Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Thursday, March 19, 2009

எம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் பல தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக மாற்றம் பெற்றிருக்கின்ற்ன. எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. இப்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ளவர்களில் சிலர் தொகுதி மாறிப் போட்டியிடக்கூடும் எனச் செய்திகள் உலவுகின்றன. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும், ஆ.ராசா நீலகிரித் தொகுதியிலும் மாறிப் போட்டியிடக் கூடும்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரகுபதி ஆகியோர் தொகுதி மாறிப் போட்டியிடக் கூடும்; சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள்; மணி சங்கர் ஐயருக்கு மீண்டும் மயிலாடுதுறைத் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் எனப் பல செய்திகள் உலவுகின்றன. இப்போது எம்.பி.களாக இருப்பவர்களில் செ.குப்புசாமி, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், சுகவனம், ராணி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது இன்றையத் தேதியில் இவை எல்லாம் ஊகங்களே.

தொகுதிப் பங்கீடு முடிய, வேட்பாளர் பட்டியல வெளியிடப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் ஒரு Quick Survey: (அருகில் உள்ள பெட்டிகளில் வாக்களியுங்கள்)

Sunday, March 08, 2009

Tamilnadu Therthal Gossips, Cartoons: 'சொல்றாங்க', கேலிச் சித்திரம் & ஊர் வம்பு

இரண்டு முத்து

நடிகர் மன்சூரலிகான்: "அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்."



கருணாநிதி: 'எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!'

இரண்டு கருத்துப் படம்



இரண்டு கிசுகிசு

  • தலைவரின் மருத்துவமனைக் காட்சிகளை வைத்து ஒரு பிரசாரப் படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதாம். அவர் ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை, இந்தக் காட்சிகளை வைத்துச் சரிக்கட்டும் முயற்சியாம்!
  • மத்திய உளவுத் துறை ஒரு ரகசிய சர்வே எடுத்தது. மத்திய ஆளுங்கட்சிக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு இருப்பதாகவும் இது தென் மாவட்டங்களில்தான் இன்னும் கூடுதல் என்றும் தெரிய வந்துள்ளது!

Wednesday, February 25, 2009

முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகல்

முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக எம்.எல்.ஏவுமான ராஜ.கண்ணப்பன் திமுகவை விட்டு விலகி விட்டார்.

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.

1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.

2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி வெளியானது.

திமுகவில் இருந்துகொண்டே தேமுதிக-வில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைவதாக முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர் தொகுதிகளில் உள்ள சாதி பலத்தால் அவருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்பும் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 183 தொகுதிகளில் எங்களை சார்ந்த மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தம்முடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.

கிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடியுமா?

நன்றி: வெப்துனியா | தட்ஸ்தமிழ் | தினமணி

Friday, February 20, 2009

ஜெயலலிதாவின் காங்கிரஸ் கலாட்டா

-நாராயணன்

நேற்று ஜெயலலிதா பகிரங்கமாக காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ”திமுக வினை யாராலும் காப்பாற்ற முடியாது, திமுகவோடு சேர்ந்து காங்கிரஸும் முழுகவேண்டியதுதான்.யார் யாரெல்லாம் அதிமுகவோடு சேர்கிறார்களோ அவர்களே ஜெயிப்பார்கள்”. இதனை காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஏற்கவில்லை. திமுகவோடு காங்கிரஸின் உறவு நீடிக்கும் என்று சொல்லிவிட்டார். கம்யுனிஸ்டுகளுக்கு இந்த தடாலடி பல்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இது ஒரு வழக்கமான தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது.ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு வேறு. இப்போது காங்கிரஸின் வேலை தமிழகத்தில் எளிதாகி விட்டது. வழக்கமாக கருணாநிதி காங்கிரஸுக்கு குறைவான இடங்களும், பிற கட்சிகளுக்கு ஒரிரு இடங்களும், மற்றவர்களுக்கு இதயத்தில் இடமும் கொடுப்பார். இப்போது கதையினை ஒரளவிற்கு திருப்பியாகிவிட்டது. இப்போதிருக்கும் மாநில ஆட்சியே ஒரு கூட்டணி ஆட்சி என்பதாலும், ஏற்கனவே மாநிலத்தில் பங்கு வேண்டும் என்று ஒரு சாரார் கேட்டு கொண்டிருப்பதும், கருணாநிதி சோனியாவிடம் சமாதானம் பேசி சமன் படுத்துவதுமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அழைப்பு முக்கியமானதாகிறது. இந்த அழைப்பினை காங்கிரஸ் ஏற்காவிட்டாலும் கூட, தமிழக காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. மேலும், இது தொகுதி உடன்பாடு பேசும்போது காங்கிரஸின் கையினை மேலே நிற்க வைக்கும், இதன் மூலம் ஒருவிதமான கசப்புணர்வு தொண்டர்கள் மத்தியில் உருவாகலாம். தான் சேராவிட்டாலும், நம்பகத்தன்மையினை குலைக்கும்விதத்தில் இது திமுக-காங்கிரஸ் தொண்டர்களுக்கு பரப்பப்படும்.

தமிழகத்தின் 40 தொகுதிகள் காங்கிரஸுக்கு மிக முக்கியமானவை. ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு சேரும் பட்சத்தில் ஜெயலலிதா மூன்றாவது அணியினை விட்டு கழண்டுவிடுவார். அப்படி கழண்டால், தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து வரும் ஆதரவினை விலகி கொள்ள சொல்வார். ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு இணையும் பட்சத்தில், பாமகவும் இடம் மாறலாம். ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் பாமகவும் - திமுகவும் நேரெதிர் நிலைகளில் இருக்கின்றார்கள். சூசகமாக அறிக்கையில் காங்கிரஸிற்கும் - அதிமுகவிற்குமிருந்த கடந்த கால உறவினை முன்னிறுத்தி பேசியவர், இந்நாளைய உறவினை கொண்டு என்ன சாதிக்கமுடியும் என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவினால் செயல்பட முடியாது என்பது ஒரளவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக ஆட்சியின் மீது இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் கடுங்கோவத்தில் இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், வந்த வரைக்கும் லாபம் என்று குளிர்காயும் நோக்கமே ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.