Showing posts with label சோனியா. Show all posts
Showing posts with label சோனியா. Show all posts

Friday, March 06, 2009

Uttar Pradesh Alliances: உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு

முந்தைய பதிவுகள்:
1. உ.பி.: முலாயம் சிங் யாதவ்-ன் பிஜேபி கூட்டு

2. முலாயம் சிங் யாதவ்: 'கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !'

3. 'காங்கிரஸ் பிச்சை கேட்காது'

4. சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை, அறிவித்து இருக்கிறது. சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தில் காங்கிரசும், முலாயம் சிங்கின் சமாஜ்வா‌தி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கா‌ங்‌கிர‌ஸ் கேட்டது. ஆனால் அ‌ந்த தொகுதிகளை கொடுக்க சமாஜ்வா‌தி முன்வராததா‌ல் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்த நிலையில் ‌திடீரான சமா‌ஜ்வாடி க‌ட்‌சி 62 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

இந்தி நடிகர் ராஜ் பப்பரின் பெயரும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. அவர் பதேபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நடிகை நூர் பானு, ராம்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குரேஷி, பருக்காபாத் பாராளுமன்ற தொகுதியிலும், சஞ்சய் சிங் சுல்தான்பூரிலும் களம் இறங்குகிறார்கள்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய் சிங் கூறுகையில், "உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி சமாஜ்வா‌தி கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. எங்கள் கதவு திறந்தே இருக்கிறது'' என்றார்.

Saturday, February 21, 2009

அதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி

தில்லியிலிருந்து ரேணு மிட்டல்

அரசியல் என்பது சாத்தியமாவதைச் செய்யும் கலை.அரசியலில் நிரந்த பகைவர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை. தெற்கே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் எதையாவது சுட்டிக் காட்டுகின்றன என்றால் அது அரசியல் கூட்டணிகளில் எத்தகைய பிரிவும் கூட்டும் சாத்தியங்கள்தான்-அதுவும் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்- என்பதைத்தான்.

ஜெயலலிதாவின் அதிமுகவோடு உறவைப் புதுப்பித்துக் கொள்ள சோனியா விரும்புகிறார் என கூறப்படுகிறது

ஜெயலலிதா காங்கிரசிற்கு பகிரங்கமாக விடுத்த அழைப்பு, ஒரு மூத்த அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்தான் என்று கட்சியில் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிகிறது.

இரண்டு கட்சிகளுக்குமிடையே கூட்டணி என்ற யோசனையுடன் ஜெயலலிதாவை சந்திக்க நம்பிக்கைக்குரிய ஒருவரை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஜெயலலிதா அந்த யோசனையை வரவேற்றதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரசுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதில் தனக்கு ஏதும் தயக்கமில்லை என பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் முன் வந்தார்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுகவுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் காத்துள்ளது. திமுகவுடன் கூட்டைத் தொடர்வது தற்கொலைக்குச் சமம் என்றும், குறிப்பாக கருணாநிதியின் உடல் நலம் பலவீனமடைந்து வரும் நிலையில் அவரால் தேர்தல் பிரசாரத்திற்கு வர இயலாத சூழ்நிலை இருப்பதையும் எடுத்துச் சொல்லி சிதம்பரம் சோனியாவை இந்த யோச்னைக்கு சம்மதிக்க வைத்து விட்டார் எனச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவுடனான கூட்டணியை எதிர்த்து காங்கிரசிலிருந்து மூப்பனார் வெளியேறி, தனிக்கட்சி கண்ட போது மூப்பனாருடன் சிதம்பரமும் வெளியேறினார் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றூ நிலைமை மாறிவிட்டது.

குலாம் நபி ஆசாத்தை தமிழ்நாடு காங்கிரசின் விவகாரங்களைக் கவனிக்கும் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது அதிமுகவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவிரும்புவதன் இன்னொரு அடையாளமாகக் கொள்ளலாம். அதிமுகவுடன் அவருக்கு நல்ல உறவு உண்டு. நாடாளுமன்றமென்றால் மூன்றிலொரு பங்கு இடம் உங்களுக்கு, இரண்டில் மூன்று பங்கு இடம் எங்களுக்கு; அதே போல சட்டமன்றம் என்றால் மூன்றிலொரு பங்கு இடம் எங்களுக்கு இரண்டில் மூன்று பங்கு இடம் உங்களுக்கு; என்ற பார்முலாவை உருவாக்கி அதை எம்.ஜி.ஆரை ஏற்கச் செய்தவர் அவர்.

ஜெயலலிதாவின் பேச்சு பற்றி கருத்துக்கூறுமாறு கேட்டபோது " இன்று " திமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகக் கூறிய அவர் என்னவானலும் சரி, கூட்டணி தொடரும் என்று சொல்லவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது

கூட்டணி மாறுவது பற்றி காங்கிரஸ் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது ஜெயலலிதா அதை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார். காங்கிரஸ் கூட்டணி மாறுவதற்கான மறைமுக நிர்பந்தத்தை ஏற்படுத்துவது, ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் திமுகவில் குழப்பதை ஏற்படுத்துவது என்பதோடு, காங்-அதிமுக கூட்டணி ஏற்பட்டால் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்துவது ஆகியவைதான் அவர் பகிரங்கமாகக் காங்கிரசிற்கு அழைப்பு விடக் காரணம்

அதிமுக அதிக இடங்களைப் பெற்றால், தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்க அதன ஆதரவு தேவைப்பட்டால், அப்போது அதை வழிக்குக் கொண்டுவருவது கஷ்டம் என்பதால் காங்கிரஸ் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. சிதம்பரம் போன்றவர்களுக்கு சரியான கூட்டணி அமையாவிட்டால் தன் எம்.பி. சீட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கவலை.

கடந்த முறை தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை அது 18 இடங்களைக் கேட்கிறது. அது கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதாலும் அது அணி மாற நினைக்கிறது.

நன்றி: ரெடீஃப்.காம்

ரெடீஃப் செய்தியைப் பார்க்க:
http://www.rediff.com/news/2009/feb/20tn-cong-wants-an-a

Wednesday, February 11, 2009

இத்தாலியும் இந்தியாவும் - ஒற்றுமைகள்

பாஸ்டன் பாலா

இத்தாலியின் சோனியா இந்தியாவின் காங்கிரஸ் தலைவி என்பதைத் தாண்டி
  • ஒரு முக்கிய தலைவர் இருந்தாலும், பல கட்சி அரசியல்
  • ஆளுங்கட்சி கூட்டணியில் எப்போதும் இடம்பிடிக்கும் அரசியல்வாதிகள்; கம்யூனிஸ்ட்
  • நிலையற்ற நடுவண் அரசு; எப்போது கவிழும், எப்பொழுது நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெறும் என்று தெரியாது
  • அவசர நிலை (எமர்ஜென்சி) போல் தன்னிச்சையாக அரியாசனம் அமர்வது
  • முக்கிய தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவது; நீண்ட கால மாஃபியா தொடர்பு
  • பல்கிப் பெருகி எங்கும் வியாபித்த ஊழல் + லஞ்சம்; குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் பாதகமில்லாத பொதுசேவை வாழ்க்கை
  • எல்லா அணியினரையும் திருப்தி செய்ய பல் அடுக்கு அமைச்சரவை
  • அரசின் கைப்பாவையாக செயல்படும் ஊடகம்
என்று நிறைய சொல்லலாம்.

இடாலி குறித்து நன்கறிந்த நண்பர் அனுப்பிய மடலில் இருந்து:

இத்தலி ஒரு அவியல்.

அதுவும் இந்தியா மாதிரி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆனால் முன்பே பண்பாட்டால் பலவிதமாக இணைந்திருந்த ஒரு நாடு. அது சாம்ராஜ்யத்தின் தலைமையாகவும், காலனி போலவும் இருந்த ஒரு அமைப்பு. பின்பு உலக யுத்தங்களிலும், ஃப்ரெஞ்சு எதிர் இதர யூரோப்பியப் போர்களிலும் இடையில் சிக்கித் திண்டாடிய ஒரு நாடு.

இன்னும் பல வகை மொழிகள் புழங்குவதால் மொழி இணைப்பு முற்றிலும் ஏற்படாத ஒரு நாடு. ஹிந்தி இந்தியாவில் பரவலாகப் புழங்கு மொழியாக இருந்தாலும் பல மாநிலங்களில் அது ஏற்கப்படாது இருக்கும் நிலை உள்ளது போன்ற ஒரு சிக்கல் இத்தாலிய மொழிக்கு இல்லை என்றாலும், போட்டி மொழிகள் நிறையவே உள்ளன. ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஸ்லொவீன், போன்ற இதர யூரோப்பிய மொழிகளோடு பல குறுமொழிகள் அல்லது பிராந்திய / மாநில மொழிகளும் உள்ளன.

உதாரணமாக சிஸிலிய மொழி, ஆர்பொரீஷே, மேலும் லொம்பார்ட் ஆகிய சிறுபான்மையினரின் மொழிகளும் உள்ளன. இன்னும் கிட்டே நெருங்கிப் போகப் போக இத்தலிக்குள் எத்தனை ஒருங்கிணையாத சிறுபான்மையினர் உள்ளனர் என்பது தெரிய வரும்.

இத்தோடு அங்கு ஜனன-மரணக் கணக்கை தொகுத்தால் நிகரம் இழப்புதான். அதாவது ஜனத்தொகை வருடாவருடம் குறைகிறது. இதைப் புலம்பெயர்ந்தோர் அல்லது குடிபெயர்ந்து வருவார் மூலம் இத்தலி ஈடுகட்டுகிறது என்றாலும் வருபவர் அனேகமாக அரபியர் அல்லது ஆப்பிரிக்கராகத்தான் இருக்கிறார்கள். ஓரளவு அல்பேனியர் வந்து கொண்டிருந்தனர்,

இப்போது அவர்களுக்கு முன்னாள் யூகோஸ்லாவியாவின் சிதிலங்களான கோசவோ, மாசிடோனியா ஆகிய பகுதிகளிலும், ஓரளவு ரஷ்யாவின் எல்லை மாநிலங்களிலும் இடம் கிடைக்கிறது அதனால் அவ்வளவு இத்தலிக்குக் குடி வருவதில்லை.

உள்வருபவர்கள் இத்தலியின் பெருநகரங்களுக்கே போய்ச் சேருகிறார், எனவே இன்னும் கிராமப்புறங்களில் ஜனத்தொகை குறைந்து கொண்டே போகிறது. இத்தலியின் பொருளாதாரத்தில் ஏதோ 2% போலத்தான் விவசாயத்தை நம்பி இருக்கிறது. சிஐஏ தகவல் பக்கத்தில் காண்பதை வைத்துப் பார்த்தால் விவசாயம் எத்தனை சிறியது பாருங்கள். சர்வீஸஸ் என்று குறிப்பது சுமார் 71 சதவீதம் என்று சொல்கிறது இது.

நம்பவே முடியவில்லை.

யாருக்கு சேவை செய்கிறார்கள் முக்கால் பாக மக்கள்? எதைக் கொடுத்து எதை வாங்கி?

யூரோப்பில் இருந்து இறக்குமதி செய்து இங்கிருந்து எதையெல்லாமோ ஏற்றுமதி செய்து பிழைக்கிறார்கள் போல் இருக்கிறது. உல்லாசப் பயணிகள் கணிசமான பகுதி பொருளாதாரத்தைப் பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

உதவி / ஆதாரம்:

1. BBC NEWS | Europe | Country profiles | Country profile: Italy

2. CIA - The World Factbook -- Italy

3. Italy - Wikipedia, the free encyclopedia

இந்தியத் தேர்தல் வரப்போகும் இந்த சமயத்தில், 2008ன் இந்த மேற்கோள் இந்தியாவுக்கும் பொருந்துகிறது:
"There is an alarming distance separating the Italian political world and the economic reality in the rest of the country."