Thursday, April 23, 2009

தினம் ஒரு தேர்தல்-7

"இலங்கையில் தமிழ் மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் நம் தமிழ் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனிதாபிமான உணர்வு கொண்ட பல அமைப்புகளும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிடக் கூடிய இடத்திலும், நிலையிலும் இந்திய அரசு உள்ளது. ஆனால் இந்தியா இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

"போர் நிறுத்தம் செய்யுங்கள்' என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட "வேலை நிறுத்தம் செய்யுங்கள்' என்று இங்கே முதல்வர் கருணாநிதி மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம், தந்தி கொடுப்பது, பிரதமருடன் சந்திப்பு, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற கருணாநிதியின் நடவடிக்கைகளால் ஒரு தமிழ் உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லை.

காலம் தாழ்த்துவதற்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளை கருணாநிதி மேற்கொள்கிறார். இதனால் இன்று இலங்கைத் தமிழர் நிலை மிகவும் பரிதாபகரமான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

இந்த நேரத்தில் கூட கருணாநிதி மத்திய அரசை நிர்பந்தித்து, போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை. வேறு எப்போதுதான் செய்யப் போகிறார்?

-ஜெயலலிதா

கருணாநிதி இன்றே செயல்பட வேண்டும். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அழைத்துக் கொண்டு தில்லிக்கு செல்ல வேண்டும். "போரை நிறுத்துங்கள்' என்று சோனியாவிடம் நேரில் எச்சரிக்கை விடுத்து, அதில் வெற்றி பெற்று திரும்ப வேண்டும்.

அது ஒன்றுதான் ஈழத் தமிழர்களைக் காக்கும். வேலைநிறுத்தம் தமிழர்களை பாதுகாக்காது
-மருத்துவர் ராமதாஸ்

கருணாநிதியோ பதவி விலகுவதால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விடிவு காலம் வந்துவிடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி இதுவரைதான் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிடுகிறார். இறுதியில் மத்திய அரசிடம் முறையிட்டும் பயனில்லை, அழுது புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.

கருணாநிதிக்கு அண்ணா சொன்ன வழி மறந்து போய்விட்டதா? "என்னால் முடிந்தவரை மக்களுக்காகப் பாடுபடுவேன். முடியவில்லையென்றால் அதற்கான காரணங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி விட்டு மறு வினாடியே முதல்வர் பதவியிலிருந்து விலகிவிடுவேன்' என்றார். அண்ணாவைப் பொருத்தவரை பதவி என்பது தோளின் மேல் போடும் துண்டு. ஆனால் கருணாநிதிக்கு அது இடுப்பு வேட்டி.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு கண்துடைப்பு வேலை. திமுக நடத்தும் இந்த நாடகத்தில் தேமுதிக பங்கேற்காது

- விஜயகாந்த்.

General strike will not affect normal life, says Chief Secretary

CHENNAI: The call for a general strike on April 23 was given by a political party and not by the government, and normal life will be maintained, Chief Secretary K.S.Sripathi said on Wednesday.

Responding to questions from press persons, he said the government would take all efforts to maintain normalcy during the period of the strike and all services would be maintained. Public transport would be operated as usual, he said.

Southern Railway has clarified that trains, including suburban trains, will be operated as usual.

Spokespersons of airlines said that they did not have any instructions and would operate as usual.

The Chief Electoral Officer made it clear that the filing of nominations for the Lok Sabha elections will continue on Thursday despite the strike call

Chief Secretary to Tamilnadu Government

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.

பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது.

-வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர்

பந்த் பலன் தருமா? இடப்ப்க்கம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

No comments: