Showing posts with label Advani. Show all posts
Showing posts with label Advani. Show all posts

Friday, March 06, 2009

BJP Strategy: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல்

பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 46 பா.ஜனதா வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்துடன் சேர்த்து, இதுவரை 166 வேட்பாளர்களின் பெயர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருக்கிறது.

இந்தப்பட்டியலில் பெரும்பாலோர் நடப்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மக்களவையில் பணத்தை கொண்டு வந்து காட்டிய 3 எம்.பி.க்களில் ஒருவரான பக்கான்சிங் குலாஸ்தேவும் (Fagan Singh Kulste) இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இதில்
  • கர்நாடகம் - 11 வேட்பாளர்கள்
  • சத்தீஸ்கர் மாநிலம் - 11
  • மத்தியப்பிரதேசம் - 12
  • ராஜஸ்தான் - 12
வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  • கர்நாடக மாநிலத்தின் தற்போதைய எம்.பி.க்கள் 9 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. 
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தற்போதைய எம்.பி.க்கள் 5 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப் பட்டுள்ளது.
  • மத்தியப்பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் தற்போதைய நாடாளு மன்ற உறுப்பினர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் 8 நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்தப்படுகின்றனர்.
வேட்பாளர் பட்டியல்
  • சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேசத்தின் விதிஷா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் நிறுத்தப்படு கிறார்.
  • அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தி (பெல்லாரி)
  • பொதுப் பணித்துறை மந்திரி சி.எம். உதாழியின் மகன் சிவ்குமார் உதாதி (ஹலேரி)
  • சுகாதாரத் துறை மந்திரி உமேஷ் கட்டியின் சகோதரர் ரமேஷ் கட்டி (சிக்கொடி)
  • கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ரெவு நாயக் பெலமகி (குல்பர்கா)
  • ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் சகோதரி யசோதரா ராஜே குவாலியர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • பிகானீர் தொகுதியின் உறுப்பினரான நடிகர் தர்மேந்திராவின் பெயர் இந்த பட்டியலில் இல்லை. தற்போது ரிசர்வ் தொகுதியாக உள்ள இது அர்ஜூன் மேக்வால் என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுவார்.
  • ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் ஜலவார் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங் பார்மர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • முன்னாள் மந்திரி பக்கன் சிங் லோவ்தே (மண்டியா)
  • அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கின் சகோதரர் லட்சுமண் சிங் (ராஜ்கார்)
  • பா.ஜனதா கட்சி யின் பொதுச்செயலாளர் தவார் சந்த் கெலாட் (டெவாஷ்)
  • முன்னாள் மத்திய மந்திரி சத்யநாராயண் ஜடியா (உஜ்ஜயினி)

பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் வெங்கையா நாயுடு, அருண்ஜேட்லி ஆகியோர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவ தில்லை என்றும், அவர்கள் கட்சியின் தேர்தல் பணிகளை கவனிப்பார்கள் என்றும் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தற்போது ராஜ்யசபா எம்.பி.களாக இருந்து வருகின்றனர்.

அருண் ஜேட்லி
  • பீகார்,
  • உத்தரபிரதேசம்,
  • டெல்லி,
  • பஞ்சாப்,
  • சண்டிகார்
ஆகிய மாநிலங்களின் தேர்தல் பணிகளை பார்த்துக்கொள்கிறார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பொறுப்புகளையும் அருண்ஜேட்லி கவனித்துக் கொள்கிறார்.

சுஷ்மா சுவராஜ்
  • மத்திய பிரதேசம்,
  • சட்டீஸ்கர்,
  • ஜார்கண்ட்
மாநிலங்களின் தேர்தல் பொறுப்புகளையும்

சாந்த குமார் மற்றும் பகத்சிங் கொசூரி
  • ஜம்முகாஷ்மீர்,
  • இமாச்சல் பிரதேசம்,
  • உத்தரகாண்ட்,
  • அரியானா
மாநிலங்களின் தேர்தல் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
  • குஜராத்,
  • மகாராஷ்டிரா,
  • கோவா,
  • டையூ,
  • டாமன் உள்ளிட்ட மேற்கு மண்டல மாநிலங்களின்
தேர்தல் பொறுப்புகளை கவனித்துக்கொள்கிறார்.

ஒரிசா மாநில தேர்தல் பொறுப் பாளராக வி.சதீஷும், ராஜஸ்தானைச் சேர்ந்த கட்சி தலைவர் சவுதன்சிங், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாமில் தேர்தல் பொறுப்புகளை பார்த்துக் கொள்கின்றனர்.

முந்தைய செய்தி: நாராயணன்: பாஜகவின் தேர்தல் முகங்கள்

Tuesday, March 03, 2009

ரஜினிகாந்த் கடிதம்: யாருக்கு என் ஆதரவு

நன்றி: மக்களவைத் தேர்தல் 2004

ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது அது பாராளுமன்றத் தேர்தல் ஆகட்டும் அல்லது சட்டமன்றத் தேர்தல் ஆகட்டும் என்னுடைய ஆதரவு யாருக்குஇஅதாவது என்னுடைய வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது.

இந்த முறையும் அந்த கேள்வி எழுந்துள்ளது.
நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். பல காரணங்களுக்காக இந்த பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. 
 ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். என் அன்பார்ந்த தமிழக மக்களே, இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்சினை தண்ணீர் பிரச்சினை. ஏழைகளிலிருந்து பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக்கொண்டிருப்பது தண்ணீருக்காக.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் இந்த கடுமையான பிரச்சினை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்தை நீக்க இந்த ஒரே வழிதான். குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப்போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் எல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்துவரும் எந்த ஜீவநதியும் இல்லை.

நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயம். மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும். நான் இந்த ஒரு மாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களை சுற்றி வந்தேன். எனக்கு ஒன்று நேரிடையாக தெளிவாக தெரிந்தது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்க போகிறதோ எனக்கு தெரியாது.
ஆனால், இந்த தேர்தலில் மத்தியில் அமரப் போவது (பாஜக) வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசுதான். இது உறுதி.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய நாட்டின் முக்கியப் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசின் தேர்தல் அறிக்கையில் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள்.

திரு. அத்வானி அவர்களே அதை செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதை செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆக, இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணிக்குத்தான் என் ஓட்டு.

தமிழக மக்களே, அன்பான ரசிகர்களே, மறுபடியும் சொல்கிறேன். இது எந்த கூட்டணிக்கும் என் ஆதரவு அல்ல. இது என் ஓட்டு மட்டும்தான். இதற்காக தமிழக மக்களையோ, என் ரசிகர்களையோ நான் ஓட்டு போடும் கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன். நான் இந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவதாலே என் ரசிகர்களும், இந்த கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பல கட்சிகளில் இருக்கிறீர்கள்இ உங்களின் ஓட்டு உரிமையை நான் பறிக்க மாட்டேன்.

ஆனால் சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே குறிப்பாக தாய்மார்களே, இளைஞர்களே, மாணவஇமாணவிகளே, படித்தவர்களே, நீங்கள் ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்போட போகும்போது நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை தண்ணீ வேணும்னு ஓட்டு போட போறீங்களா? நீங்களே முடிவு பண்ணுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தியுங்கள். செயல்படுங்கள்.

வாழ்க தமிழக மக்கள்! வளர்க தமிழ்நாடு!

நதிகள் இணையட்டும்! இந்தியா ஒளிரட்டும்!

- ஜெய் ஹிந்த்.

Thursday, February 26, 2009

வாயில்லாப் பூச்சி எம்.பி.க்கள்

எம்.பி.யாக தேர்ந்தெடுப்பது
  • விவாதத்தில் பங்கெடுக்கவும், 
  • கேள்வி நேரத்தில் தொகுதிக்காக கவன ஈர்ப்புக் கோரவும், 
  • கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும்
குரல் கொடுக்க என்பதை அறியாதவர்கள் சட்டசபையை நிறைத்து இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசவே பேசாத மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல்:
  1. இந்தி  நடிகர் தர்மேந்திரா - பிக்கானெர்
  2. கன்னட நடிகர் அம்பரீஷ் - காங்கிரஸ்: மான்டியா
  3. Biren Singh Engti
  4. Manikrao Hodlya Gavit  
  5. மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா
  6. Baliram Kashyap - பாஜக
  7. Sohan Potai - பாஜக
  8. Somabhai Gandalal Koli Patel - பாஜக
  9. நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தெரிந்த சிவ சேனாவின் Prakash Paranjpe
  10. Beni Prasad Verma - சமாஜ்வாதி
  11. Saleem Iqbal Shervani - சமாஜ்வாதி
  12. Bhishma Shankar - பகுஜன் சமாஜ்
  13. Akbar Ahmad Dumpy - பகுஜன் சமாஜ்
  14. Kunwar Sarvraj Singh - ஜனதா தளம்
  15. Laxman Rao Pandurang Patil - NCP
மேலே சொன்னவர்கள் கொட்டாவி விட மட்டும் வாயைத் திறந்தார்கள். கூச்சல் போட மட்டும் டப்பிங் குரல் கொடுத்தார்கள்.

இவர்கள் வாயில்லாப் பூச்சிகள்.

ஆனால், வாக்களித்தவர்களுக்காக வாயைத் திறக்காதவர்கள் இன்னும் எக்கச்சக்கம். வக்கணையாக வாய் கிழிய விவாதங்களில் புஜபல பராக்கிரமத்தை நிலைநாட்டினாலும், சொந்தத் தொகுதிக்காக துறும்பைக் கூட கிள்ளிப் போடும் கேள்விகளை எழுப்பாதவர்களின் சாம்பிள்:
  • பாரதீய ஜனதாவின் பிரதம மந்திரி வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானி
  • காங்கிரசு தலைவி சோனியா காந்தி
  • இன்னாள் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா
இவர்களின் தொகுதியில் 'குறையொன்றுமில்லை போல!?
நாடாளுமன்றம் ஒரு நிமிடம் நடக்க எடுக்கும் செலவுத் தொகை: ரூபாய். 34,500/-

ஆங்கிலத்தில்: Just seen, never heard: 15 MPs who didn't speak

Thursday, February 19, 2009

முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு

"முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு" செய்தி பற்றி - ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 19.2.09 இதழ்.

தொகுதி பங்கீட்டு விஷயத்தில் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க ஏற்கனவே ஷரத் பவாருடன் இணக்கமாக பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் எஸ் பி தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் அடுத்த அஸ்திரமான -"பிஜேபி" கூட்டணிக்காக அவர் சொல்லும் நிபந்தனைகள்:

"ராமர் கோவில் கட்டும் எண்ணத்தை விட வேண்டும்; ஆர்டிகிள் 370 ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட வேண்டும்; "முஸ்லீம் எதிர்ப்பு" நிலையை விட வேண்டும். இதெல்லாம் பிஜேபி செய்தால் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள நாங்கள் தயார். வாஜ்பாயிடம், எங்களுடன் சேரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம்; இதே அழைப்பை அத்வானிக்கோ அல்லது வேறு எந்த பிஜேபி தலைவருக்குமோ விடுக்க தயார் - அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்." -

காங்கிரசுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க எஸ்.பி'க்க்கு இஷ்டம் இல்லை. 25 தொகுதிகளுக்கு கீழே இறங்கிவர காங்கிரஸ் தயாராக இல்லை. பல மாதங்களாக தொடரும் இந்த இழுபறி தொடரும் நிலையில், எஸ் பியின் பிஜேபி தந்திரம், தற்போது உ.பியில் ஆட்சியில் இருக்கும் பிஎஸ்பி'க்கு, எஸ் பி ஐ தாக்க நல்ல அஸ்திரமாக பயன்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், " எஸ் பி'யுடன் கூட்டா? சான்ஸே இல்லை" என்று சொல்லிவிட்டார். " தேர்தலுக்கு முன்னும் இல்லல - பின்னும் இல்லை - இதெல்லாம் ஒரு சதி," என்று திட்டவட்டமாக சொன்னதோடல்லாமல், " பிஜேபியின் எந்த தலைவராவது முலாயமிடம் எனக்கு தெரியாமல் அப்படியெல்லாம் பேசிவிட முடியுமா என்ன?" என்று ஒரு அதிரடியும் கொடுத்துள்ளார்.

என் 2 பைசா:

காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!!! போகாத ஊருக்கு வழி கேட்கும் முலாயமின் பூச்சாண்டி அதற்கு தெரியாதா என்ன?!

Tuesday, February 17, 2009

வலைப்பதிவிற்கு வந்திருக்கிறார் அத்வானி

இந்தத் தேர்தல் பிரதமர் வேட்பாளர் அத்வானியை வலைப்பதிவிற்கு அழைத்து வந்திருக்கிறது. அவர் முதல் பதிவு தொழில்நுட்பம் தேர்தல் பிரசாரத்தில்
எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுவைபட விவரிக்கிறது.

அத்வானி சொல்வது போல் பிரசாரத்தில் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறதா?

உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் எழுதுங்கள்



தேர்தல் பணி: துண்டுப் பிரசுரத்திலிருந்து இணையம் வரை

என் வலைப்பதிற்கு வருகை தந்துள்ள நண்பர்களே, வருக. இந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ள என் இளம் சகாக்கள், வலைப்பதிவில்லாத ஒரு
அரசியல் இணைய துறை (portal) கையெழுத்தில்லாத (மொட்டைக்) கடிதம் போல எனச் சொல்கிறார்கள். அவர்கள் கூற்றிலுள்ள மறுக்கவியலாத நியாயத்தை
நான் உடனே ஏற்றுக் கொண்டேன்.


இணையத்தை அரசியல் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள, குறிப்பாக தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற
யோசனை எனக்கு உற்சாகமளிக்கிறது.1952ல் நடைபெற்ற முதல் தேர்தலிருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பிரசாரகனாகவோ, வேட்பாளராகவோ பங்கேற்கும் ஒரு நல்வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், நான், தகவல் பரிமாற்றத்திற்கான கருவிகள் எப்படி பரிணாம வளர்ச்சி கண்டு வந்திருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறேன். தகவல் பரிமாற்றத்தைப்
பொறுத்தவரை நான் தொழில்நுட்பத்தின் பக்தனுமல்ல, அதை மறுப்பவனுமல்ல (technology-agnostic). இந்த விஷயத்தில் என் தத்துவம் ரொம்ப சிம்பிள்: பயன்படுகிறதா அது வரவேற்கத்தக்கது. அறுபதாண்டுகளுக்கு மேல் நீளும் என் அரசியல் வாழ்வில், ஒவ்வொரு புதிய தகவல் தொழில்நுட்பத்தையும்-ஆதிகாலத்து கேசியோ டிஜிட்டல் டைரி முதல் ஐ-பாட், ஐ-போன் வரை- நான் உற்சாகத்துடன் அரவணைத்துக் கொண்டிருக்கிறேன்.

முதல் பொதுத் தேர்தலின் போது 25 வயது இளம் அரசியல் ஆர்வலனாக, நான் பாரதிய ஜன சங் கட்சிக்கு ராஜஸ்தானில் பிரசாரம் செய்தேன். அதற்கு முந்தைய ஆண்டுதான் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி அந்தக் கட்சியை ஆரம்பித்திருந்தார்.

அப்போது ஒரு துண்டுப் பிரசுரம் அச்சிடுவது கூட ஓர் புதுமையாக இருந்தது. ஒரு சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது.

கோட்புட்லி என்ற இடத்தில் தேர்தல் வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்திருந்தது. அந்தப் பகுதியில் இருந்த
பிரசினைகளை அறிந்து கொண்டு, எங்கள் கட்சி வேட்பாளாரைத் தேர்ந்தெடுத்தால் கட்சி அந்தப் பிரசினைகளுக்கு எப்படியெல்லாம் தீர்வு காணும்
என்பதை விளக்கி ஒரு பிரசுரம் தயார் செய்து அச்சிட்டுக் கொண்டேன். ராஜஸ்தானிலிருந்து கட்சியின் தேர்தல் அறிக்கையின் பிரதிகளையும் எடுத்துக் கொண்டேன்

வாக்குப் பதிவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னாதாகத் தொகுதிக்குப் போய்விட்டேன். தேர்தல் முடியும்வரை அங்கேயே தங்கவும் முடிவு செய்திருந்தேன்.

ஜெய்ப்பூரிலிருந்து நான் கொண்டுவந்திருந்த பிரசுரங்களை இறக்கிக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த எங்கள்
வேட்பாளர் என்னை விநோதமாகப் பார்ப்பதைக் கவனித்தேன். அப்போது அவர் வயதில் பாதிதான் எனக்கு. ஆனால அவர் என்னை அத்வானிஜி என்று என்னை மரியாதையோடு அழைத்துச் சொன்னார்: "இவற்றையெல்லாம் நானும் என்
தொண்டர்களும் தொகுதியில் விநியோகிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? ஆனால் அதற்கான தேவை என்ன இருக்கிறது. இந்த அறிக்கை, இந்த பிரசுரம் இவற்றால் எல்லாம் நம் பிரசார உத்திக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.

இதை விநியோகிக்க நிறைய நேரம் செலவிட வேண்டும். நீங்கள் வற்புறுத்தினால் செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கு விழ இருக்கும் வாக்குகளை விட ஒரு ஓட்டுக் கூட கூடுதலாகக் கிடைக்காது" என்றார்.

"ஒரு விஷயம் சொல்லட்டுமா அத்வானிஜி" என்று கேட்டுவிட்டு அவர் தொடர்ந்தார். இந்தத் தேர்தலில் என்னை யாரும் தோற்கடிக்க முடியாது. இது குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி. இங்கு
போட்டியிடும் வேட்பாளர்களில் நான் ஒருவன் மட்டும்தான் குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவன்." அவர் அடுத்துச் சொன்ன வாக்கியம் இந்தியாவில் தேர்தல்களின் யதார்த்தம் குறித்து என் கண்களைத் திறந்தது. முதலில், வாக்குச் சாவடிக்குப் போகும் எந்தவொரு குஜ்ஜரும் எனக்குத்தான் வாக்களிக்கப் போகிறான். ஏனெனில் நான் ஒரு குஜ்ஜர். இரண்டாவதாக குஜ்ஜர் அல்லாதவர்களில்
பெரும்பான்மையானவர்களும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் அநேகமாக நான்தான் ஜெயிப்பேன் என அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தோற்கப் போகிற வேட்பாளருக்கு வாக்களித்து தங்கள் ஓட்டை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்" என்றார்.

பல ஆண்டுகளாக, அநேகமாக 1980 இறுதிவரை, நாளிதழ்கள், பத்திரிகைகள், அகில இந்திய வானொலி, இவைதான் அரசியல் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள இருந்த சாதனங்கள். அரசிற்கு சொந்தமானவை அல்ல என்பதால், அச்சு
ஊடகங்கள், சுதந்திரமானவையாகவும், காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுபவையாகவும் இருந்தன. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வானொலியை காங்கிரஸ் கட்சி கூச்சநாச்சமில்லாமல் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி வந்தது.எனக்கு
நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் 1982ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது வானொலி என்.டி.ராமராவின் பெயரைச் சொல்லவே இல்லை. ஆனால் அவர் அந்தத் தேர்தலில் அபார வெற்றி பெற்றார். அவரைப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள கவர்னர் அழைத்த போதுதான்
மக்கள் முதன்முதலாக வானொலியில் என்.டி.ராமராவ் பெயரைக் கேட்டார்கள்.

இந்திராகாந்தியின் எமெர்ஜென்சிக்காலக் கொடுங்கோல் ஆட்சி வீழ்ந்த பிறகு ஏற்பட்ட ஜனதாக் கட்சி ஆட்சியில் நான் செய்தி ஒலிப்பரப்புத் துறை அமைச்சராக இருந்த போது அரசு ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் மனோபாவத்தையும், அமைப்பையும் மாற்றும் பெரும் பொறுப்பை நான் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது எதிர்க்கட்சிகளுக்கும் தங்கள் கருத்தை மக்கள் முன் வைக்க வானொலியில்நேரம் ஒதுக்குவது என நான் எடுத்த முடிவு பெரிதும் வரவேற்கப்பட்டது. எனக்குப்
பெருமிதம் ஏற்படுத்திய முடிவு அது.


இணையத்திற்குப் பல சிறப்புகள் உண்டு.அவற்றில் முக்கியமானது அது அரசுக்கோ, அல்லது எந்தவொரு தனியார் ஊடகக் குழுமத்திற்கோ சொந்தமானதல்ல என்பதாகத்தானிருக்க முடியும்.அது எல்லோருக்கும் பொதுவானது. அந்தவகையில், இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த தகவல் பரிமாற்ற சாதனங்களிலேயே இதுதான் ஜனநாயகமானது என்ற பெருமைக்குரியது. அரசியில் செய்திகளைத் தணிக்கை செய்வது என்பது சாத்தியமற்றது மட்டுமல்ல, நினைத்துப் பார்க்கவும் முடியாதது (கம்யூனிஸ்ட் நாடுகள், சர்வாதிகார அரசுகள் நீங்கலாக)

1952ல் துவங்கிய இந்தியத் தேர்தல்கள் வெகுவாக மாறிவிட்டன.இந்திய
வாக்காளர்கள், ஒட்டு மொத்தமாகவும் சரி, தனியாகவும் சரி, முதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஓட்டுக்கு உள்ள சக்தி பற்றி ஜனநாயக ரீதியில் ஏற்பட்டிருக்கும் பிரஞ்கையும், விழிப்புணர்வும் அளவிடமுடியாத வண்ணம் வளர்ந்திருக்கின்றன.
எந்த ஒரு அரசியல்கட்சியும், எந்த ஒரு வேட்பாளரும் அவரைக் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட முடியாது. ஆட்சியில் இருக்கும் ஒரு அரசை வாக்காளர்கள் அதன் செயல் திறனைக் கொண்டு அளவிடுகிறார்கள். ஆட்சியைப் பிடிக்க எண்ணுபவர்களை அவர்களது சொல்வது தங்கள் எதிர்பார்ப்புகளோடு பொருந்திப் போகிறதா என எடை போடுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், கோட்புட்லியில் எங்கள் வேட்பாளர், அச்சிட்ட பிரசுரம் எல்லாம் தேவையில்லை என்று சொன்ன அந்த நாட்களை விட, இன்று, தேர்தல் பிரசார வெளியீடுகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியத்துவம்
பெற்றிருக்கிறது

கையால் ஈய எழுத்துக்களை அடுக்கிச் சிறிய அச்சகங்களில் (இவை இன்று அநேகமாக மறைந்து விட்டன) அச்சிடும் துண்டுப் பிரசுரங்களிலிருந்து என் சொந்தத் தளத்தில் வலைப்பதிவு எழுதுவதுவரை நானும் தேர்தல் பிரசாரத்திற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வெகு தூரம் வந்து விட்டேன்.

என் முதல் வலைப்பதிவைப் படிக்க உங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டதற்கு நன்றி. விரைவிலேயே இன்னொரு பதிவோடு வருவேன்.
அதுவரை நல்வாழ்த்துகள்.


அத்வானியின் வலைப்பதிவுகளைப் படிக்க:

http://blog.lkadvani.in/