தமிழ்நாட்டில் பல தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக மாற்றம் பெற்றிருக்கின்ற்ன. எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. இப்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ளவர்களில் சிலர் தொகுதி மாறிப் போட்டியிடக்கூடும் எனச் செய்திகள் உலவுகின்றன. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும், ஆ.ராசா நீலகிரித் தொகுதியிலும் மாறிப் போட்டியிடக் கூடும்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரகுபதி ஆகியோர் தொகுதி மாறிப் போட்டியிடக் கூடும்; சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள்; மணி சங்கர் ஐயருக்கு மீண்டும் மயிலாடுதுறைத் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் எனப் பல செய்திகள் உலவுகின்றன. இப்போது எம்.பி.களாக இருப்பவர்களில் செ.குப்புசாமி, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், சுகவனம், ராணி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது இன்றையத் தேதியில் இவை எல்லாம் ஊகங்களே.
தொகுதிப் பங்கீடு முடிய, வேட்பாளர் பட்டியல வெளியிடப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் ஒரு Quick Survey: (அருகில் உள்ள பெட்டிகளில் வாக்களியுங்கள்)
Download Eating the Alphabet
7 years ago

