Thursday, April 30, 2009

தினம் ஒரு தேர்தல்-12

தா.பா.விற்கு முதல்வர் போட முயன்ற தாழ்பாள்!

சென்னை : ''வடசென்னை கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாண்டியன், மனு தாக்கலின்போது தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனு ஏற்கப்பட்டது குறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம்,'' என்று முதல்வர் கருணாநிதி ஏப்ரல் 28ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டி விவரம்: தா.பாண்டியன் மனு தாக்கல் செய்ததில் நடைபெற்றுள்ள தவறுகள், மறைத்துள்ள மோசடிகள் பற்றி ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளேன். இதை நான் வெளியிடுவதன் மூலம் அவர் சார்ந்திருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியில் இது போன்ற தவறுகளை அனுமதிக்க மாட்டார்கள். இதை வெளியிட்ட பின் அந்த கட்சியினர் என்ன செய்யப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நிலத்தை வாங்கவில்லை என்று பாண்டியன் சொல்வது உண்மையல்ல.
தி.மு.க., சட்ட ஆலோசகர் ஜோதி கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது, சொத்து சம்பந்தப்பட்ட தகவல்கள் முழுவதும் தர வேண்டும். தா. பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனுவில் பட்டா எண் 744ல் தனக்கு ஐந்து ஏக்கர் நிலமும், அண்ணா நகரில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு உள்ளதாகவும் கூறிப்பிட்டுள்ளார். இந்த சொத்துகள் குறித்து முழு விவரத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
அவர் குறிப்பிட்ட பட்டா எண்ணில் 2.62 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. ஏழு ஏக்கர் நிலம் அவருக்கு சொந்தமாக உள்ளது. ஆனால், ஐந்து ஏக்கர் மட்டுமே மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாண்டியன் ஒரு சொத்து வாங்கியுள்ளார். அதை பிப்ரவரி 2ம் தேதி பதிந்துள்ளார். அதற்கான பத்திரப் பதிவில் இரண்டு இடங்களில் அவரது போட்டோ ஒட்டி 15 இடங்களில் கையெழுத்திட்டுள்ளார். அவர் வாங்கிய சொத்தை மறைத்துள்ளார்.
இதன்படி, அவர் தேர்தலில் நிற்க தகுதியிழந்துள்ளார். அவரது மனு செல்லாது என்பது சட்ட நிலைமை. இதைக் குறிப்பிட்டு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். 'பத்திரப்பதிவில் உள்ள கையெழுத்து தன்னுடையது இல்லை. நான் மனுவில் தாக்கல் செய்தது தவிர வேறு சொத்து எனக்கு இல்லை' என்று பாண்டியன் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜோதி தெரிவித்தார்.

அதன்பின் முதல்வர் கருணாநிதி கூறுகையில், ''அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் போட்டுள்ள கையெழுத்தும் இந்த கையெழுத்தும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் கமிஷன் மனுவை ஏற்றது தவறு. இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் நரேஷ் குப்தாவின் கண்டிப்பு என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுகிறது. ஊழல் அடிப்படையில் இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையும் மீறி போட்டியில் இருந்து தா.பாண்டியன் விலகவில்லை என்றால் மக்கள் தீர்ப்புக்கு விடுகிறேம்,'' என்றார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், ''திருவள்ளூர் அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் சென்னையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அதற்கு சொத்துவரி செலுத்தவில்லை. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டதற்கான கணக்கு கொடுக்கவில்லை. இதற்காக ஆறு ஆண்டு நிற்க கூடாது என சட்டம் உள்ளது. இதை பரிசீலிக்காமல் அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

தினமலர் 29.4.2009

தோல்வி பயத்தால் தா.பாண்டியன் மீது கருணாநிதி தவறான புகார் : இந்திய கம்யூனிஸ்ட்

சென்னை, ஏப். 29: தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தின் காரணமாகவே தா. பாண்டியன் மீது தவறான புகாரை முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது சொத்து குறித்த முழுமையான விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்காமல் மோசடி செய்துள்ளார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீது கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், உத்தப்ப நாயக்கனூர் கிராமத்தில் தா. பாண்டியனுக்கு 2.72 ஹெக்டேர் நிலம் உள்ளது. தி.மு.க.வினர் குறிப்பிடும் கடந்த 11.2.2008 அன்று வாங்கிய சொத்தும் அதில் அடங்கும். இந்த மொத்த சொத்தும் பட்டா புத்தகம் எண் 744-ல் உள்ளது.
வேட்பு மனுவில் தனது கிராமத்தில் பட்டா எண் 744-ல் தனக்குள்ள சொத்து விவரங்களை தா. பாண்டியன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிதாக வாங்கிய சொத்தும், அவரது சகோதரி, சகோதரர் குடும்பங்களிடமிருந்து வாங்கிய பரம்பரை சொத்தே ஆகும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிய குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. அவரது குற்றச்சாட்டை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத மாற்று அணியை உருவாக்கும்படி இடதுசாரி கட்சிகள் அகில இந்திய அளவில் அறைகூவல் விடுத்தன. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வுடன் தொடர்ந்து தோழமையை தொடர இயலாத நிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டது. இது பற்றி கருணாநிதியிடமே நாங்கள் விளக்கியிருக்கிறோம்.
கட்சியின் அகில இந்திய தலைமையின் அழைப்பை ஏற்று தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. அணிக்கு மாற்றாக அ.தி.மு.க. தலைமையிலான அணியை உருவாக்குவதில் தா. பாண்டியன் முக்கியப் பங்காற்றினர். அந்த அணி, மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே காழ்ப்புணர்ச்சி, தோல்வி பயத்தின் காரணமாகவே தா. பாண்டியன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கருணாநிதி கூறியுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
தினமணி 30.4.2009

இப்போது எதுவும் முடியாது : நரேஷ் குப்தா

"வட சென்னை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தா.பாண்டியன் வேட்புமனு குறித்து, முதல்வர் கருணாநிதி தெரிவித்த புகார் மீது இப்போது எதுவும் செய்ய முடியாது'' என்றார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா.

"தா.பாண்டியன் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து குறித்த விவரத்தை முழுமையாக குறிப்பிடவில்லை' என்று புகார் தெரிவித்திருந்தார், முதல்வர் கருணாநிதி. இதற்கு செய்தியாளர்களிடம் நரேஷ் குப்தா, புதன்கிழமை அளித்த பதில்:

"என்னென்ன காரணங்களுக்காக வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் என்பது குறித்த விவரங்கள் மனுதாக்கலுக்கு முன்பே அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வேட்பாளர்களின் கல்வி, சொத்து பற்றிய தகவல்களில் ஏதாவது குறைகள் இருப்பின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்.
வட சென்னையைப் பொறுத்தவரை அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி மைதிலி ராஜேந்திரன், நேர்மையான அதிகாரி. வேட்புமனு பரிசீலினையின் போது அவருடன், மத்திய தேர்தல் பார்வையாளர் உடனிருந்தார். எனவே, தவறு நடந்ததற்கான கேள்வி எழவில்லை. இதன்பிறகும், தவறு நடந்திருப்பதாக கூறினால், அதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். தேர்தலுக்குப் பிறகு வழக்குப் போடலாம். இப்போது எதுவும் செய்ய முடியாது.

சொத்து, கல்வி பற்றிய விவரங்களை வெளியிடுவது வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். "வேட்பாளர்கள் தங்களைப் பற்றித் தரும் தகவல்களை வைத்து, அவர்களது வேட்புமனுக்களை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை' என்று இந்திய தேர்தல் ஆணையச் செயலாளர் கே.எப்.வில்பர்ட் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அதிமுக வேட்பாளர்... திருவள்ளூர் அதிமுக வேட்பாளர், தனது முந்தைய தேர்தல் கணக்குகளைத் தாக்கல் செய்யவில்லை என்று திமுக புகார் கூறியுள்ளது.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது. இது தேர்தல் ஆணைய விதி. அதன் படி, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள் தற்போது நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனுவுக்கு முன்பே வெளியிடப்படும். அதில், திருவள்ளூர் வேட்பாளர் பெயர் இடம்பெறவில்லை.
தினமணி 30.4.2009
Candidate can’t be disqualified for suppressing asset details: EC

Chennai: Chief minister and DMK president M Karunanidhi’s demand that CPI state secretary and Chennai North candidate D Pandian be disqualified for “willfully suppressing” information about his assets has raised a pertinent question as to whether a returning officer or even the Election Commission has the power to disqualify a candidate for furnishing false details about assets.
Chief electoral officer Naresh Gupta, drawing attention to the EC’s handbook for returning officers, said the nomination could not be rejected on the grounds that information provided by the candidate in the affidavit was false. As per the EC directive, the returning officer (RO) should only display for public view the objections on the notice board so as to help them make their choice on election day.
Scrutiny of nomination is a quasi-judicial duty bestowed on the returning officers by the EC. The officers discharge this duty with complete judicial detachment and in accordance with the highest judicial standards, Gupta said. “The returning officers must not allow any personal or political predilections to come in the way of their duty. In the case of Chennai North, the returning officer (Chennai collector Mythili Rajendran) is an honest officer,’’ Gupta said, stressing the fact that the election observer was also present at the time of scrutiny.
On June 28, 2002, the EC had issued an order directing poll officials to reject nominations of those candidates furnishing false details and suppressing facts. It also said penal action would be initiated against such candidates under the Indian Penal Code. However, the EC withdrew the order on March 27, 2003, following a Supreme Court ruling (March 13, 2003) in a case between Peoples Union for Civil Liberties (PUCL) and the Union government.
Nevertheless, the Election Commission took up the issue with the Prime Minister while recommending electoral reforms in 2004. In a letter written to Manmohan Singh on July 30, 2004, the then CEC TS Krishnamurthy pointed out that in the previous elections “there have been cases where the candidates are alleged to have given grossly undervalued information, mainly about their assets.”
Though Section 125A of the Representation of the People Act provides for punishment of imprisonment for a term up to six months or fine or both for furnishing wrong information or concealing any information, the commission suggested that to protect the right to information of the electors in accordance with the spirit of the SC judgment in the PUCL case, the punishment be made more stringent – “imprisonment for a minimum term of two years and doing away with the alternative clause for fine.” Conviction for offences under Section 125A should further be made part of Section 8(1) (i) of the Representation of the People Act, 1951, the CEC argued and pointed out that only then could a candidate be disqualified for such an offence.
But nothing much has happened with regard to amending the RPA to disqualify candidates who provide false information in their affidavits, Krishnamurthy told TOI. He said, “The Supreme Court’s view was that a returning officer is too junior an officer to decide disqualification of a candidate on grounds of providing false details in the affidavit.
As of now, the only option available is to file a case against the candidate in a court of law.” About the government’s apathy, he added, “The Election Commission had also forwarded the assets details of candidates close on the heels of 2004 elections to the powersthat-be for doing a proper verification by the income tax department. But we did not get any response.”

Times of India 30.4.2009

உங்கள் கருத்தென்ன இடப்பக்கமுள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

2 comments:

குப்பன்.யாஹூ said...

வாக்களர்களாகிய நங்கள் வேட்பாளரின் சொத்துக்களை பற்றி கவலை படுவதே இல்லை.

வட சென்னையில் திமுக தோல்வி உறுதி, , உட்கட்சி பூசலே முதல் காரணம், அங்கே தான் எத்தனை கோஸ்டிகள், பலராமன், குப்புசாமி, கே கே சாமி, செங்கை சிவம வீ எஸ் பாபு,
புரசை ரங்கநாதன்

பாண்டியன் தான் முதலில் திமுக கூட்டணியின் செங்கலை உருவியவர்.

குப்பன்_யாஹூ

திருநெல்வேலிக்காரன் said...

சொத்து பற்றி பேச எந்த அருகதையும் இல்லை, இந்த தமிழின அழிவு தலைவருக்கு!