Showing posts with label Opinion Poll. Show all posts
Showing posts with label Opinion Poll. Show all posts

Thursday, April 30, 2009

திருமாவின் ஜால்ரா!

"இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார்.இனி செய்வதற்கு எதுவுமில்லை" என ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 62% பேர் அவரது பேச்சு இரண்டு சீட்டுக்காகப் போடும் ஜால்ரா எனக் கருதுகிறார்கள்.

20% பேர் அவரது பேச்சு யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கிறதாகக் கருதுகிறார்கள்.

17 சதவீதம் பேர் இலங்கைப் பிரசினையில் இனி திமுக எதுவும் செய்யாது என்பதை அவர் பேச்சு உணர்த்துவதாகக் கருதுகிறார்கள்.

Thursday, March 19, 2009

எம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் பல தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக மாற்றம் பெற்றிருக்கின்ற்ன. எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. இப்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ளவர்களில் சிலர் தொகுதி மாறிப் போட்டியிடக்கூடும் எனச் செய்திகள் உலவுகின்றன. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும், ஆ.ராசா நீலகிரித் தொகுதியிலும் மாறிப் போட்டியிடக் கூடும்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரகுபதி ஆகியோர் தொகுதி மாறிப் போட்டியிடக் கூடும்; சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள்; மணி சங்கர் ஐயருக்கு மீண்டும் மயிலாடுதுறைத் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் எனப் பல செய்திகள் உலவுகின்றன. இப்போது எம்.பி.களாக இருப்பவர்களில் செ.குப்புசாமி, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், சுகவனம், ராணி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது இன்றையத் தேதியில் இவை எல்லாம் ஊகங்களே.

தொகுதிப் பங்கீடு முடிய, வேட்பாளர் பட்டியல வெளியிடப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் ஒரு Quick Survey: (அருகில் உள்ள பெட்டிகளில் வாக்களியுங்கள்)

Sunday, February 22, 2009

அடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் !



CNN-IBN தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள்:

  • திரிசங்குப் பாராளுமன்றம் நிச்சியம்
  • காங்கிரஸ் கூட்டணிக்கு (ஐக்கிய ஜனநாயக முன்னணி) 215லிருந்து 235க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 36 சதவீத வாக்குகள் பெறக்கூடும்

  • பா.ஜ.க கூட்டணிக்கு (தேசிய ஜனநாயக முன்னணி) 165லிருந்து 185க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 29 சதவீத வாக்குகள் பெறலாம்

  • யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது மாநிலக் கட்சிகளின் கையில் இருக்கிறது

  • ஆட்சி அமைப்பதைத் தீர்மானிப்பதில் மூன்று முக்கிய மாநிலங்கள்- உ,பி, பீகார், தமிழ்நாடு ஆகியவற்றின் முடிவுகள் முக்கியப் பங்கு வகிக்கும்
  • இந்த மாநிலங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் என்பதால் அவற்றைக் கருத்துக் கணிப்புகள் மூலம் கண்டறிவது சிரமம
முழு விவரங்களுக்கு: http://ibnlive.in.com/politics/