸ் அட்வகேட்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் பேட்டியளித்தார். அப்போது அவர், பிஜேபியிலிருந்து விலகியுள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்குடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்திருப்பதை சில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டு மென்றே ஊதிப்பெரிதாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

""பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் இருந்த கல்யாண் சிங் தலைமை யிலான அரசும்தான் காரணம். அப்படிப்பட்ட காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருக்கும்போது, தற்போது பிஜேபியை எதிர்க்கும் கொள்கை களைக் கொண்ட கல்யாண்சிங்குடன் ஏன் கூட்டணி வைத்துக்கொள்ளக் கூடாது'' என்று அமர்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நல்லுறவு நீடிப்பதாக அவர் தெரிவித்தார். காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக்கொண்டால் சமாஜ்வாதி கட்சிக்கு அரசியலில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதற்காக அந்தக் கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள விரும்ப வில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமர்சிங் அதனை மறுத்தார்.
உத்தரப்பிரதேசத்தில் தொகுதி பங்கீடு செய்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தை மற்றும் கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு எதிரான சிபிஐ வழக்கு ஆகியவை காரண மாகவே காங்கிரசுடன் சமாஜ்வாதி கட்சிக்கு கசப்புணர்வு ஏற்பட்டி ருப்பதாக கூறப்படுவதையும் அமர்சிங் நிராகரித்தார்.
-மாலைச்சுடர்- பிப் 14