Wednesday, March 04, 2009

Tamil Nadu Therthal: தமிழக கம்யூனிஸ்ட் திமுக கூட்டணிக்கு செல்கிறதா?

1. BJP launches LS campaign from TN; Advani to speak in Nagerkovil:
தமிழகத்திலிருந்து பிரச்சாரம் தொடங்கும் அத்வானி

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன்:

நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தால் அவர்களை சேர்க்க தயாராக இருக்கிறோம்.

~oOo~

2. Regional News Headlines in Tamil - Yahoo! Tamil News:
கருணா‌நி‌‌தியுட‌ன் தா.பா‌ண்டிய‌ன் திடீர் ச‌‌ந்‌தி‌ப்பு

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை இ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் திடீரென் ச‌ந்‌தி‌த்து உட‌ல் நல‌‌ம் கு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்தா‌ர்.

~oOo~

3. TamilNadu News - Dinamani.com:  
தமிழகத்தில் 10 தொகுதிகளைப் பெற கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி

2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 தொகுதிகளில் போட்டியிட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • மதுரை, 
  • நாகர்கோவில் தொகுதிகளிலும், 
இந்திய கம்யூனிஸ்ட்
  • கோயம்புத்தூர், 
  • தென்காசி தொகுதிகளிலும் 
போட்டியிட்டு வெற்றி பெற்றன.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்
  • மதுரை, 
  • கன்னியாகுமரி, 
  • திருச்சி, 
  • கோவை, 
  • சிதம்பரம் 
உள்ளிட்ட 10 தொகுதிகளின் பட்டியலை அ.தி.மு.க.விடம் அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
  • நாகப்பட்டினம், 
  • தென்காசி, 
  • திருப்பூர், 
  • கிருஷ்ணகிரி, 
  • விருதுநகர், 
  • வடசென்னை 
உள்ளிட்ட 10 தொகுதிகளின் பட்டியலை அளிப்பது என அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்பினாலும், அக்கட்சிகள் 6 இடங்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்றும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை தலா 3 தொகுதிகள் வழங்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

~oOo~

4. Chiranjeevi file case against EC:
பொது சின்னம் இல்லை-குழப்பத்தில் சிரஞ்சீவி

சிரஞ்சீவி துவக்கிய பிரஜா ராஜ்யம் முதன் முறையாக நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. இதையடுத்து தனது கட்சிக்கு பொது சின்னம் வேண்டும் என்றும், அதை ரயில் சின்னமாக தரும்படியும் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார்.

பொது சின்னம் கிடைக்காததை அடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய நிலை.

~oOo~

5. TamilNadu News - Dinamani.com:  
சோனியாவை திட்டியதை மறந்துவிட்டார்களா? - கருணாநிதி

"15 தொகுதிகள் வேண்டும்' என்று தமிழக காங்கிரசார் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதிடம் வற்புறுத்திய செய்திக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: Cadres should Work for DMK-Cong win: Karunanidhi, திமுக- காங். கூட்டணி: "உடல் எல்லாம் மூளை, சிந்தனை, வஞ்சனை: கருணாநிதி"

~oOo~

6. Sivagami IAS to contest in Kanyakumari constituency:
கன்னியாகுமரியில் சிவகாமி ஐஏஎஸ் போட்டி

மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி போட்டியிடுகிறார். சிவகாமியின் கணவரின் சொந்த ஊரான கற்காடு கிராமம் இந்தத் தொகுதியில் தான் உள்ளது.

கடந்த தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியுடன் இருந்தது. இப்போது தொகுதி மறுவரையின்படி நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 40,000 தலித் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இந்த தொகுதிக்குள் அடங்கிய
  • நாகர்கோவில், 
  • குளச்சல், 
  • பத்மநாபபுரம், 
  • விளவங்கோடு, 
  • கிள்ளியூர் 
ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் தலித் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

No comments: