Tuesday, April 28, 2009

தினம் ஒரு தேர்தல் 11

கருணாநிதியின் உண்ணாவிரதம் - உங்கள் கருத்தென்ன?

சென்னை, ஏப். 27: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை காலை திடீரென காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். எனினும் போரை நிறுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி மதியத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

சென்னையில் அண்ணா அறிவாலயம் செல்ல வேண்டும் எனக் கூறி, திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்ட கருணாநிதி, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்குச் சென்று காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க நான் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும் என்ற நம்பிக்கை நேற்று வரை இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்த பிறகும், அதை ஏற்க முடியாது என இலங்கை அரசு கூறிவிட்டது.

இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிக்குமா என ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கண்விழித்திருந்து, எதிர்பார்த்திருந்தேன். ஆனால் போர் நிறுத்தத்தை அறிவிக்காததால், என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள, இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறேன் என்றார்.

உண்ணாவிரதம் முடிந்தது: இந்நிலையில், கருணாநிதி மதியம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக திங்கள்கிழமை இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என அதில் முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதியம் சுமார் 12.30 மணி அளவில் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
(தினமணி 28.4.09)
ஆனால்--

Civilians in the so-called safety zone were relieved for a while as the annoncement by Colombo reached them through radio news broadcast Monday noon. But, their expectation was short lived as SLAF bombers flew over the safety zone carrying out air attacks hitting the southern part of the zone 4 times around 12:40 p.m., 2 times around 1:10 p.m. and 3 times around 3:45 p.m.

Tamilnet
அங்கே-
அரசு சார்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் திரித்துக் கூறப்பட்டவை. உண்மைக்கு மாறானவை என்று ராஜபட்ச கூறியுள்ளார்.

ராணுவம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் மூச்சுக் காற்று கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் போர் நிறுத்தம் செய்து அவர்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க மாட்டோம் என்று இலங்கை தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பு அதிகாரி லட்சுமண் ஹுலகுலே தெரிவித்தார்.


தினமணி 28.4.09

திமுக கருணாநிதியின் உண்ணாவிரதம் வெற்றி வெற்றி எனக் குதூகலிக்கிறது. இது கபட நாடகம் என அதிமுக அணி சொல்கிறது. ஊடகங்கள் மெளனம் காக்கின்றன. உங்கள் கருத்தென்ன? அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

2 comments:

Machi said...

இது செயலலிதாவின் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டை சமன் செய்ய போட்ட நாடகம் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஈழத்தில் நடைபெறுவது இத்தேர்தலில் எதிரொலிக்கும் என்பது செயா கருணா செயல்கள் மூலம் நன்கு விளங்குகிறது.

yrskbalu said...

karuna -- your drama uppuma

do other trick to save DMK spilts in future