Sunday, March 08, 2009

Tamilnadu Therthal Gossips, Cartoons: 'சொல்றாங்க', கேலிச் சித்திரம் & ஊர் வம்பு

இரண்டு முத்து

நடிகர் மன்சூரலிகான்: "அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்."



கருணாநிதி: 'எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!'

இரண்டு கருத்துப் படம்



இரண்டு கிசுகிசு

  • தலைவரின் மருத்துவமனைக் காட்சிகளை வைத்து ஒரு பிரசாரப் படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதாம். அவர் ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை, இந்தக் காட்சிகளை வைத்துச் சரிக்கட்டும் முயற்சியாம்!
  • மத்திய உளவுத் துறை ஒரு ரகசிய சர்வே எடுத்தது. மத்திய ஆளுங்கட்சிக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு இருப்பதாகவும் இது தென் மாவட்டங்களில்தான் இன்னும் கூடுதல் என்றும் தெரிய வந்துள்ளது!

1 comment:

Anonymous said...

Mansoor Ali Khan's first part of opinion seems reasonable. Is n't it?