Tuesday, April 21, 2009

தினம் ஒரு தேர்தல்-5

வெளிநாடுகளில் குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வர வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் அத்வானி கோரினார். என்ன காரணத்தாலோ காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இதற்காக அவர் மீது கண்டனக் கணைகளை வீசுகின்றனர்.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களுக்குள் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம் என்று அத்வானி கூறியிருக்கிறாரே, இதனால் அந்த முதலீட்டாளர்கள் உஷார் அடைந்து பணத்தையெல்லாம் அந்த வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துவிட மாட்டார்களா? 100 நாள்களுக்குள் பணத்தை எடுத்துவிடுங்கள் என்று அவர்களுக்கு சமிக்ஞை தருகிறாரா?' என்றுகூட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்: "அத்வானி நியமித்த பணிக்குழுவினர் தங்களுடைய அறிக்கைக்கு ஆதாரங்களாகப் பயன்படுத்தியவற்றில், வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்ட "குளோபல் ஃபைனான்ஷியல் இன்டக்ரட்டி' (ஜி.எஃப்.ஐ) என்ற அமைப்பு தந்த புள்ளிவிவரம் மட்டுமே நம்பகமானது; மற்றவையெல்லாம் மோசடியானவை.

2002 முதல் 2006 வரை இந்தியாவிலிருந்து வெளியேறிய பணம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்கிறது அந்த அமைப்பு. இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இதில் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிலிருந்து வெளியேறிய பணத்தை மட்டுமே பற்றியது; வெளி நாடுகளிலிருந்தும் ஹவாலா மூலம் இந்தியாவுக்குப் பணம் வருகிறது. அந்தத் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் நம்மிடமிருந்து போவதைவிட வருவதுதான் அதிகமாக இருக்கும், அது நம்முடைய மூலதனக் கணக்கில் வரும் தொகையைவிட அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஜி.எஃப்.ஐ. அமைப்பின் தகவலைக்கூட அப்படியே ஏற்றுக்கொண்டுவிட முடியாது. அது கையாண்டுள்ள கணக்கிடும் முறையிலேயே தவறுகள் உள்ளன. அந்த அறிக்கையைத் தயாரித்த தேவ் கர் என்பவரையே கேட்டேன், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்ட விரோதமாகப் பணம் செல்லும் வழி எது என்று.

ஏற்றுமதி மதிப்பைக் குறைத்துக் காட்டியும், இறக்குமதி மதிப்பை செயற்கையாக அதிகப்படுத்திக் காட்டியும் இப்படி பணம் கடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்' என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

சீதாராம் யெச்சூரி: 2002 முதல் 2006 வரையிலான காலத்துக்கு அறிக்கை வெளியாகியிருக்கிறது. 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தது. இப்படி இந்தியப் பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க அந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, அத்வானி என்ன செய்துகொண்டிருந்தார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி வினவினார்.

மனமாற்றம்: தங்களுடைய வங்கிகளில் பணத்தைப் போடும் வாடிக்கையாளரின் தனி உரிமைதான் முக்கியம், கணக்கு விவரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்று கருதுவதால் வாடிக்கையாளர்களுடைய பெயர், முகவரி, போட்ட தொகை ஆகிய அனைத்தையும் ரகசியமாகக் காத்து வந்தன சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள்.

""முறைகேடாக சம்பாதித்த பணம் கொள்ளைக்குச் சமம். அந்தக் கொள்ளைப் பணத்தைக் கொண்டுவந்து குவிக்க நாமே இடம் தரலாமா?'' என்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நற்சிந்தனையாளர்கள் அரசைக் கேட்டனர். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், குடிநீர் போன்றவற்றுக்கு நிதி ஆதாரம் போதாமல் வறுமை தாண்டவமாடும் நிலையில் அந்நாட்டு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், தொழில், வர்த்தக அதிபர்களும், பிற சமூக விரோதிகளும் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கு இடமும் தந்துவிட்டு அந்தத்தகவல்களைத் தெரிவிக்க மாட்டோம் என்று மறுப்பது எந்த வகையில் தார்மிகமானது என்று சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டதை அடுத்து, அந்தத் தகவல்களைத் தர அரசு கடந்த சில மாதங்களில்தான் தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-தினமணி

இது குறித்து இன்றைய இந்துவின் தலையங்கம்: A major issue on the agenda


வெளிநாட்டிலுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தைக் இங்கு கொண்டு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன? இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்.

2 comments:

Suresh said...

உங்க பதிவு மிக அருமை ...

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

yrskbalu said...

if swiss bank not keeping secret,

our politicans forms syndicate in

some area in the world and keep safe.

they pay some amounts to alquida not

robbery that syndicate.

so simple malan sir