Showing posts with label உத்தரபிரதேசம். Show all posts
Showing posts with label உத்தரபிரதேசம். Show all posts

Friday, March 06, 2009

Uttar Pradesh Alliances: உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு

முந்தைய பதிவுகள்:
1. உ.பி.: முலாயம் சிங் யாதவ்-ன் பிஜேபி கூட்டு

2. முலாயம் சிங் யாதவ்: 'கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !'

3. 'காங்கிரஸ் பிச்சை கேட்காது'

4. சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை, அறிவித்து இருக்கிறது. சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தில் காங்கிரசும், முலாயம் சிங்கின் சமாஜ்வா‌தி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கா‌ங்‌கிர‌ஸ் கேட்டது. ஆனால் அ‌ந்த தொகுதிகளை கொடுக்க சமாஜ்வா‌தி முன்வராததா‌ல் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்த நிலையில் ‌திடீரான சமா‌ஜ்வாடி க‌ட்‌சி 62 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

இந்தி நடிகர் ராஜ் பப்பரின் பெயரும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. அவர் பதேபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நடிகை நூர் பானு, ராம்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குரேஷி, பருக்காபாத் பாராளுமன்ற தொகுதியிலும், சஞ்சய் சிங் சுல்தான்பூரிலும் களம் இறங்குகிறார்கள்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய் சிங் கூறுகையில், "உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி சமாஜ்வா‌தி கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. எங்கள் கதவு திறந்தே இருக்கிறது'' என்றார்.

Thursday, February 19, 2009

முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு

"முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு" செய்தி பற்றி - ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 19.2.09 இதழ்.

தொகுதி பங்கீட்டு விஷயத்தில் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க ஏற்கனவே ஷரத் பவாருடன் இணக்கமாக பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் எஸ் பி தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் அடுத்த அஸ்திரமான -"பிஜேபி" கூட்டணிக்காக அவர் சொல்லும் நிபந்தனைகள்:

"ராமர் கோவில் கட்டும் எண்ணத்தை விட வேண்டும்; ஆர்டிகிள் 370 ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட வேண்டும்; "முஸ்லீம் எதிர்ப்பு" நிலையை விட வேண்டும். இதெல்லாம் பிஜேபி செய்தால் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள நாங்கள் தயார். வாஜ்பாயிடம், எங்களுடன் சேரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம்; இதே அழைப்பை அத்வானிக்கோ அல்லது வேறு எந்த பிஜேபி தலைவருக்குமோ விடுக்க தயார் - அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்." -

காங்கிரசுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க எஸ்.பி'க்க்கு இஷ்டம் இல்லை. 25 தொகுதிகளுக்கு கீழே இறங்கிவர காங்கிரஸ் தயாராக இல்லை. பல மாதங்களாக தொடரும் இந்த இழுபறி தொடரும் நிலையில், எஸ் பியின் பிஜேபி தந்திரம், தற்போது உ.பியில் ஆட்சியில் இருக்கும் பிஎஸ்பி'க்கு, எஸ் பி ஐ தாக்க நல்ல அஸ்திரமாக பயன்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், " எஸ் பி'யுடன் கூட்டா? சான்ஸே இல்லை" என்று சொல்லிவிட்டார். " தேர்தலுக்கு முன்னும் இல்லல - பின்னும் இல்லை - இதெல்லாம் ஒரு சதி," என்று திட்டவட்டமாக சொன்னதோடல்லாமல், " பிஜேபியின் எந்த தலைவராவது முலாயமிடம் எனக்கு தெரியாமல் அப்படியெல்லாம் பேசிவிட முடியுமா என்ன?" என்று ஒரு அதிரடியும் கொடுத்துள்ளார்.

என் 2 பைசா:

காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!!! போகாத ஊருக்கு வழி கேட்கும் முலாயமின் பூச்சாண்டி அதற்கு தெரியாதா என்ன?!

Wednesday, February 18, 2009

"கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !"

அமர்க்களம் ஆறு-உ.பி/3
19.2.2009

முலாயம் சிங் யாதவின் கூற்று விஷமத்தனமானது, வதந்தியைப் பரப்புவதே அதன் நோக்கம் என்று பாஜக தெரிவித்துள்ளது. " சமாஜ்வாதியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்க கொஞ்சம்கூட வாய்ப்பில்லை." என்று பா.ஜ.க.துணைத் தலைவர் சையத் அபாஸ் நக்வி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இது போன்ற அறிக்கைகள் வாக்காளர்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டவை. சமாஜ்வாதிக் கட்சி, குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இழந்து விட்ட தனது முக்கியத்துவத்தை திரும்பப் பெற நினைக்கிறது என்றார் அவர்

பாஜகவுடன் கூட்டணி என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் காங்கிரசுடன் கூடுதலாகப் பேரம் பேசலாம் என்ற சமாஜ்வாதியின் நோக்கத்தை பாஜக முளையிலேயே கிள்ளிவிட்டது பாஜக.

முன்னர் வந்த செய்தி

தனது கட்சி பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று (புதன்கிழமை 18/2/09) அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமாஜ்வாதிக் கட்சியின் நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும் என்ற முலாயம் சிங், அந்த நிபந்தனைகள் என்ன என்று தெரிவிக்கவில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியையும், மூத்த தலைவர் வாஜ்பாயையும் இது குறித்துப் பேச சந்தித்ததாகத் தெரிவித்தார்.

காங்கிரசிற்கும் சமாஜ்வாதிக்க்குமிடையே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தி நிலவும் வேளையில் முலாயம் இவ்வாறு கூறியிருப்பது கவனத்திற்குரியதாகிறது

Tuesday, February 17, 2009

"காங்கிரஸ் பிச்சை கேட்காது"

தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அதை சமாஜ்வாதி கட்சி எதிர்க்காது எனத் தெரிவித்துள்ளது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பதிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.

"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது இயலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன." என்றார் சிங்.

ஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.2.2009