Sunday, April 26, 2009

தினம் ஒரு தேர்தல் -9

ஜெயலலிதாவின் நிலை மாற்றம்: உங்கள் கருத்தென்ன?

தனி ஈழம் அமைவதுதான் இலங்கைப் பிரசினைக்குத் தீர்வு, மத்தியில் எங்கள் சொல்படி கேட்கும் அரசு அமைந்தால் தனி ஈழம் அமைய நான் நடவடிக்கை எடுப்பேன் என நேற்று ஈரோட்டில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்க்கிறார்.

அவ்ர் பேச்சிலிருந்து:

"வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த 23ம் தேதி என்னை சந்தித்து ஒரு வீடியோ கேசட் கொடுத்தார். அவர் இலங்கை சென்றிருந்ததாகவும், அங்குள்ள தமிழர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் கூறினார். அந்த வீடியோ காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். இலங்கைத் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து தமிழர்கள் அழிக்கப்படுவதை அதில் பார்த்தேன்.


போர் நிறுத்தம் தேவை என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால், அங்குள்ள தமிழர்கள் ராணுவ முகாம்களில் அடிமைகளைப்போல், கைதிகளைப் போல நடத்தப்படுகின்றனர். ஜெர்மனியில் யூதர்களை அழித்த ஹிட்லர் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது. அதுபோன்ற ஆட்சியைத்தான் தற்போது இலங்கையில் ராஜபக்ஷே நடத்தி வருகிறார். வீடுகளை இழந்து, மாற்றுத்துணிக்கு கூட வழியில்லாமல் அரசு முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர்.


ஜனநாயக நீதி காண்பது வெறும் கண்துடைப்பது தான். தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை அரசு உள்ளது. தமிழ் இனம் அழிவதற்கு தி.மு.க.,வும், காங்கிரசும் தான் காரணம். தி.மு.க., அரசு வேலை நிறுத்தம் செய்வதும் வெறும் கண்துடைப்பு தான். இந்திய தூதர்கள் அங்கு சென்றதால் என்ன நடந்தது? அவர்கள் செய்தது தான் என்ன? இலங்கையில் போர் நிறுத்தம் தான் வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். மத்தியில் எங்கள் சொல்படி கேட்கும் அரசு அமைந்தால் தனி ஈழம் அமைய நான் நடவடிக்கை எடுப்பேன்."

ஜெயலலிதா தனி ஈழம் என்ற அமைப்பை இதுவரை வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதில்லை. இன்று ஏற்பட்டுள்ள மனமாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்?

தேர்தல் என்று எளிதாக ஒரு முடிவுக்கு வந்து விடலாம், ஆனால் தனது மதிப்பிற்குரிய ஒருவர் நேரில் சென்று பார்த்து வந்து சொல்லும் தகவல்கள், இது நாள் வரையில் ஊடகங்கள் வழியே அறிந்து வந்த தகவல்களை விட நம்பிக்கைக்குரியதாக ஏற்கப்பட்டிருக்கலாம். ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கைப் பிரசினையில், உண்மைத் தகவல் எங்கு முடிகிறது, பிரசாரம் எங்கு துவங்குகிறது எனக் கண்டு கொள்வது சிரம்மானதாகத்தானிருந்தது.

எது எப்ப்டியிருந்தாலும் ஜெயலலிதாவின் நிலைப்பாடு நாடெங்கிலும் கவனிக்கப்படும், விவாதிக்கப்படும். அவரது இந்த மாற்றம் குறித்து உங்கள் கருத்தென்ன? அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

6 comments:

yrskbalu said...

good change.

some body to do boldly.

otherwise no tamilians not be there in srilanka in future.

Senthil said...

election stunt only

குப்பன்.யாஹூ said...

as a voter , to me srilankan tamil issue is not that important. so I am not going to chnage my voting decison just because jayalaitha or karunanithi support tamil eelam.

I dont know why politicians and veven we bloggers wasting our time on srilankan tamil eelam issues.

we should focus our time on Indian education system improvement, litrecy improvement, rich poor disparity, alternate energy usage etc.,

Anonymous said...

அரசியல் பார்வை இல்லாமல் மனிதநேயத்தோடு அனுகினால் சரி

butterfly Surya said...

Dear Malan Sir...


என்னதான் வலையிலும் ஊடகங்களிலும் எல்லோரும் கத்தி தீர்தாலும் ஈழப்பிரச்சினை ஒரு பெரிய முக்கிய காரணியாக இந்த தேர்தலில் இருக்க வாய்ப்பில்லை.

தி.மு.க + 25 - 27 வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்.

தென் மாவட்டங்களில் அழகிரி சொன்னது போலவும் நடக்கலாம்.

=====================
தலைகளின் நிலவரம்.

Losers:

தங்க பாலு

ஈவிகேஸ்

பிரபு.


=================

Tentative:

வைகோ ( 50 / 50 )

ப.சி ( 50/50 )

=========

Gainers:

அழகிரி.

மாறன்

டி.ஆர். பாலு.

ரித்தீஷ்.


I am not at all favouring any one. I am not belongs to any party.


Let us wait and see the people's mandate.

ARIVUMANI, LISBON said...

election stunt only
election stunt only
election stunt only
election stunt only