Monday, May 11, 2009

தவறாமல் வாக்களிப்போம்....

தவறாமல் வாக்களிப்போம்....
நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்

-சந்திரமெளலீஸ்வரன்

இன்னும் இரண்டு நாட்களில் தமிழ் நாட்டில் வாக்குப் பதிவு தினம்
வாக்களிப்பது கடமை. அதை தவறாமல் செய்ய உறுதி பூணுவோம்
இந்தச் செய்தி வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என உண்மையாக நினைப்போம். நம்மால் இயன்றவரை இதனை நண்பர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்
நாம் செய்ய வேண்டியது என்ன
மறக்காமல் வாக்குச் சாவடிக்கு சென்று நம் வாக்கை பதிவு செய்வோம். இந்தக் கடமையினை செய்திட நம் உறவினர், நண்பர்களையும் வேண்டுவோம்
வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல கடமையும் ஆகும். ஆகவே வாக்குச் சாவடிக்குச் செல்ல வேட்பாளர்கள் தரும் வாகன்ங்களை புறக்கணித்து நாமே நம் சொந்த முயற்சியில் வாக்குச் சாவடிக்குச் செல்வோம்
நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நாம் வாக்களிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சில நிமிட்த்துளிகளே ஆனால் சொற்ப நேரத்தில் எடுக்கும் முடிவு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நம் வாழ்க்கையினை எப்படியெல்லாம் பாதிக்கும் எனத் தெரிந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்வோம்
ஆண்டு தோறும் இந்த நாட்டில் பல்வேறு நிலைகளில் கல்வி அறிவு பெற்று கல்வி நிலையங்களிலிருந்து புறப்படும் இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா? அவர்களுடைய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை நிறைவேற்றி குறைவற்ற வேலை வாய்ப்பினை வழங்கிடும் வண்ணம் நம் வாக்கு ஒரு நிலையான தரமான ஆட்சியினை நமக்கு தர வேண்டாமா?
இந்த பரந்து விரிந்த பாரத்த்திலே இயற்கைச் செல்வங்கள் எத்தனை எத்தனை. அவையெல்லாம் நமக்கு முழு பலன் தரும் வண்ணம் நல்ல செயல் திட்டங்கள் வழங்கிடும் அரசு நமக்கு வேண்டுமல்லவா
நேர்மை என்பதே ஓர் அபூர்வ குணமாகி, நேர்மையாக இருப்பவர் ஒரு சிலரே என்ற துர்பாக்கியமான நிலை தொடர வேண்டுமா ? அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா ? இப்படியான நிலையினை மாற்ற வேண்டியது நம் கடமைதானே. அதனை செவ்வனே செய்ய நம் வாக்கு ஒரு கருவி தானே.?
இவையெல்லாம் நாம் வாக்களிக்கும் முன்பு நம் வாக்கை யாருக்கு அளிக்கிறோம் என்பதை முடிவு செய்யும் காரணிகளில் சில.
இதை விடுத்து
கட்சி, ஜாதி, மதம், தேர்தல் நேரத்தில் கிட்டும் சில சலுகைகள் இவையா நம் வாக்கினை முடிவு செய்ய வேண்டும்
நாம் மே 13 அன்று அளிக்கும் வாக்கு வெறும் ஓட்டு அல்ல.. அது நம் வருங்காலத்திற்கு நமக்கு நாமே தரும் வாக்கு.. நம்பிக்கை. வாக்கு என்பது உறுதி மொழி என்ற அர்த்தமும் தரும்
நாம் நம் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தரும் உறுதி மொழி.
தவறாமல் வாக்களிப்போம்.... நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்

1 comment:

குப்பன்.யாஹூ said...

அருமையான பதிவு, சரியான நேரத்தில் பதிவு இட்டுளீர்கள்.

ஆம் நாம் அனைவரும் தவறாமல் வாக்கு அளிப்போம்.

குப்பன்_யாஹூ