Thursday, March 05, 2009

India Therdhal: தமிழ்ப் பதிவுகளில் இந்தியத் தேர்தல்

சமீபத்தில் கவனத்தை ஈர்த்த பதிவுகள்:

முதற்கண் மேற்கோள்

நான் வாக்களிக்கறவன்(ள்) ஜெயிக்கணும்னு நினைக்கறது வேற. ஜெயிக்கறவனுக்கு என் வாக்கு போகணும்னு நினைக்கறது வேற. - பத்ரி

~oOo~

உண்மைத்தமிழன் கிசுகிசுக்களையும் கூட்டணி கணக்குகளையும் ஹேஷ்யங்களையும் கொடுக்கிறார்: தேர்தல் ஸ்பெஷல்: இன்றைய அரசியல் நிலவரம் - 04-03-2009

ஒரு வதந்தி:

குலாம்நபி ஆசாத் இன்னொரு திருப்பமாக விஜயகாந்தை தங்களது கூட்டணிக்கு வரும்படி அழைத்துள்ளார். விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தையும் நடந்தேறியதாக டெல்லி வட்டாரத் தகவல். 7 தொகுதி கேட்டு 5 உறுதியாகியுள்ளதாம். கூடவே ஒரு தொகுதிக்கு '2 சி' என்று தேர்தல் நிதியும் தரப்படுமாம்.

ஒரு நிதர்சனம்:

பா.ம.க.வின் நிலைமை திரிசங்கு சொர்க்கம்தான். இந்த முறை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக என்று தனித்து நிற்க வேண்டி வரலாம் என்கிறார்கள்.

~oOo~

அமெரிக்காவிற்கு மட்டும்தான் மாற்றம் என்னும் தாரக மந்திரம் வேலை செய்ய வேண்டுமா?

தமிழகத்திற்கு மாற்றம் கோரும் பதிவு பார்த்தேன்.

அமெரிக்காவில் டெமொக்ரட்சும் ரிபப்ளிகன்சும் அல்லாத க்ரீன் கட்சி (பசுமைத் தாயகம்?) போல் நிறைய மாற்று சித்தாந்தத்தை வலியுறுத்தும் முன்னணிகள் இருக்கின்றன.

தேர்தல் புறக்கணிப்பு அவசியமா? மாற்றம் சாத்தியமா?
கருணாநிதியாகட்டும், காங்கிரஸாகட்டும், அதிமுகவாகட்டும் - ஈழப்பிரச்சினை பற்றியெறியும் போதும் , நமது தொப்புள் கொடி உறவுகள் குண்டடி பட்டுச் சாகின்ற போதும் கவலையொன்றுமின்றி கூட்டணிக் கணக்குகளை போடுகிறார்கள்.

இன்னமும் தமிழுணர்வு கொண்ட கட்சிகளாக நாம் நம்பும் மதிமுக , பாமக , வி.சிறுத்தைகள் ஆகட்டும் , தேர்தல் என்று வந்தவுடன் சீட்டுக்களுக்காக தாம் போட்ட கோசத்தை மறந்து எத்தனை சீட்டு என்று பேரம் பேச ஆரம்பித்துவிட்டன. விஜயகாந்த் பற்றியோ , சரத்குமார் பற்றியோ பேசி பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை.

குழலி, மதிபாலா, தமிழ் சசி, கார்த்திக்ராமஸ் மற்றும் மாற்றம்நம்பி ஆகியோர் தமிழகத்தில் வலுவான மூன்றாவது அணிக்கான தேவையையும், எவ்வாறு அதை அமைப்பது என்பன குறித்தும் கட்டுரை எழுதியுள்ளார்கள்.

~oOo~

ஆந்திராவில் 'மாற்றம் கொண்டுவருகிறேன்' என்று தெலுங்கு தேச சந்திரபாபு நாயுடுவிற்கும் காங்கிரஸ் ராஜசேகர ரெட்டிக்கும் மாற்றாக களத்தில் குதித்த சிரஞ்சீவிக்கு பொதுவான கட்சி சின்னம் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் மூன்றாம் அணியாக வரமாட்டார் என்று சந்தேகிக்கப்படும் ரஜினியின் நிலை என்னவென்று ஆர். முத்துக்குமார் சொல்கிறார்: இந்தியா 360 டிகிரி

தேர்தல் பிரசாரத்தில் ரஜினி!
கலைஞர்: இப்போ கேப்டனு, பைலட்டு, டிரைவருன்னு ஏகப்பட்ட பொடிப்பசங்க வந்து பாலிடிக்ஸ் பண்றானுங்க!

ஜெயலலிதா: யெஸ்.. நீங்க பிரசாரம் பண்ண்ணும்.. பட்.. எனக்கு இல்ல.. கருணாநிதி கூட்டணிக்கு.. (என்று ஜெ சற்று நிறுத்த, ரஜினி ஆச்சர்யமாகப் பார்க்கிறார்)

~oOo~

ஜெயலலிதா, ரஜினி என்றால் குட்டிக் கதை வேண்டுமே. அக்னி பார்வை சொல்கிறார்: தேர்தல் 2009

லோக் சபாவா? லொள்ளு சபாவா

ஒருவர் தன் வீட்டில் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அதை வீட்டின் வேலைகளை செய்ய பழக வைத்தார். குரங்கு எந்த வேலையை நன்றாக செய்தாலும் சரி பிரம்பால் ஒரு அடி விழும்.

ஒரு நாள் தன் நண்பரை, தன் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்தார். நண்பர் வந்ததும்,
குரங்கிடம் நாற்காலி போட சொன்னார்; ஒழுங்காக போட்டது ஒரு பிரம்படி.

தண்ணீர் கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்தது; ஒரு பிரம்படி.

விசிறி கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்த்து; ஒரு பிரம்படி.

நண்பருக்கு சற்று கோபம் வந்தது. 'அது தான் ஒழுங்காக வேலை செய்கிறதே, பின்பு ஏன் பிரம்பால் அடிக்கிறாய்? விடு! அது ஒழுங்காக நடந்துக்கொள்ளும். அடிக்காதே' என்றார். அவரும் ஒப்புக்கொண்டார்.

பின்பு மதிய நேரம் குரங்கை இலை போட சொன்னார். இலை போட்டது ஆனால் அடி விழவில்லை.அது இலையை மெதுவாக பிராண்டியது. அடி விழவில்லை. சாம்பார் சட்டிக்குள் கை விட்டு சிரித்தது, அடி விழவில்லை. மோரை எட்டி உதைத்து அடி விழவில்லை. பொறுத்து பார்த்தவர், அடுத்த அது செய்த வேலைக்கு பிரம்படி கொடுக்க ஆரம்பித்தார், குரங்கு வழிக்கு வந்த்து.

இந்த கதை தான் போது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும். அவர்களை மக்கள் கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால்..

~oOo~

'தேவையா இப்படி ஒரு பட்டன்?' கேட்டதிற்கு பதிலாக எம் எஸ் வி முத்து எழுதுகிறார்: குர‌ல்வ‌லை

தேர்தல் நடத்தி விட்டால் ஜனநாயகமா?

ஓட்டுப் போட்டாலே நம்ம ஊர் அரசியல்வாதிங்க ஒன்னும் செய்யறதில்ல. இதில பாரம் வாங்கி பூர்த்தி செய்து ஓட்டுப்போட மாட்டேன்னு எழுதிக்கொடுத்தா, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருவாங்க.

நான் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது ரகசியமாக வைக்கப்படுவது போலவே, நாம் ஓட்டுப்போடலை என்பதையும் ரகசியமாக வைக்கவேண்டாமா?

யாருக்கு அதிக ஓட்டோ அவர் தானே வெற்றி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும்? யாருக்குமே டெபாஸ்ட் கிடைக்கலன்னா?

மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். நம் வரிப்பணம் தான் விரயம் ஆகும்.

~oOo~

அதனால் தேர்தலே வேண்டாமா? 'இந்தியா ஒளிர்கிறது' என்று பத்தாண்டு(தானே?) முன்பு பாஜக சொன்னது போல், 'ஜெய் ஹோ' என்று காங்கிரஸ் பல்லவி பாடுவது போல் பிரதிபா பட்டீல் ஆட்சி, கவர்னர் பர்னாலா அரசு என்று செட்டில் ஆகிவிடலாமா என்னும் கேள்விகள் வெங்கடேஷின் பதிவில் தொக்கி நிற்கின்றன: தேர்தல் நெருங்கிவிட்டது

பொருளாதார சரிவு நிலையில் இச்செலவு தேவையா?

ஏற்கனவே, தமிழக அரசு, இந்தத் தேர்தலை மனத்தில் வைத்துத்தான், வெள்ள நிவாரண நிதி என்று ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 2000 வழங்கியிருக்கிறது. இன்னும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அதை முழுமையாகக் கொடுப்பதற்கு முன்பு, குறிப்பட்ட தொகையை முன்பணமாகவும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

~oOo~

ஏப்ரல் 16-ல் மக்களவை தேர்தல் குறித்து உயிரோசையில் மனோஜ்:

ஜனநாயகமும் பணவிரயமும்

  • வரும் மக்களவைத் தேர்தலில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும்.
  • மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 1300 கோடி செலவிடப்படும்.
  • மத்திய, மாநில அரசுகள் தனியாக ரூ. 700 கோடி செலவு செய்யும். (போட்டோ ஐ.டி. கார்டு, எலெக்ட்ரானிக் ஓட்டு மெஷின்கள் போன்றவற்றுக்காக).
  • தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் ரூ. 1650 கோடி செலவு செய்யும்.
  • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா மட்டும் ரூ. 1000 கோடி வரை செலவு செய்யும்.
  • வாக்காளர்களுக்கு பணம் வழங்க அரசியல் கட்சிகள் செலவு செய்யும் தொகை ரூ. 2500 கோடியை தொடும்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவானது.


~oOo~

கடைசியாக அருள்வாக்கு

Election prediction of the day: அடுத்த பிரதம மந்திரியாக மாயாவதி பதவியேற்பார். கம்யுனிஸ்ட்கள் அமைச்சரவையில் இடம்பெற்றும் காங்கிரஸ் வெளியில் இருந்தும் ஆதரவு தரும்.

No comments: