Showing posts with label EVM. Show all posts
Showing posts with label EVM. Show all posts

Monday, March 02, 2009

நாடாளுமன்ற தேர்தல் - ஏப்ரல் 16 - மே 13

- நாராயணன்

தேர்தல் ஆணையம் இன்று நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. ஐந்து பகுதிகளாக நடக்கும் இந்த தேர்தல் 543 தொகுதிகளை உள்ளடக்கியது. ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி, மே 13 வரை, ஐந்து பகுதிகளாக வாக்களிப்பு நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் முதன்மை கமிஷ்னர் திரு. கோபால்சாமி இவைகளை அறிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் ஐந்து பிரிவாகவும், பீஹாரில் நான்கு பிரிவுகளாகவும், மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று பிரிவுகளாகவும் தேர்தல் நடைபெறும். ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். மீதமிருக்கும் 15 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறும்.

முதல் பகுதி - ஏப்ரல் 16 (124 தொகுதிகள்)
இரண்டாம் பகுதி - ஏப்ரல் 23 (141 தொகுதிகள்)
மூன்றாம் பகுதி - ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)
நான்காம் பகுதி - மே 7 (85 தொகுதிகள்)
ஐந்தாம் பகுதி - மே 13 (86 தொகுதிகள்)

முடிவுகள் மே 16இல் இருக்கும்.

சில புள்ளிவிவரங்கள்.

  • இருந்த 543 தொகுதிகளில், 499 தொகுதிகள் சீரமைக்கப்பட்டிருக்கிறது
  • 71 இலட்சம் போலிஸார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
  • 714 மில்லியன் வாக்காளர்கள் (71.3 கோடி) இந்த தேர்தலில் பங்கேற்பார்கள், அதில் 43 மில்லியன் (4.3 கோடி) புது வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பார்கள்
  • 8,28,804 தேர்தல் பூத்துகள் அமைக்கப்படும்
  • 11 இலட்சம், மிண்ணணு வாக்களிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்
  • இப்போதைய ஆட்சி காலம், ஜூன் 1 வ்ரை இருக்கிறது.புதிய நாடாளுமன்றம் ஜூன் 2 தேதி போல இருக்கும்

Tuesday, February 24, 2009

தேவையா இப்படி ஒரு பட்டன்?

புதுடெல்லி, பிப்.24: தேர்தலில் யாருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு என்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தனியிடம் ஒதுக்கக் கோரி தொடர்ந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

டெல்லியை சேர்ந்த மக்கள் உரிமை சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:

இப்போதைய வாக்களிப்பு முறையில் எந்த கட்சிக்கும் அல்லது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்களது எண்ணத்தை பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடமில்லை. இவ்வாறு விருப்பம் இல்லாதவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.

இப்படி முன்நிபந்தனை விதிப்பது அரசியல் சட்டம் 19 (2) விதிக்கு எதிரானது. மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது.
மேலும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று பகிரங்கமாக தெரிவிப்பவர்கள் அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது.

எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 'மேலே உள்ள யாருக்கும் எனது வாக்கு இல்லை' என்பதற்கு அடையாளமாக தனி பட்டன் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை பரிசீலனை செய்தது. இது மக்களின் அடிப்படை உரிமை பற்றிய விவகாரம் என்பதால் இந்த மனுவை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு இரு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் பரிந்துரை செய்தது.


தினகரன் 24.2.09


யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கலாம். சில நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது . இந்தியாவில் அப்படி இல்லை. இந்த நிலைமையில் இப்படி ஒரு தனிபட்டன் தேவையா?


அதே நேரம்

வாக்குச் சாவடிக்கு வராதவர்களின் வாக்குகளை கடைசி சில மணி நேரங்களில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாகப் பதிவு செய்து கொண்டுவிடுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இது போன்ற ஒரு பட்டன் இருந்தால் வாக்க்ளிக்க விருப்பமில்லாதவர்கள் கூட் வாக்குச் சாவடிக்கு வந்து தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்யவும் அதன் காரண்மாக கள்ள் ஓட்டுக்கள் பதிவாவதைத் தவிர்க்கவும் முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

தனிபட்டன் தேவையா? உங்கள் கருத்தை அருகில் உள்ள வாக்கெடுப்புப் பெட்டியில் தெரிவியுங்கள்.