Tuesday, March 10, 2009

பா.ம.க யாருடன்? சில ஊகங்கள்

காங்கிரஸ் திமுகவுடன்தான் கூட்டணி என்று அறிவித்துவிட்ட நிலையில், பா.ம.க.வின் நிலை என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரத்ததிற்குப் பின் இந்தக் கேள்வி மேலும் வலுப்பெற்றிருக்கிறது

அதை குறித்த ஊகங்களும் கிசுகிசுக்களும் ஊடங்களில் ஆரம்பித்துவிட்டன. இன்று வந்த ஊகங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் நீங்களே உங்கள் ஊகங்களை மேற்கொள்ளலாம்.

பா.ம.க.,கூட்டணி தொடர்பாக கட்சிக்குள் நடைபெறும் கருத்து வேறுபாடுகள் தான் இதுவரை எந்த முடிவும் எடுக்காததற்குக் காரணம் என்று பா.ம.க ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.பா.ம.க., கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர். திருமங்கலம் இடைத் தேர்தலில், பா.ம.க., யாருக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும் என்பது தொடர்பாக கூட்டம் நடந்த போது, தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் ஜெயலலிதா பக்கம் தான் இருந்தது என்கிறார் ஒரு சீனியர் பா.ம.க., தலைவர்.

காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறக் கூடாது என்கிறார் அன்புமணி. ஆனால் ராமதாசோ, தி.மு.க., பக்கம் போனால் பா.ம.க., பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்.இப்படி இரண்டு பட்ட கருத்துகளால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திண்டாடுகிறது கட்சித் தலைமை.

அ.தி.மு.க., தரப்பிலிருந்து ஆறு சீட்கள் தருகிறோம். ஆனால், ராஜ்யசபா சீட் தரமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,விடம் ஏழு எம்.பி., சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் பா.ம.க., தரப்பில் கேட்கப்பட்டது. ஆறு எம்.பி., சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்றுதி.மு.க.,வில் கூறினர். பா.ம.க.,வோ ஒன்பது தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் ஏழு தொகுதிகளை தரவேண்டும் என்று கறாராக உள்ளது. இதற்கான பேரம் இன்னும் படியவில்லை. எனவே தி.மு.க., கூட்டணியை பா.ம.க., இன்னமும் இறுதி செய்யவில்லை.

அ.தி.மு.க., பக்கமே போய்விடலாம் என்றால் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்தில் முடிகிறது. அதற்கு பிறகு என்ன செய்வது? என பா.ம.க., யோசிக்கிறது. இந்த முறை லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடலாம் என்று கட்சியினர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் அன்புமணி. ராஜ்யசபா மூலமாகவே, வெயிலில் பிரசாரம் செய்யாமல் எம்.பி.,யாக ஆசைப்படுகிறார் அன்புமணி.சமீபத்தில் சோனியாவை சந்தித்த பிறகு, மத்திய அரசியலிலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அன்புமணியின் ஆசை அதிகமாகிவிட்டது. இப்படி அப்பா - மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பா.ம.க., எங்கு போய்ச்சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை

தினமலர்

‘‘இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் முக்கிய இடம் வகிக்கும் பாமக கருத்து (ஜெ.யின் உண்ணாவிரதம் குறித்து) என்னவாம்...’’‘
‘உண்ணாவிரதம் நடந்த அன்னிக்கு ஜப்பான் தூதரகத்துல மனு கொடுக்க போயிருந்தாங்க... அந்த தலைவர்கள் ராமதாசிடம் நைசா பேச்சுக் கொடுத்து பாத்திருக்காங்க... ஆனா அவர் வாய திறக்கவே இல்லையாம்...’’
‘‘அப்ப எதுக்கு... இன்னைக்கு நடக்குற உண்ணாவிரதத்தை கேன்சல் பண்ணாளாம்...’’
‘‘மருத்துவரின் தந்திரத்துல இதுவும் ஒண்ணுனு சொல்றாங்க... ஜெயலலிதா ‘தனி நாடு’ என்பதை ஏத்துக்கிட்டதால அவங்களுக்கு போட்டியா உண்ணாவிரதத்தை நடத்த வேண்டாமுனு கேன்சல் பண்ணிட்டதா சொல்றாங்க...’’‘
‘இதை முதல்லயே செய்திருக்கலாமே...’’ ‘‘அப்படி விட்டுக் கொடுத்தா, அதிமுக கூட்டணியில கூடுதலா சீட் கேட்க முடியாதுல்ல...’’ என்று சொன்ன பீட்டர் மாமா, காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

தினகரன்

“Ramadoss is bargaining hard with us,” revealed a DMK leader. “He says the AIADMK is offering him seven seats. He wants us to give him eight seats, plus a Rajya Sabha berth for his son.”
Hindustan Times
Being the chief architect of the Democratic Progressive Alliance, DMK president M Karunanidhi is back in business and has offered PMK founder Dr S Ramadoss, the eternal fence-sitter, six LS seats plus one Rajya Sabha seat for his son Dr Anbumani Ramadoss, according to political sources.

DMK sources said Ramadoss Sr wanted seven Lok Sabha seats and an RS nomination, as the AIADMK had apparently offered him eight Lok Sabha seats. However, Karunanidhi has stuck to the 6+1 formula.

After kicking out the PMK from the state-level alliance, Democratic Progressive Alliance (DPA), Karunanidhi has been shrewd enough to let the Congress woo back Ramadoss, a partner in the UPA at the Centre, for the LS polls.

For over a month, the Congress has been negotiating with the PMK and Vijayakanth's DMDK, as both the parties have far too much bitterness with the DMK to be directly holding parleys. As the Congress is keen on repeating its 2004 success, AICC president Sonia Gandhi, herself talked to Ramadoss Sr a fortnight ago to retain him in the alliance but the PMK leader is yet to make up his mind.

The AIADMK is keen to get the PMK by its side to add to its numberical strength. "PMK has been offered eight seats, including two reserved constituencies and no guarantee of a Rajya Sabha seat,'' said a source in AIADMK. As only three of the seats offered by AIADMK are said to be winnable', Ramadoss is in a dilemma, said sources close to him, hinting that the DMK offer looks better.

Times of India
என்னுடைய ஊகம் (இன்னொரு கோணத்தில்)
பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. கடந்த முறை போட்டியிட்டது. கடந்த முறை கடும் எதிர்ப்பிற்கிடையே அது காங்கிரசிடமிருந்த அந்தத் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை காங்கிரஸ் அந்தத் தொகுதியைத் திரும்பப் பெற முயற்சித்து வருகிறது. கோஷ்டிகளுக்குப் பெயர் பெற்ற புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தில் ஒன்று பட்டு சோனியாவை அணுகி முறையிட்டிருக்கிறார்கள்.
பாமக காங்கிரஸ் கூட்டணியில் தொடர இந்தத் தொகுதியைக் கோரும். கிடைக்காத பட்சத்தில் இதைக் காரணமாகச் சொல்லி அதிமுக அணிக்குப் போகும். அதாவது இலங்கையைவிட புதுச்சேரி பாமகவின் முடிவைத் தீர்மானிக்கும்.
கொசுறு: விடுதலைச் சிறுத்தைகள் பற்றியும் ஒரு கிசுகிசு:
""திருமாவளவன் தன்னோட தொகுதியை உறுதி செய்துட்டாருங்க...'' எனக் கூறியபடி விவாதத்தைத் துவக்கினார் அன்வர்பாய். "
"அவர் முதல்ல, கூட்டணியை உறுதி செய்துட்டாராங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி."
"அதுக்காகத் தான், சமீபத்துல முதல்வரை சந்திச்சப்ப, காங்கிரசோட எதிர்ப்பு பத்தி பேசியிருக் காரு... "அதை விடுங்க... முதல்ல நீங்க என்னோடு இருப்பீர்களா, மாட்டீங்களான்னு மட்டும் சொல்லுங்க'ன்னு முதல்வர் கேட்டாராம்..."இதை எதிர்பார்க்காத திருமாவளவன், "கூட்டணியில இருக்கேன்'னு பதில் சொல்லியிருக்காரு... அவருக்கு சிதம்பரம் தொகுதியை ஒதுக்கறது உறுதியாயிடுச்சுன்னு, கட்சிக்காரங்க பேசுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்."
"காங்கிரசை ஒழிப்பது தான் எங்கள் முதல் பணின்னு திருமாவளவன் சொன்னது எதுவும் எனக்கு ஞாபகத்துக்கு வரலைங்க...'' என சிரித்தார் அந்தோணிசாமி.
தினமலர்

No comments: