- சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம்,
- காங்கிரஸ்,
- தெலுங்கு தேசம் & தெலுங்கானா ராஷ்டிர சமிதி
- பாஜக
~oOo~
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:
- கேபிள் இணைப்புடன் கூடிய இலவச வண்ணத் தொலைக்காட்சி
- பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில், வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு உதவி தொகையாக மாதம் ரூ. 2000 ரொக்கப்பணம்
- பரம ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரமும்,
- ஏழைகளுக்கு ரூ.1500-ம்,
- வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படும்.
- ஏழைக்குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின்விளக்குகள், ஒரு மின்விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- மக்களின் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- விளிம்பு நிலையாளர்களுக்கு இலவச மருத்துவ சேமநல நிதி, காப்பீடு
- முதியவர்களுக்கு உதவித் தொகை
- கணவனை இழந்த பெண்களுக்கு மாதாந்திர பென்சன்
- வெள்ளை ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 25 கிலோ இலவச அரிசி
~oOo~
மாநில காங்கிரஸ் தலைவர் கக்ரபாணி தங்கள் ஆட்சியின் ஆரோக்யஸ்ரீ மற்றும் இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி போன்ற திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்தாலே தங்களின் வெற்றி எளிதாகும் என்றிருக்கிறார். ~oOo~
சிரஞ்சிவியின் பிரஜா ராஜியம்
- கடந்த பதினைந்து ஆண்டுகளாக அரசியலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊழல் புகார்களை சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும்
- ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்றும்
"வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது, மோசடி மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என ஜனாதிபதி பிரதிபா பட்டீலிடம், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
~oOo~
சந்திரபாபு நாயுடு செய்த ஊழல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாளில் வெளியிட்டதில் இருந்து:
- சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் செய்துள்ள முறைகேடுகளில் ஹெரிடேஜ் புட் லிட்., தொடர்பான ஊழல் குறிப்பிடத்தக்கது.
- ஒரே நிறுவனத்திற்குள் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடுவது,
- கூட்டுச் சேர்ந்து சதியில் ஈடுபடுவது ஆகிய முறைகேடுகள் நடந்துள்ளன.
- அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்துவதற்கு எதிராக கோர்ட்டில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.
- தனது ஆட்சிக் காலத்தில் நடந்த எலுரு ஊழல் தொடர்பான விசாரணைக்கும் தடை வாங்கியுள்ளார்.
- சந்திரபாபு நாயுடுவின் ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
- வேலைக்காக உணவுத் திட்டத்திலும் மோசடி நடந்துள்ளது.
- போலி முத்திரைத் தாள் தொடர்பான விஷயத்தை ஊக்குவித்துள்ளார்.
- ஸ்டான்போர்டு பல்கலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் சீட் பெறுவதற்காக சத்யம் நிறுவனம் சார்பில் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
- தெலுங்கு தேசம் கட்சியின் அடையாள அட்டை குறித்த விஷயத்திற்காகவும் சத்யம் நிறுவனத்திடம் இருந்து 80 கோடி ரூபாயை சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்.
~oOo~

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி அல்லாத
மூன்றாவது அணியில்
- தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்
- 4 இடதுசாரி கம்யூனிஸ்ட்/மார்க்சிஸ்ட் கட்சிகள்
- அ.தி.மு.க
- தெலுங்கு தேசம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி
மாயாவதியும் இந்த அணியில் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
