பலர் நினப்பது போல் இல்லாமல் சவால் நிறைந்த தொகுதிகளே பா.ம.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள். ஸ்ரீபெரும்புதூர் மறுசீரமைப்பிற்குப் பின் உருமாற்றம் பெற்று சென்னையின் புறநகர் தொகுதியாக மாற்றம் கண்டிருக்கிறது.சிதம்பரமும் பாதிக்குப் பாதி என்ற அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. தர்மபுரி, அரக்கோணம் அதிக சிரமம் இராது. ஒரு Quick look
ஸ்ரீபெரும்புதூர்:
முன்பு இது கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெருநகரின் அருகமைந்த 'கொல்லைப்புற' (Backyard) நாடாளுமன்றத் தொகுதியாக விளங்கியது.
இன்று இது மதுரவாயல், அம்பத்தூர், .ஆலந்தூர்,.ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம். ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. இதில் மதுரவாயில்,அம்பத்தூர், பல்லாவரம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள். தாம்பரம் சட்டமன்றத் தொகுதியும் சில பகுதிகளை வேளச்சேரி தொகுதியிடம் இழந்திருக்கிறது. எனவே வெற்றி வாய்ப்பைக் கணிக்க பழைய கணக்குகள் உதவாது. ஆனால் சில நுண் ஆய்வுகள் (Micro analysis) மூலம் சில ஊகங்களை மேற்கொள்ளலாம்.
2006 சட்டமன்றத் தேர்தலின்போது வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கியிருந்த அம்பத்தூர், மதுரவாயில் பகுதிகளில் திமுக கணிசமான வாக்குகள் பெற்றது என திமுகவினர் சொல்கிறார்கள். புதிதாக உருவாகியுள்ள பல்லாவரம் ஆலந்தூர் தொகுதிக்குள் இருந்தது.ஆலந்தூரில் 2001ல் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்
ஆர்.எம்.வீரப்பனை வீழ்த்திய அதிமுக 2006ல் சுமார் 18 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது.(அதாவது இங்கு கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன) (மாற்றத்திற்குட்படாத) தாம்பரத்தில்.
2001, 2006 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுகவே வென்றது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 2001ல் அதிமுக அணியின் ஆதரவிலும், 2006ல் திமுக அணியின் ஆதரவிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வெற்றி பெற்றார் (அதாவது இங்கும் கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத்
தீர்மானிக்கின்றன)
சுருக்கமாகச் சொன்னால் இது திமுகவிற்கு சாதகமான தொகுதிதான். ஆனால் இதன் சில பகுதிகளில் கூட்டணி மாஜிக் வேலை செய்யும்.
ஆலந்தூர், தாம்பரம் ஆகியவை தென் சென்னைத் தொகுதியில் இருந்ததால், தென் சென்னை எம்.பி.யான டி.ஆர்.பாலு அந்தப் பகுதிகளில் தன்வசமிருந்த அமைச்சகத்தின் மூலம் நிறைய வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார். ஆனால் வில்லிவாக்கம் வட சென்ன்னையில் இருந்ததால் அவர் அந்தப் பகுதிகளில் இதே அளவு கவனம் செலுத்தினார் எனச் சொல்ல முடியாது. என்றாலும் அவர் திமுக சார்பில் களமிறங்கினால் போட்டி கடினமாக இருக்கக் கூடும்.
இது நகர் சார்ந்த தொகுதியாக இருப்பதால், ஜாதி செல்வாக்கு பெருமளவில் வேலை செய்யாது. பணம் வேலை செய்யலாம். ஆனாலும் நடுத்தர வர்கத்தின், குறிப்பாக தொழிலாளர்களின் அரசியல் நிலைப்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை
சிதம்பரம்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், விருத்தாசலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் இன்று, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய இரண்டு தொகுதிகளும், கடலூர் லோக்சபா தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மங்களூர் தொகுதி சில மாற்றங்களுடன் திட்டக்குடி என்ற புதிய சட்டமன்றத் தொகுதியாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. எனவே சிதம்பரம் தொகுதியில் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள்தான் (சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி) இருக்கின்றன. அவற்றோடு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்பு இருந்து இப்போதும் நீடிக்கிற மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இப்போது (சிதம்பரம், புவனகிரி) அதிமுக வசம் இருக்கின்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகளின் துணையில்லாமல் போட்டியிட்டு வெற்றி கண்ட தொகுதிகள் இவை என்பதால் அதற்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்போது பாமகவும் அதனுடன் இணைந்து கொள்வதால் அந்த அணியின் வலு அதிகரித்திருக்கிறது. இன்னொரு பழைய தொகுதியான காட்டுமன்னார் கோயிலை விடுதலை சிறுத்தைகள் வென்றது. அன்று அது அதிமுக அணியில் இருந்தது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் இடம் மாறிவிட்டாலும், அந்த இழப்பை பாமக ஈடுகட்டக் கூடும் என்பதால் இப்போதும் இதை அதிமுக அணிக்குச் சாதகமான தொகுதியாகத்தான் கொள்ள வேண்டும்.
மீதமுள்ள குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகியவை புதிதாக உருவான தொகுதிகள்.
1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களிலும் பாமக தொடர்ந்து வெற்ற் பெற்று வந்திருக்கிறது. மூன்று முறையும் 3லட்சம் -3.5லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது (பதிவான வாக்குகளில் 45-47%) இங்கு இரண்டு முறை
திருமாவளவன் போட்டியிட்டு இரு முறையும் தோல்வி கண்டிருக்கிறார். 1999ல் சுமார் 1.25 லட்சம் வாக்குகளில் தோற்றார். 2004ல் 87 ஆயிரம் வாக்குகளில் தோற்றார்.1999ல் அதிமுக ஆதரவோடு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றார் என்பது கவனிக்கத் தக்கது.
இந்த முறையும் போட்டி திருமாவிற்கும் பாமகவிற்குமிடையேதான் இருக்கும். தோற்றத்தில் மாற்றம் கண்டுள்ள தொகுதி எப்படித் தீர்ப்பளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
அரக்கோணம்
அரக்கோணமும் மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால் கணிக்கக்கூடிய அளவிற்கான மாற்றங்கள்தான். திருத்தணி காட்பாடி ஆகிய இரண்டு தொகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.இதில் திருத்தணி அதிமுக வசம் உள்ளது.
காட்பாடி துரைமுருகனின் சட்டமன்றத் தொகுதி.. கெளரவப் பிரசினையாக எடுத்துக் கொண்டு பாமகவிற்கு எதிரான போட்டியைத் தீவீரப்படுத்தலாம்
ரயில்வே துணை அமைச்சர் வேலு கடந்த முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். ஒருவேளை திமுக இந்த முறை ஜகத்ரட்சகனைக் களமிறக்கக் கூடும்
மற்ற 3 தொகுதிகள் நாளை....
Sunday, March 29, 2009
Thursday, March 26, 2009
பாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
எதிர்பார்த்தபடியே, பாமக அணிமாறி விட்டது. ஆனால் இந்த முடிவை அறிவிக்க அது மேற்கொண்ட அணுகு முறை நயமாக இருந்தது. 1952ல் தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடைகாண அண்ணா கட்சியின் மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தியது போல, பாமக தனது பொதுக் குழுவில் ஒரு தேர்தலை நடத்தி முடிவை அறிவித்திருக்கிறது.கை தூக்குவது அல்லது கரவொலி எழுப்புவது என்ற முறையின் மூலம் அல்லாது வாக்குச் சீட்டி வழியே தங்கள் கருத்தைத் தெரிவிக்க செய்து முடிவு செய்திருக்கிறது.
இந்தத் 'தேர்தலை' நடத்த, கட்சி உறுப்பினராக இல்லாத ஒரு மூத்த பத்திரிகையாளரை (தினமணியின் முன்னாள் தலமை செய்தி ஆசிரியர் ராயப்பா) தேர்தல் அதிகாரியாகவும், சில முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர்களை தேர்தல் பார்வையாளராகவும் கொண்டு இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. 'இறுதி முடிவு எடுக்கிற அதிகாரத்தை தலைவருக்கே விட்டுவிடுகிற' உள்கட்சி ஜனநாயகமும், 'கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்குக்
கட்டுப்படுவோம்' என்கிற தொண்டர் விசுவாசமும் நிலவுகிற இன்றைய அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வரவேற்கத்தக்கவை.
டாக்டர் ராமதாசின் முடிவைத்தான் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாற்றுக் கருத்துக்கு (dissent) அவர் இடமளித்திருக்கிறார் என்பதும், திமுக கூட்டணியை அவர் கட்சியில் விரும்பும் சிலர் இருக்கிறார்கள் என்பதை பலிரங்கமாக உலகறியச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கவை. அவர் கூட்டணி விஷயத்தில் நிதானமிழக்காமல் இருந்ததைப் போல கருணாநிதி இந்த மாற்றத்தை எதிர்கொள்ளவில்லை.
இரு தினங்களுக்கு முன் 'கள்ளத் தோணி ஏறிப் போய் சண்டை போடுவதுதானே? யார் தடுக்கிறார்கள்' என்ற எரிச்சல் வெளிப்படும் அவரது அறிக்கை அதைத்தான் காட்டுகிறது.
பாமக ஒரு அணியில் இருப்பது அல்லது அதிலிருந்து மாறுவது என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இந்தக் கேள்வியை விளங்கிக் கொள்ள சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1998ம் ஆண்டு அது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக அணி 28 இடங்களைப் பெற்றது. திமுக அணி 10 இடங்கலைப் பெற்றது. 1999ம் ஆண்டு பாமக திமுக அணிக்கு மாறியது. அந்தத் தேர்தலில் திமுக அணி 25 இடங்களைப் பெற்றது.2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அது அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது அது திமுக அணிக்கு மாறியது தொடர்ந்தது அப்போது அந்தக் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி
கண்டது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுக அணியிலேயே அது தொடர்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது.
அதாவது பாமக எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணி அதிக இடங்களைப் பெறுகிறது. 'ராசியான டாக்டர்' என்று சில அரசியல்வாதிகளே சொல்லக் கேட்டிருக்கிறேன். கைராசியா, காக்கை உட்கார விழுந்த பனம்பழமா என்பதைக் கண்டு பிடிக்க சில கணக்குகளைப் பார்க்க வேண்டும்
1989ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம்
பெறாமல் பாமக 32 வேட்பாளர்களைக் களமிறக்கியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.5.82 சதவீத வாக்குகளைப் பெற்றது. மறுபடிய்ம் 1991ல் தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை 31 வேட்பாளர்கள். ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் மறுபடியும் 5.14 சதவீத வாக்குகள் வாங்கியது. 1991 தேர்தல் ராஜீவ் படுகொலை அலை வீசிய தேர்தல். அப்போதும் அதன் வாக்கு சதவீதம் குறையவில்லை
இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கி 5லிருந்து 6 சதவீதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
1996 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அது கூட்டணி பரிசோதனைகளை மேற்கொண்டது. திமுக அதிமுக இவற்றைத் தவிர்த்து வாழ்ப்பாடி ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய திவாரி காங்கிரஸ் என்ற காங்கிரசிலிருந்து
உடைந்த ஒரு சிறு பிரிவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால் அது தற்கொலை முயற்சியாக முடிந்தது.
வன்னியர்களது வாக்குகள் எல்லாம் அந்த அணிக்கே வந்து விடும் என்ற வாதம் பொய்த்து அது அந்த முறை 2 சதவீத வாக்குகள்தான் பெற்றது. கட்சி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. (எனவே ராசித் தத்துவங்கள் முற்றிலும் சரியல்ல.)
தமிழகத்தில் கழகங்களின் துணையில்லாமல் களம் இறங்குவது ஆபத்தில் முடியும் என்று பாடம் கற்றுக் கொண்டதால் அன்றிலிருந்து ஏதேனும் ஒரு கழகத்துடன் அது கூட்டணி காண்கிறது. அப்போதுதான் அதனால்
அங்கீகாரத்திற்குத் தேவைப்படும் 6 சதவீத அளவை எட்ட முடியும். அதை 1998, 1999, 2004ல் பெற்ற வாக்கு விகிதங்களைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்(6.5%, 8.21% 6.7%) இந்த வாக்கு விகிதம் அதிகரிக்க வேண்டுமானால் அது அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் (மாயாவதியின் BSP அதற்காகத்தான் இந்தியா முழுக்கப் போட்டியிடுகிறது) அப்படிப் போட்டியிட்டாலும் அது அந்த இடங்களில் வெற்றி பெற முடியாது. வாக்கு
விகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அது 1999 தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டது ஆனால் 5 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. (ஆனால் அது அதன் வாக்கு விகிதத்தை அதிகரித்துக் கொண்டது) அதனால்தான் அது ஒவ்வொரு முறையும் அதிக இடங்களைக் கோருகிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் அது வென்ற இடங்களைச் சுட்டிக்காட்டி அதிக இடங்கள் அளிக்க மறுக்கின்றன. கூட்டணி மூலம் அதிகாரத்தை ருசி பார்த்து விட்டதால் பாமக கூட்டணியை விட்டு விடவும் தயங்குகிறது. அல்லது நிறையத்
தொகுதிகளில் போடியிட அதனிடம் போதிய பொருளாதார பலம் இல்லாமல் இருக்கலாம்.
பாமக இருக்கும் கூட்டணி அதிக இடங்களைப் பெறலாம். ஆனால் பாமக அதே அளவு இடங்களைத்தான் (4 முதல் 6 வரை) பெற முடியும். அதாவது தமிழகத்தின் வட, வட்மேற்குப் பகுதிகளில் உள்ள பாமகவின் செல்வாக்கு பெரிய கட்சிகளுக்கு அவற்றின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் பாமக ஒரு சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருப்பதால் அதனால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை.
சரி. பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதால் பெரிய கட்சிகளுக்கு என்ன லாபம்?
1. முதலில் சொன்னபடி அது 'வெற்றிக் கூட்டணி' என்ற எண்ணம் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மனங்களில் விதைக்கப்படுகிறது. அது அவர்களுக்கு ஓர் மன எழுட்சியைத் தருகிறது. 'நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வெற்றியை 'உணர' (கலாமின் வார்த்தைகளில் சொன்னால் கனவு காண) வேண்டும் என்பது ஒரு நிர்வாக இயல் தத்துவன்.
2.முன்னர் பார்த்தபடி பாமகவின் வாக்கு வங்கி 5-6 சதவீதம். இது மற்ற கட்ட்சியுடன் சேரும் போது வெற்றி வாய்ப்பு மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை எடுத்துக் கொள்வோம்:
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1998 திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மோதின. தனித் தொகுதி என்றாலும் வன்னியர்கள் நிறைந்த தொகுதி. 1998ல் அதிமுக அணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நாகரத்தினம் என்பவர்தான் 1998லும் திமுக வேட்பாளாராகப் போட்டியிட்டார். ஆனால் தோற்றுப் போனார். அதிமுக வேட்பாளர் வென்றார். 1999ல் பாமக திமுக அணிக்குப் போனது. அந்தத் தேர்தலில் திமுக வென்றது. (சதவீதக் கணக்கெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. தகவல் வேண்டுவோர் தனிப்பட மின்னஞ்சல் அனுப்பலாம்)
ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கூட்டணியை மற்றூம் பொறுத்ததல்ல. வேட்பாளர், அலை, தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட பிரசினைகள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. ஆனால் கூட்டணிக் கணக்குகளும் அவசியம்.
பாமகவின் கூட்டணி அறிவிப்பால் யார் யார் எந்த அணி என்பதில் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. இதனால் வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் முடிவுகள் எந்தத் திசையில் போகும் என ஓரளவ்ற்கு ஊகிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட 1998ல் ஏற்பட்டதைப் போன்று அணிகள் பிரிந்திருக்கின்றன. அதனால் பெரும்பாலும் முடிவுகள் அதைப் போல அமையலாம். அந்த முறை அதிமுக அணி அதிக இடங்களைப் பெற்றது.
தொகுதிகள் முடிவானதும் அதைப் பற்றி விரிவாக என்னுடைய கணிப்புக்களை எழுதுகிறேன்
இந்தத் 'தேர்தலை' நடத்த, கட்சி உறுப்பினராக இல்லாத ஒரு மூத்த பத்திரிகையாளரை (தினமணியின் முன்னாள் தலமை செய்தி ஆசிரியர் ராயப்பா) தேர்தல் அதிகாரியாகவும், சில முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர்களை தேர்தல் பார்வையாளராகவும் கொண்டு இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. 'இறுதி முடிவு எடுக்கிற அதிகாரத்தை தலைவருக்கே விட்டுவிடுகிற' உள்கட்சி ஜனநாயகமும், 'கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்குக்
கட்டுப்படுவோம்' என்கிற தொண்டர் விசுவாசமும் நிலவுகிற இன்றைய அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வரவேற்கத்தக்கவை.
டாக்டர் ராமதாசின் முடிவைத்தான் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாற்றுக் கருத்துக்கு (dissent) அவர் இடமளித்திருக்கிறார் என்பதும், திமுக கூட்டணியை அவர் கட்சியில் விரும்பும் சிலர் இருக்கிறார்கள் என்பதை பலிரங்கமாக உலகறியச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கவை. அவர் கூட்டணி விஷயத்தில் நிதானமிழக்காமல் இருந்ததைப் போல கருணாநிதி இந்த மாற்றத்தை எதிர்கொள்ளவில்லை.
இரு தினங்களுக்கு முன் 'கள்ளத் தோணி ஏறிப் போய் சண்டை போடுவதுதானே? யார் தடுக்கிறார்கள்' என்ற எரிச்சல் வெளிப்படும் அவரது அறிக்கை அதைத்தான் காட்டுகிறது.
பாமக ஒரு அணியில் இருப்பது அல்லது அதிலிருந்து மாறுவது என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இந்தக் கேள்வியை விளங்கிக் கொள்ள சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1998ம் ஆண்டு அது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக அணி 28 இடங்களைப் பெற்றது. திமுக அணி 10 இடங்கலைப் பெற்றது. 1999ம் ஆண்டு பாமக திமுக அணிக்கு மாறியது. அந்தத் தேர்தலில் திமுக அணி 25 இடங்களைப் பெற்றது.2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அது அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது அது திமுக அணிக்கு மாறியது தொடர்ந்தது அப்போது அந்தக் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி
கண்டது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுக அணியிலேயே அது தொடர்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது.
அதாவது பாமக எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணி அதிக இடங்களைப் பெறுகிறது. 'ராசியான டாக்டர்' என்று சில அரசியல்வாதிகளே சொல்லக் கேட்டிருக்கிறேன். கைராசியா, காக்கை உட்கார விழுந்த பனம்பழமா என்பதைக் கண்டு பிடிக்க சில கணக்குகளைப் பார்க்க வேண்டும்
1989ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம்
பெறாமல் பாமக 32 வேட்பாளர்களைக் களமிறக்கியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.5.82 சதவீத வாக்குகளைப் பெற்றது. மறுபடிய்ம் 1991ல் தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை 31 வேட்பாளர்கள். ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் மறுபடியும் 5.14 சதவீத வாக்குகள் வாங்கியது. 1991 தேர்தல் ராஜீவ் படுகொலை அலை வீசிய தேர்தல். அப்போதும் அதன் வாக்கு சதவீதம் குறையவில்லை
இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கி 5லிருந்து 6 சதவீதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
1996 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அது கூட்டணி பரிசோதனைகளை மேற்கொண்டது. திமுக அதிமுக இவற்றைத் தவிர்த்து வாழ்ப்பாடி ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய திவாரி காங்கிரஸ் என்ற காங்கிரசிலிருந்து
உடைந்த ஒரு சிறு பிரிவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால் அது தற்கொலை முயற்சியாக முடிந்தது.
வன்னியர்களது வாக்குகள் எல்லாம் அந்த அணிக்கே வந்து விடும் என்ற வாதம் பொய்த்து அது அந்த முறை 2 சதவீத வாக்குகள்தான் பெற்றது. கட்சி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. (எனவே ராசித் தத்துவங்கள் முற்றிலும் சரியல்ல.)
தமிழகத்தில் கழகங்களின் துணையில்லாமல் களம் இறங்குவது ஆபத்தில் முடியும் என்று பாடம் கற்றுக் கொண்டதால் அன்றிலிருந்து ஏதேனும் ஒரு கழகத்துடன் அது கூட்டணி காண்கிறது. அப்போதுதான் அதனால்
அங்கீகாரத்திற்குத் தேவைப்படும் 6 சதவீத அளவை எட்ட முடியும். அதை 1998, 1999, 2004ல் பெற்ற வாக்கு விகிதங்களைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்(6.5%, 8.21% 6.7%) இந்த வாக்கு விகிதம் அதிகரிக்க வேண்டுமானால் அது அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் (மாயாவதியின் BSP அதற்காகத்தான் இந்தியா முழுக்கப் போட்டியிடுகிறது) அப்படிப் போட்டியிட்டாலும் அது அந்த இடங்களில் வெற்றி பெற முடியாது. வாக்கு
விகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அது 1999 தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டது ஆனால் 5 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. (ஆனால் அது அதன் வாக்கு விகிதத்தை அதிகரித்துக் கொண்டது) அதனால்தான் அது ஒவ்வொரு முறையும் அதிக இடங்களைக் கோருகிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் அது வென்ற இடங்களைச் சுட்டிக்காட்டி அதிக இடங்கள் அளிக்க மறுக்கின்றன. கூட்டணி மூலம் அதிகாரத்தை ருசி பார்த்து விட்டதால் பாமக கூட்டணியை விட்டு விடவும் தயங்குகிறது. அல்லது நிறையத்
தொகுதிகளில் போடியிட அதனிடம் போதிய பொருளாதார பலம் இல்லாமல் இருக்கலாம்.
பாமக இருக்கும் கூட்டணி அதிக இடங்களைப் பெறலாம். ஆனால் பாமக அதே அளவு இடங்களைத்தான் (4 முதல் 6 வரை) பெற முடியும். அதாவது தமிழகத்தின் வட, வட்மேற்குப் பகுதிகளில் உள்ள பாமகவின் செல்வாக்கு பெரிய கட்சிகளுக்கு அவற்றின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் பாமக ஒரு சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருப்பதால் அதனால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை.
சரி. பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதால் பெரிய கட்சிகளுக்கு என்ன லாபம்?
1. முதலில் சொன்னபடி அது 'வெற்றிக் கூட்டணி' என்ற எண்ணம் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மனங்களில் விதைக்கப்படுகிறது. அது அவர்களுக்கு ஓர் மன எழுட்சியைத் தருகிறது. 'நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வெற்றியை 'உணர' (கலாமின் வார்த்தைகளில் சொன்னால் கனவு காண) வேண்டும் என்பது ஒரு நிர்வாக இயல் தத்துவன்.
2.முன்னர் பார்த்தபடி பாமகவின் வாக்கு வங்கி 5-6 சதவீதம். இது மற்ற கட்ட்சியுடன் சேரும் போது வெற்றி வாய்ப்பு மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை எடுத்துக் கொள்வோம்:
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1998 திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மோதின. தனித் தொகுதி என்றாலும் வன்னியர்கள் நிறைந்த தொகுதி. 1998ல் அதிமுக அணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நாகரத்தினம் என்பவர்தான் 1998லும் திமுக வேட்பாளாராகப் போட்டியிட்டார். ஆனால் தோற்றுப் போனார். அதிமுக வேட்பாளர் வென்றார். 1999ல் பாமக திமுக அணிக்குப் போனது. அந்தத் தேர்தலில் திமுக வென்றது. (சதவீதக் கணக்கெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. தகவல் வேண்டுவோர் தனிப்பட மின்னஞ்சல் அனுப்பலாம்)
ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கூட்டணியை மற்றூம் பொறுத்ததல்ல. வேட்பாளர், அலை, தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட பிரசினைகள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. ஆனால் கூட்டணிக் கணக்குகளும் அவசியம்.
பாமகவின் கூட்டணி அறிவிப்பால் யார் யார் எந்த அணி என்பதில் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. இதனால் வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் முடிவுகள் எந்தத் திசையில் போகும் என ஓரளவ்ற்கு ஊகிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட 1998ல் ஏற்பட்டதைப் போன்று அணிகள் பிரிந்திருக்கின்றன. அதனால் பெரும்பாலும் முடிவுகள் அதைப் போல அமையலாம். அந்த முறை அதிமுக அணி அதிக இடங்களைப் பெற்றது.
தொகுதிகள் முடிவானதும் அதைப் பற்றி விரிவாக என்னுடைய கணிப்புக்களை எழுதுகிறேன்
Labels:
Elections 2009,
P.M.K,
கூட்டணிகள்,
தேர்தல் 2009,
பா.ம.க
நுணலும் தன் வாயால் கெடும்.......?!!
இரண்டு நாள் முன்பு செய்தி:
"...உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தாம் அரசியல் சூழ்ச்சிக்கு பலியானதாக தெரிவித்துள்ளார். பிலிபித் தொகுதியில் சிறுபான்மையினருக்கு எதிராக தாம் பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சி ஜோடிக்கப்பட்டது எனக் கூறிய அவர், ஆதரமாகக் காட்டப்படும் வீடியோவில் பதிவாகியுள்ள குரல் தன்னுடையது அல்ல என்றார். எனவே மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். தன்னை மதவாதி என்று சாயம்பூசத் திட்டமிட்டுள்ளதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக தாம் தவறான வார்த்தைகள் எதையும் பிரசாரத்தின் போது பயன்படுத்தவில்லை என்றும் வருண் காந்தி கூறியுள்ளார்.
இன்று செய்தி: http://thatstamil.oneindia.in/news/2009/03/25/india-allahabad-hc-dismisses-varun-gandhi.html
"......இதற்கிடையே, தனக்காக குரல் கொடுத்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வருண் காந்தி நன்றி கூறியுள்ளார்.இதுகுறித்து வருண் காந்தி கூறியதாக சிவசேனாவின் சாம்னா இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பால் தாக்கரேவின் ஆதரவால் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நன்றி கூறுகிறேன் என்று வருண் கூறியுள்ளார்.பிலிபித்தில் வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது குறித்து தாக்கரே எழுதிய தலையங்கத்தில், வருண் பேசியது தவறே இல்லை. இப்படி ஒரு காந்திதான் நமக்குத் தேவை என்று பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....."
என் 2 பைசா:
நுணலும் தன் வாயால் கெடும்.......?!!
"...உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தாம் அரசியல் சூழ்ச்சிக்கு பலியானதாக தெரிவித்துள்ளார். பிலிபித் தொகுதியில் சிறுபான்மையினருக்கு எதிராக தாம் பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சி ஜோடிக்கப்பட்டது எனக் கூறிய அவர், ஆதரமாகக் காட்டப்படும் வீடியோவில் பதிவாகியுள்ள குரல் தன்னுடையது அல்ல என்றார். எனவே மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். தன்னை மதவாதி என்று சாயம்பூசத் திட்டமிட்டுள்ளதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக தாம் தவறான வார்த்தைகள் எதையும் பிரசாரத்தின் போது பயன்படுத்தவில்லை என்றும் வருண் காந்தி கூறியுள்ளார்.
இன்று செய்தி: http://thatstamil.oneindia.in/news/2009/03/25/india-allahabad-hc-dismisses-varun-gandhi.html
"......இதற்கிடையே, தனக்காக குரல் கொடுத்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வருண் காந்தி நன்றி கூறியுள்ளார்.இதுகுறித்து வருண் காந்தி கூறியதாக சிவசேனாவின் சாம்னா இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பால் தாக்கரேவின் ஆதரவால் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நன்றி கூறுகிறேன் என்று வருண் கூறியுள்ளார்.பிலிபித்தில் வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது குறித்து தாக்கரே எழுதிய தலையங்கத்தில், வருண் பேசியது தவறே இல்லை. இப்படி ஒரு காந்திதான் நமக்குத் தேவை என்று பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....."
என் 2 பைசா:
நுணலும் தன் வாயால் கெடும்.......?!!
Saturday, March 21, 2009
பூனைகளான சிறுத்தைகள்
முத்துக்குமாரின் மரணத்திற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம் எனக் கடந்த மாதம் கொந்தளித்த திருமாவளன், அந்தக் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியில் அமர உதவி செய்ய முன்வந்.திருக்கிறார்.திமுக கூட்டணியில், (அதாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கக் கோரும் கூட்டணியில்) விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என அறிவித்திருக்கிறார்.
"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது." என ஜவரி 3ம் தேதி முழங்கியவர் திருமாவளவன். இலங்கைப் பிரசினைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் ' வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பொது வேலைத் திட்டமாக இருக்கும் என அறிவித்த திருமாவளவன் அதற்கு நேர் எதிரான முடிவினை எடுத்திருப்பது ஆச்சரியம் தரவில்லை ஆனால் கேள்விகளை எழுப்புகிறது.
அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கே மகிழ்ச்சி தருவதாக இல்லை.நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரசிற்கு எதிரான உணர்வு மேலோங்கியிருந்ததாக திருமாவளவன் தனது செய்தியாளரிடம் தெரிவித்ததை இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அப்படி இருந்தும் திருமாவளவன் காங்கிரசிற்கு ஆதரவான கூட்டணியை நாடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
அவருக்கு வேறு வழியில்லை எனச் சொல்ல முடியாது. அவரோடு நெருக்கமாக இருந்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரை தன்னொடு அதிமுக அணிக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அந்த யோசனையை திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (காண்க தினத்தந்தி அல்லது: http://tinyurl.com/dlshad).
அதிமுக அணியில் ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் உள்ள மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பாமகவும் அந்த அணிக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில் விடுத்லைச் சிறுத்தைகளும் அந்த அணியில் இடம் பெற்றால், 'வரும் நடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது என்ற பொது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கைத் தமிழர் பிரசினையை முன்னிறுத்தி தாது அரசியல் எதிரியான காங்கிரசை விமர்சிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இப்போது அவர் காங்கிரசை விமர்சிக்க முடியாது மெளனம்தான் காக்க வேண்டும்.
இலங்கைப் பிரசினை குறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பைக் கை கழுவி விட்டு மெளனம் காக்கும் நிர்பந்தத்தை ஏன் திருமாவளவன் மேற்கொண்டார்?
ஒருவேளை இலங்கை பிரசினையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ? ஈழத்தமிழர் விவகாரத்தில் ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான்’ என்று கருணாநிதி விளக்கமளித்த பின், 'ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்கிறார் திருமாவளவன். அதாவது மத்திய அரசின் நிலைதான் தனது நிலை என மறைமுகமான வார்த்தைகளில் தெரிவிக்கிறாரோ?
தேர்தலில் இலங்கை பிரசினை பேசப்படாமல் இருப்பது திமுகவிற்கு சாதகமானது என்பதால் கருணாநிதி திருமாவளவனை இந்த முடிவுக்கு நிர்பந்தப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதே கருணாநிதி அரசால், இலங்கைப் பிரசினை தொடர்பான போராட்டத்தால் 26 விடுதலைச் சிறுத்தைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனது தொண்டர்களைக் கைது செய்த அரசின் தலைவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய இரு கட்சிகளும் பிரிய நேர்ந்தால் அது இருகட்சிகளின் தொண்டர்களிடைய ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என செயற்குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்கம் பலவீனப்பட்டு அதன் விளைவாக வன்முறையாக வெடிக்காமல் இருந்தால் நல்லது.
இரண்டு நாடாளுமன்ற இடங்களுக்காக 'எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துரோகத்தை இரண்டு மாதங்களுக்குள் மன்னித்துப்பதற்கும், முத்துக்குமார் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை புறந்தள்ளவும், இலங்கைப் பிரசினையை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டார் திருமாவளவன். அந்த இரண்டு இடங்களில் அவர் ஒன்றில் போட்டியிடவும் போகிறார்.
""பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.
இவர் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சிக்கிறார். இவர் சார்ந்திருக்கும் பேரவை கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சிக்கிறது!
'அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்றெல்லாம் இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் சிறுத்தைகள் பூனைகளாக மாறிப் போவதைக் கண்டு காலம் சிரிக்கிறது
"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது." என ஜவரி 3ம் தேதி முழங்கியவர் திருமாவளவன். இலங்கைப் பிரசினைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் ' வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பொது வேலைத் திட்டமாக இருக்கும் என அறிவித்த திருமாவளவன் அதற்கு நேர் எதிரான முடிவினை எடுத்திருப்பது ஆச்சரியம் தரவில்லை ஆனால் கேள்விகளை எழுப்புகிறது.
அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கே மகிழ்ச்சி தருவதாக இல்லை.நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரசிற்கு எதிரான உணர்வு மேலோங்கியிருந்ததாக திருமாவளவன் தனது செய்தியாளரிடம் தெரிவித்ததை இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அப்படி இருந்தும் திருமாவளவன் காங்கிரசிற்கு ஆதரவான கூட்டணியை நாடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
அவருக்கு வேறு வழியில்லை எனச் சொல்ல முடியாது. அவரோடு நெருக்கமாக இருந்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரை தன்னொடு அதிமுக அணிக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அந்த யோசனையை திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (காண்க தினத்தந்தி அல்லது: http://tinyurl.com/dlshad).
அதிமுக அணியில் ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் உள்ள மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பாமகவும் அந்த அணிக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில் விடுத்லைச் சிறுத்தைகளும் அந்த அணியில் இடம் பெற்றால், 'வரும் நடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது என்ற பொது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கைத் தமிழர் பிரசினையை முன்னிறுத்தி தாது அரசியல் எதிரியான காங்கிரசை விமர்சிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இப்போது அவர் காங்கிரசை விமர்சிக்க முடியாது மெளனம்தான் காக்க வேண்டும்.
இலங்கைப் பிரசினை குறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பைக் கை கழுவி விட்டு மெளனம் காக்கும் நிர்பந்தத்தை ஏன் திருமாவளவன் மேற்கொண்டார்?
ஒருவேளை இலங்கை பிரசினையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ? ஈழத்தமிழர் விவகாரத்தில் ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான்’ என்று கருணாநிதி விளக்கமளித்த பின், 'ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்கிறார் திருமாவளவன். அதாவது மத்திய அரசின் நிலைதான் தனது நிலை என மறைமுகமான வார்த்தைகளில் தெரிவிக்கிறாரோ?
தேர்தலில் இலங்கை பிரசினை பேசப்படாமல் இருப்பது திமுகவிற்கு சாதகமானது என்பதால் கருணாநிதி திருமாவளவனை இந்த முடிவுக்கு நிர்பந்தப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதே கருணாநிதி அரசால், இலங்கைப் பிரசினை தொடர்பான போராட்டத்தால் 26 விடுதலைச் சிறுத்தைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனது தொண்டர்களைக் கைது செய்த அரசின் தலைவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய இரு கட்சிகளும் பிரிய நேர்ந்தால் அது இருகட்சிகளின் தொண்டர்களிடைய ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என செயற்குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்கம் பலவீனப்பட்டு அதன் விளைவாக வன்முறையாக வெடிக்காமல் இருந்தால் நல்லது.
இரண்டு நாடாளுமன்ற இடங்களுக்காக 'எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துரோகத்தை இரண்டு மாதங்களுக்குள் மன்னித்துப்பதற்கும், முத்துக்குமார் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை புறந்தள்ளவும், இலங்கைப் பிரசினையை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டார் திருமாவளவன். அந்த இரண்டு இடங்களில் அவர் ஒன்றில் போட்டியிடவும் போகிறார்.
""பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.
இவர் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சிக்கிறார். இவர் சார்ந்திருக்கும் பேரவை கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சிக்கிறது!
'அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்றெல்லாம் இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் சிறுத்தைகள் பூனைகளாக மாறிப் போவதைக் கண்டு காலம் சிரிக்கிறது
Labels:
Elections 2009,
Thiruma,
இலங்கை பிரசினை,
திருமா,
தேர்தல் 2009
Thursday, March 19, 2009
எம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் பல தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக மாற்றம் பெற்றிருக்கின்ற்ன. எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. இப்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ளவர்களில் சிலர் தொகுதி மாறிப் போட்டியிடக்கூடும் எனச் செய்திகள் உலவுகின்றன. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும், ஆ.ராசா நீலகிரித் தொகுதியிலும் மாறிப் போட்டியிடக் கூடும்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரகுபதி ஆகியோர் தொகுதி மாறிப் போட்டியிடக் கூடும்; சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள்; மணி சங்கர் ஐயருக்கு மீண்டும் மயிலாடுதுறைத் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் எனப் பல செய்திகள் உலவுகின்றன. இப்போது எம்.பி.களாக இருப்பவர்களில் செ.குப்புசாமி, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், சுகவனம், ராணி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது இன்றையத் தேதியில் இவை எல்லாம் ஊகங்களே.
தொகுதிப் பங்கீடு முடிய, வேட்பாளர் பட்டியல வெளியிடப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் ஒரு Quick Survey: (அருகில் உள்ள பெட்டிகளில் வாக்களியுங்கள்)
தொகுதிப் பங்கீடு முடிய, வேட்பாளர் பட்டியல வெளியிடப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் ஒரு Quick Survey: (அருகில் உள்ள பெட்டிகளில் வாக்களியுங்கள்)
Labels:
Elections 2009,
Opinion Poll,
கருத்துக் கணிப்பு,
தமிழ்நாடு,
தேர்தல் 2009
Saturday, March 14, 2009
எங்கள் ஓட்டு Open Sourceக்கே!
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திறவூற்றில் (open source) அமைந்த மென்பொருட்களைப் பயன்படுத்தப்போவதாக பாஜக இன்று வெளியிட்ட தனது தகவல் தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வை (IT Vision Document) ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
கடந்தமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அன்றைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிரமோத் மகாஜன், எல்லாவிதங்களிலும் மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை ஆதரித்ததோடு மட்டுமல்லால், லினக்ஸ் ஆதரவாளர்களைக் கடிந்து கொள்ளவும் செய்தார். இன்று பாஜக அதற்கு நேர் எதிரான நிலையை அறிவித்திருக்கிறது.
இன்று கட்சியின் கணினி சம்பந்தப்பட்ட அலுவல்களில் திறவூற்று மென் பொருட்களையே பாஜக பயன்படுத்தி வருகிறது. மேலை நாடுகள் சில சில்ல்றைத் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதற்கு ராயல்டி என்ற பெயரில் நம்மிடம் கொள்ளைப் பணம் கறக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்போவதாகவும் டிஜிட்டல் இறையாண்மையைக் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்திருக்கிறது பாஜக.
அட பரவாயில்லையே, நம் அரசியல் கட்சிகள் இதைப் பற்றியெல்லாம் கூட யோசிக்கிறார்களா?
கடந்தமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அன்றைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிரமோத் மகாஜன், எல்லாவிதங்களிலும் மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை ஆதரித்ததோடு மட்டுமல்லால், லினக்ஸ் ஆதரவாளர்களைக் கடிந்து கொள்ளவும் செய்தார். இன்று பாஜக அதற்கு நேர் எதிரான நிலையை அறிவித்திருக்கிறது.
இன்று கட்சியின் கணினி சம்பந்தப்பட்ட அலுவல்களில் திறவூற்று மென் பொருட்களையே பாஜக பயன்படுத்தி வருகிறது. மேலை நாடுகள் சில சில்ல்றைத் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதற்கு ராயல்டி என்ற பெயரில் நம்மிடம் கொள்ளைப் பணம் கறக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்போவதாகவும் டிஜிட்டல் இறையாண்மையைக் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்திருக்கிறது பாஜக.
அட பரவாயில்லையே, நம் அரசியல் கட்சிகள் இதைப் பற்றியெல்லாம் கூட யோசிக்கிறார்களா?
Labels:
BJP,
IT Vision Document,
Open Source,
திறவூற்று மென்பொருட்கள்,
பாஜக
Thursday, March 12, 2009
Tamil Nadu MP in Lok Sabha: லோக் சபாவில் தமிழக எம்.பி.க்கள்
முந்தைய பதிவு: வாயில்லாப் பூச்சி எம்.பி.க்கள்
~oOo~
MPs performance in Lok Sabha 2004
Debates Participated, Questions Asked and Attendance Indian General Elections
எம்.பி.யின் பெயரை சுட்டினால் லோக் சபா வலையகத்தில் இருக்கும் விவரம் கிடைக்கும்.
தொகுதியை க்ளிக்கினால் தட்ஸ்தமிழ் அலசலுக்கு இட்டுச் செல்லும். (விரைவில் முழுமை பெறும்)
State/UT | Average debates | Average questions | Average number of private member bills presented | Parliament attendance |
---|---|---|---|---|
Tamil Nadu | 34 | 122 | 0.3 | 71% |
National Average/Total | 30 | 169 | 0.6 | 69% |
ஒப்பீடாக தமிழ் நாட்டை விடக் குறைந்த உறுப்பினர்கள் கொண்ட கேரளா போன்ற மாநிலத்துடன் இந்த எண்களை சரிபார்க்கலாம்.
~oOo~
MPs performance in Lok Sabha 2004
Debates Participated, Questions Asked and Attendance Indian General Elections
எம்.பி.யின் பெயரை சுட்டினால் லோக் சபா வலையகத்தில் இருக்கும் விவரம் கிடைக்கும்.
தொகுதியை க்ளிக்கினால் தட்ஸ்தமிழ் அலசலுக்கு இட்டுச் செல்லும். (விரைவில் முழுமை பெறும்)
Name / பெயர் | Constituency / மறுசீரமைப்புக்குப் பின்? | தொகுதி | Party / கட்சி | Debates Participated / பங்கு கொண்ட விவாதங்கள் | Private Member Bills / தனி நபர் மசோதா | Questions asked / கேள்வி நேரம் | Attendance / வருகை | Notes / Comments |
M. Ramadass | Pondicherry | பாண்டிச்சேரி | PMK | 151 | 0 | 380 | 94% | - |
A.K. Moorthy | Chengalpattu / காஞ்சிபுரம் | செங்கல்பட்டு | PMK | 0 | 0 | 134 | 62% | - |
A. Krishnaswamy | Sriperumbudur / திருவள்ளூர் | ஸ்ரீபெரும்புதூர் | DMK | 64 | 1 | 9 | 84% | - |
A.K.S. Vijayan | Nagapattinam | நாகப்பட்டினம் | DMK | 24 | 0 | 0 | 53% | - |
Andimuthu Raja | Perambalur | பெரம்பலூர் | DMK | * | * | * | * | - |
A. Ravichandran Sippiparai | Sivakasi | சிவகாசி | MDMK | 66 | 0 | 224 | 88% | - |
A.V. Bellarmin | Nagercoil | நாகர்கோயில் | CPI(M) | 69 | 0 | 161 | 85% | - |
C. Krishnan | Pollachi | பொள்ளாச்சி | MDMK | 48 | 0 | 0 | 89% | - |
C. Kuppusami | Chennai North | சென்னை (வடக்கு) | DMK | 31 | 0 | 50 | 81% | - |
Danapal Venugopal | Tiruppattur / திருவண்ணாமலை | திருப்பத்தூர் | DMK | 29 | 0 | 0 | 62% | - |
Dayanidhi Maran | Chennai Central | மத்திய சென்னை | DMK | 1 | 0 | 0 | 10% | Served as minister between May-04 and 13-May-07 |
Dhanuskodi Athithan | Tirunelveli | திருநெல்வேலி | INC | 14 | 0 | 121 | 66% | - |
E.G. Sugavanam | Krisnagiri | கிருஷ்ணகிரி | DMK | 28 | 0 | 520 | 71% | - |
E. Ponnuswamy | Chidambaram | சிதம்பரம் | PMK | 21 | 0 | 199 | 89% | - |
E.V.K.S. Elangovan | Gobichettipalayam / ஈரோடு, திருப்பூர் | கோபி செட்டிப் பாளையம் | INC | * | * | * | * | - |
Gingee N Ramachandran | Vandavasi / ஆரணி | வந்தவாசி | MDMK | 5 | 4 | 0 | 33% | - |
J.M. Aaron Rashid | Periyakulam | பெரியகுளம் | INC | 66 | 0 | 286 | 71% | - |
Kannusamy Venkatapathy | Cuddalore | கடலூர் | DMK | * | * | * | * | - |
K.C . Pallani Shamy | Karur | கரூர் | DMK | 13 | 0 | 614 | 64% | - |
K. Dhanaraju | Tindivanam / விழுப்புரம் | திண்டிவனம் | PMK | 41 | 0 | 317 | 64% | - |
K.M. Kader Mohideen | Vellore | வேலூர் | DMK | 25 | 0 | 5 | 64% | - |
K. Rani | Rasipuram / கள்ளக்குறிச்சி | ராசிபுரம் | INC | 14 | 0 | 14 | 71% | - |
K. Subbarayan | Coimbatore | கோயம்புத்தூர் | CPI | 17 | 0 | 173 | 72% | - |
K.V. Thangka Balu | Salem | சேலம் | INC | 21 | 0 | 0 | 76% | - |
L. Ganesan | Tiruchirappalli | திருச்சி | MDMK | 17 | 0 | 30 | 40% | - |
Mani Shankar Aiyar | Mayiladuturai | மயிலாடுதுறை | INC | * | * | * | * | - |
M. Appadurai | Tenkasi | தென்காசி | CPI | 45 | 0 | 311 | 91% | - |
Mohan Ponnuswamy | Madurai | மதுரை | CPI(M) | 82 | 0 | 187 | 71% | - |
M.S. K. Bhavani Rajenthiran | Ramanathapuram | ராமநாதபுரம் | DMK | 30 | 0 | 2 | 77% | - |
N.S.V. Chitthan | Dindigul | திண்டுக்கல் | INC | 63 | 0 | 193 | 88% | - |
Palaniappan Chidambaram | Sivaganga | சிவகங்கை | INC | * | * | * | * | - |
Raman Senthil | Dharmapuri | தர்மபுரி | PMK | 30 | 6 | 67 | 81% | |
ஆர் வேலு / Rangasamy Velu | Arakkonam | அரக்கோணம் | PMK | * | * | * | * | - |
ஆர் பிரபு / R. Prabhu | Nilgiris | நீலகிரி | INC | 10 | 0 | 12 | 56% | - |
Salarapatty Kuppusamy Kharventhan | Palani | பழனி | INC | 177 | 2 | 1108 | 79% | - |
சேவுகன் ரகுபதி / Sevugan Regupathy | Pudukkottai | புதுக்கோட்டை | DMK | * | * | * | * | - |
எஸ் எஸ் பழனிமாணிக்கம் / S.S. Palanimanickam | Thanjavur | தஞ்சாவூர் | DMK | * | * | * | * | - |
சுப்புலஷ்மி ஜகதீசன் / Subbulakshmi Jagadeesan | Tiruchengode | திருச்செங்கோடு | DMK | * | * | * | * | - |
Thalikkottai Rajuthevar Baalu | Chennai South | தென் சென்னை | DMK | * | * | * | * | - |
வி ராதிகா செல்வி / V. Radhika Selvi | Tiruchendur | திருச்செந்தூர் | DMK | 21 | 0 | 4 | 68% | Became minister on 18-May-07 |
Wednesday, March 11, 2009
2004 Therthal: இன்றும் பொருத்தமான பழைய அலசல்
வெங்கடேஷ்
இப்படிப் பார்ப்பது சரியா?
நான் மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்து பார்க்கிறவர்களிடமெல்லாம், அதிகம் பதட்டமில்லாமல் ஒரு கேள்வி கேட்கிறேன்.
"யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள்?"
ஒரு கணம் திகைத்துப் போவேன்.
"இது மத்திய அரசுக்கான தேர்தலாச்சே, கருணாநிதியா டெல்லி போகப்போறாரு?"
எதிராளி கொஞ்சம் யோசிப்பார்.
பல மாநிலங்களில் இதுதான் நிலைமையாக இருக்கவேண்டும். மாநில அரசியல்தான் முதன்மைப்பட்டுப் போயிருக்கிறது. மாநிலப் பிரச்சினைகளும், கவலைகளும்தான் முக்கியமாகியிருக்கிறது. அதில் உள்ள சாதனைகளும், கோபங்களும்தான் தேர்தல்களில் பிரதிபலித்து வருகின்றது.
முதலில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, இந்த அந்நியர் பிரச்சினையைத்தான் சில நாள்கள் தொடர்ந்து பேசினார். பின்னர், எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லையென்றவுடன்தான், வேறு செய்திகளைச் சொல்லி வருகிறார். அதுவும் உள்ளுர் விஷயம். கருணாநிதி எதிர்ப்பு, குடும்ப அரசியல் என்ற விஷயங்களையே இப்போது தொடுகிறார்.
குறிப்பு இதுதான். மக்களால், ஜெ. பேசும் விஷயங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. சோனியா தெரியவில்லை. அவர் அந்நியர் நாட்டவர் என்பதோ, ராஜிவ் காந்தியின் மனைவி என்பதோ எல்லாம் மக்களிடம் போய் சேரவில்லை. அதனால், அது காற்றில் குத்து விடுவது போல் இருந்திருக்க வேண்டும். கலைஞர் கண்ணுக்குத் தெரிந்தவர். அவரைக் குத்துவது, எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
கலைஞருக்கு வேறு பிரச்சினை. அவரும் சோனியாவைப் முதன்மைப்படுத்தி பேச மாட்டேன் என்கிறார். உள்ளுர் பிரச்சினையான தண்ணீர், காலி குடங்களைப் பற்றிப் பேசுகிறார். தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க தவறிய ஜெ. பற்றி பேசுகிறார்.
வாஜ்பேயியை எதிர்க்க முடியவில்லை. தேர்தலுக்குப் பின் என்னவாகுமோ என்ற எண்ணம் ஆட்டிப் படைக்கிறது. முடிந்ததெல்லாம் அத்வானியை எதிர்ப்பதுதான். முடிந்தவரை மதச்சார்பின்மை கூட்டணி என்று சொல்லி வருகிறார்.
ஆக, இங்கே சோனியாவோ, வாஜ்பேயியோ பிரச்சினை அல்ல. தேர்ந்தெடுக்கப்படப் போவது, கருணாநிதியோ, ஜெயலலிதாவோதான்.
நிலைமை எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆவது என்று இதைத்தான் சொல்வார்களோ?
~oOo~
தேர்தல் நிதி
நான் திருவல்லிக்கேணி வாசி. தண்ணீர் பஞ்சம் கூடப் பிறந்தது. புது அடுக்ககத்தில் ஒரு தீப்பெட்டி வாங்கிக்கொண்டு குடியேறியபோது, வழக்கம்போல் தண்ணீர் போதவில்லை. பூமிக்குள் நீளக் கைவிட்டு, கடல்நீரை எடுத்துவிடலாம் என்று அடுக்கக பிரகஸ்பதிகள் சொல்ல, நான் ஒரு போர்வெல் காரனைக் கூப்பிட்டிருந்தேன்.
வாசலில் ஒரு பெரிய லாரி வந்து நின்று, குறிக்கப்பட்ட இடத்தில் ஒரு முக்கோண இயந்திரத்தை நிறுத்தி, பூமியை குத்தத் தொடங்கியபோது, வாசலில் ஸ்டைலாக சர்க்கென்று ஹீரோ ஹோண்டா வந்து நின்றது.
"யாரக் கேட்டு போர் போடறீங்க?"
வண்டியில் உட்கார்ந்துகொண்டு ஒரு அதட்டல்.
"யாரக் கேக்கணும்?"
"கார்ப்ரெஷன் ஏ.ஈ.கிட்ட சொன்னீங்களா? பர்மிஷன் வாங்கினீங்களா?"
நான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். ஏற்கனவே பார்த்தவர்தான். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர். ஓட்டுக் கேட்டு வந்தபோது பார்த்திருக்கிறேன். வெள்ளை சட்டை. பாக்கெட்டில் செருகியிருந்த பேனாவின் முனையில் அம்மா பளிச்சென்று சிரித்தார்.
"பர்மிஷன் வாங்கணும்னு எனக்குத் தெரியாது சார். சொல்லுங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்" என்றேன்.
"இது கூடத் தெரியாம, நீ என்ன படிச்சவன்?"
நான் லேசாகச் சிரித்துகொண்டேன்.
"முதல்ல நிறுத்துச் சொல்லுங்க. ஏ.ஈ. கிட்ட இல்லன்னா, எங்கிட்டயாவது சொல்லியிருக்கணுமில்லையா?"
அவர் குரலில் தெரிந்த வேகம், அதிகாரம் என்னைக் கொஞ்சம் எரிச்சலூட்டியது. மெல்ல, சில நிமிடங்களில் என் சரக்கை எடுத்துச் சொன்னேன். வண்டியை விட்டு இறங்கினார்.
"உங்களுக்குத் தெரியாதது இல்ல சார்...திடீர் திடீர்னு கூட்டம்ங்கறாங்க. அம்மா வராங்க. 100பேரக் கூட்டிட்டு வாங்கறாங்க.. எங்க போறது சார். சாப்பாடு போட்டு பொடவ குடுத்து கூட்டிணு போற செலவெல்லாம் நம்மளுதான்... உங்கள மாதிரி ஆளுங்கதான் பார்த்து செய்யணும். இந்த வட்டத்துல ஜெயிக்க, 4 லட்ச ரூபா செலவு பண்ணியிருக்கேன்.. எப்படி சம்பாதிக்கறது சார்..."
இதுதான் உண்மை செலவு. வட்டியும் முதலுமாய் எப்படியும் அதை அறுவடை செய்தே தீரவேண்டும் என்ற உந்துதல் இருக்கத்தானே செய்யும்.
யோசிக்கவே முடியவில்லை. தமிழகத்தில் இரண்டு கூட்டணிகளும் செய்யும் செலவுக்கு நிச்சயம் உண்மை கணக்கு கிடைக்கப் போவதில்லை. தி.மு.க, தன் கட்சியில் சீட் வேண்டுமென்றால், 60 லட்சம் டெபாசிட் கட்டிவிட்டு, சீட் கேளு என்றது (இப்போது அப்படி ஒன்றும் நடக்கவே இல்லையென்று கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்).
அப்படிக் கட்ட முடியாமல், வாய்ப்பு கைநழுவிப் போன ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். மாலை முழுவதும் புலம்பித் தள்ளிவிட்டார். பல்லாண்டு உறுப்பினர். தலைவர் சொன்னார் என்று, தேர்தல் நிதியாக பெரும் தொகையைத் திரட்டிக்கொடுத்தவர்.
தி.மு.க. தேர்தல் நிதியாக கிட்டத்தட்ட 30 கோடி திரட்டியிருக்கிறது. அதை இந்தத் தேர்தலில்தானே செலவு செய்யவேண்டும்? பின் எதற்கு மேலும் ஒவ்வொரு வேட்பாளரும் 60 லட்சம் கட்டவேண்டும் என்ற கேள்வி எழாமலில்லை. தி.மு.க.வுக்குள் எழுந்த இந்த நிதி சலசலப்பு இப்போது கொஞ்சம் அடங்கியிருக்கிறது.
அ.தி.மு.க தேர்தல் செலவு பற்றி மற்றொருவர் சொன்னபோது, நான் லேசாக அதிர்ந்துபோனேன். ஒவ்வொரு ஒன்றியச் செயலாளருக்கும் 3 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு பகுதியை அவர் வைத்துக்கொண்டு மீதியைக் கொண்டு தேர்தல் வேலை பார்க்கப் பணிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் ஆடிப்போய்விட்டேன்.
ஒன்று மட்டும் உண்மை. இரண்டு பக்கமும் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யப் போகிறார்கள். எல்லாம் கணக்கு வழக்கற்ற பணம். இதுதான் சமயம் என்று அதில் முங்கி எழுகிறவர்கள் ஒரு பக்கம் என்றால், இதில் உள்ள நியாயங்களை மற்றொருவர் எனக்கு விளக்கினார்... அது அடுத்த பகுதி.
~oOo~
அரசியலை விமர்சிக்க நமக்குத் தகுதியுண்டா?
விடிகாலை. நடப்பதற்காக கடற்கரைக்குப் போக, ஒரு கூட்டம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. அருகே நெருங்கிப் போக, முதுகில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி.சர்ட்டுகள் அணிந்த கட்சிக்காரர்கள். கடற்கரையின் நடைபாதையை அடைத்துக்கொண்டு மெல்ல நகரும் கூட்டம். யாரென்று புரியாமல், நானும் விறுவிறுவென நடந்துபோகத் தொடங்கினேன்.
எனக்கு முன் போனவர்களும் சரி, பின்னார் வருபவர்களும் சரி, அந்தக் கூட்டத்தை லாவகமாய்த் தவிர்த்துவிட்டு, வளைந்து சட்டென கூட்டத்தின் முன்னே போய், மீண்டும் தம் அன்றாட உடல்நலத்தைப் பேணும் அவசரத்தில் வேர்க்க விறுவிறுக்க நடந்துகொண்டிருந்தனர். நின்று பார்த்தவர்கள் நானும் ஒருவன்.
டி.ஆர். பாலு. எங்கள் தொகுதி மக்களவை வேட்பாளர். பக்கத்தில் உசேன். திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. நின்று கைகுலுக்க, 'படிச்சு பாருங்க சார்' என்று ஒரு துண்டறிக்கையைக் கொடுத்தார் பாலு. என்னைப் போல் ஓரம் நின்றுகொண்டிருந்தவர்கள், தெரிந்த ஒன்றிரண்டு முகங்களோடு கைகுலுக்கியபடி அவர் நடந்துகொண்டிருந்தார்.
துண்டறிக்கையை நான் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன். பலர், அப்படியே ஓரம் போட்டுவிட்டு நடையைக் கட்டினர். இன்னும் சிலர், தமக்கு இதெல்லாம் அநாவசியம் என்பதுபோல், முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிந்தனர்.
நிம்மதியா கூட நடக்க விட மாட்டேங்கறாங்க.. இங்கியும் வந்துடறாங்க
எனக்குப் பின்னால் வந்த மாமி, அடிக்குரலில் மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சில நொடிகளில் என்னைக் கடந்து மேலும் உடல்நலம் காக்க, ஓட்டமாக நடையைப் பயின்றுகொண்டிருந்தனர்.
மற்றொரு காட்சி. எங்கள் அடுக்ககத்தின் வாயிலில் கூட்டம். எம்ஜிஆர் திரைப்படப் பாடல்கள் யார் வருகிறார் என்பதற்குக் கட்டியம் கூறின. வாசலில் போய் நின்றுகொண்டேன்.
ஒரு திறந்த ஜீப்பில் பதர் சையது. அதிமுக தென்சென்னை வேட்பாளர். பக்கத்தில் டி.ஜெயக்குமார். சிரிக்கலாமா வேண்டாமா, கைகூப்ப வேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் பதர் சையது தேமே என்று உயர்ந்து நின்ற அடுக்ககங்களைப் பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார். அமைச்சர் ஜெயக்குமார்தான் அம்மா புகழ் பாடி ஓட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.
கல்யாண ஊர்வலமாக இருந்தாலும் சரி, இழவு ஊர்வலமாக இருந்தாலும் சரி, பெருமாள் புறப்பாடாக இருந்தாலும் சரி, வெறுமனே எட்டிப் பார்க்கும் அடுக்கக முகங்கள் இப்போதும், பதர் சையதைப் பார்த்துக்கொண்டிருந்தன.
ஜெயலலிதா ஸ்கூல் ·பிரெண்டாம்..
புடைவை நன்னா அழகா இருக்கு இல்ல...
ஜீப் எங்கள் ஏரியாவின் புகழ்பெற்ற மீனவ 'நகர்'களின் உள்ளே நுழைய, அனைத்து முகங்களும் தம் வேலையைப் பார்க்கத் திரும்பிவிட்டன. ஆனால், ஜீப்போடு வந்தவர்கள், 'நகர்'களுக்கு உள்ளே போனதும், பட்டாசு வெடித்து, சரங்கள் கொளுத்தி, ஆரத்தி எடுத்து, கொண்டாட்டமாய் வரவேற்கத் தொடங்கினர். மணமகள் ஊர்வலம்போல், வாத்தியங்கள் முழங்க, அபாரமான ஏற்பாடுகள்.
நான் இரவு பகலாக உழைக்கிறேன், எவனோ புண்ணியவான் என் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பு கொடுத்து, வேலைகொடுத்திருக்கிறான். அவன் சோறு போடுகிறான். பின் நான் எதற்கு உனக்கு (அரசுக்கு) மதிப்பு தரவேண்டும்? உன்னிடம் நான் எதற்காகவும் வந்து நிற்கத் தயாரில்லை. நிலைமைகள் மாறிவிட்டன பாஸ்!!!
கடந்த பல தேர்தல்களில் வாக்குச் சதவிகிதம் குறைந்து வந்ததற்கு இதுவே முக்கியக் காரணம். இந்தியாவின் புகழ்மிக்க மத்திய வர்க்கமும் அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டது. கணினியும் தொழில்நுட்பமும் அவர்கள் பார்வையை மேல்நோக்கி உயர்த்திவிட, நாடாளுபவர்கள் நாசமாகப் போகக் கடவது என்ற விட்டுவிட்டார்கள்!!!
மிச்சமிருப்பது, தினக்கூலிகள், ஆலை உழைப்பாளர்கள், சிறு சிறு வேலைகள் செய்வோர் அடங்கிய அன்றாடம் காய்ச்சிகள். அவர்கள்தான் இன்னும் அரசையும் அரசியலாளர்களையும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். கூட்டம் கூட்டினால் பேச்சைக் கேட்க வருகிறார்கள். கையில் தலைவரின் முகத்தை பச்சைக் குத்திக்கொள்கிறார்கள். ஓட்டுச் சாவடிக்குப் போய், வெயிலில் நின்று தம் ஓட்டைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
இதுதான் உண்மை.
மத்தியதர வர்க்கம், செளகரியத்திலும், வெட்டிப்பேச்சிலும் செயலின்மையிலும் ஆழ்ந்துகிடக்கிறது. உண்மையில், நமக்கெல்லாம், இந்த அரசை விமர்சிக்க தகுதியே இல்லை.
வெங்கடேஷ்
இப்படிப் பார்ப்பது சரியா?
நான் மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்து பார்க்கிறவர்களிடமெல்லாம், அதிகம் பதட்டமில்லாமல் ஒரு கேள்வி கேட்கிறேன்.
"யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள்?"
"கருணாநிதிக்கு... "
ஒரு கணம் திகைத்துப் போவேன்.
"இது மத்திய அரசுக்கான தேர்தலாச்சே, கருணாநிதியா டெல்லி போகப்போறாரு?"
எதிராளி கொஞ்சம் யோசிப்பார்.
பல மாநிலங்களில் இதுதான் நிலைமையாக இருக்கவேண்டும். மாநில அரசியல்தான் முதன்மைப்பட்டுப் போயிருக்கிறது. மாநிலப் பிரச்சினைகளும், கவலைகளும்தான் முக்கியமாகியிருக்கிறது. அதில் உள்ள சாதனைகளும், கோபங்களும்தான் தேர்தல்களில் பிரதிபலித்து வருகின்றது.
உண்மையில் மத்திய அரசைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் தோன்றவில்லையோ என்று எனக்கு எண்ணம் உண்டு. நாளுக்கு நாள் நாம் உள்ளுர் அரசியலில் முழ்கிக்கொண்டிருக்கிறோம். தேசியத் தலைவர்கள் என்றோ, தலைமை என்றோ எல்லாம் யோசிக்கிறோமா என்று தெரியவில்லை. அதனால்தான், தமிழகத்தில் கூட, சோனியா காந்தி அந்நிய நாட்டவர் என்ற பிரச்சாரம் எடுபட மாட்டேன் என்கிறது.
முதலில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, இந்த அந்நியர் பிரச்சினையைத்தான் சில நாள்கள் தொடர்ந்து பேசினார். பின்னர், எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லையென்றவுடன்தான், வேறு செய்திகளைச் சொல்லி வருகிறார். அதுவும் உள்ளுர் விஷயம். கருணாநிதி எதிர்ப்பு, குடும்ப அரசியல் என்ற விஷயங்களையே இப்போது தொடுகிறார்.
குறிப்பு இதுதான். மக்களால், ஜெ. பேசும் விஷயங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. சோனியா தெரியவில்லை. அவர் அந்நியர் நாட்டவர் என்பதோ, ராஜிவ் காந்தியின் மனைவி என்பதோ எல்லாம் மக்களிடம் போய் சேரவில்லை. அதனால், அது காற்றில் குத்து விடுவது போல் இருந்திருக்க வேண்டும். கலைஞர் கண்ணுக்குத் தெரிந்தவர். அவரைக் குத்துவது, எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
கலைஞருக்கு வேறு பிரச்சினை. அவரும் சோனியாவைப் முதன்மைப்படுத்தி பேச மாட்டேன் என்கிறார். உள்ளுர் பிரச்சினையான தண்ணீர், காலி குடங்களைப் பற்றிப் பேசுகிறார். தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க தவறிய ஜெ. பற்றி பேசுகிறார்.
வாஜ்பேயியை எதிர்க்க முடியவில்லை. தேர்தலுக்குப் பின் என்னவாகுமோ என்ற எண்ணம் ஆட்டிப் படைக்கிறது. முடிந்ததெல்லாம் அத்வானியை எதிர்ப்பதுதான். முடிந்தவரை மதச்சார்பின்மை கூட்டணி என்று சொல்லி வருகிறார்.
ஆக, இங்கே சோனியாவோ, வாஜ்பேயியோ பிரச்சினை அல்ல. தேர்ந்தெடுக்கப்படப் போவது, கருணாநிதியோ, ஜெயலலிதாவோதான்.
நிலைமை எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆவது என்று இதைத்தான் சொல்வார்களோ?
~oOo~
தேர்தல் நிதி
நான் திருவல்லிக்கேணி வாசி. தண்ணீர் பஞ்சம் கூடப் பிறந்தது. புது அடுக்ககத்தில் ஒரு தீப்பெட்டி வாங்கிக்கொண்டு குடியேறியபோது, வழக்கம்போல் தண்ணீர் போதவில்லை. பூமிக்குள் நீளக் கைவிட்டு, கடல்நீரை எடுத்துவிடலாம் என்று அடுக்கக பிரகஸ்பதிகள் சொல்ல, நான் ஒரு போர்வெல் காரனைக் கூப்பிட்டிருந்தேன்.
வாசலில் ஒரு பெரிய லாரி வந்து நின்று, குறிக்கப்பட்ட இடத்தில் ஒரு முக்கோண இயந்திரத்தை நிறுத்தி, பூமியை குத்தத் தொடங்கியபோது, வாசலில் ஸ்டைலாக சர்க்கென்று ஹீரோ ஹோண்டா வந்து நின்றது.
"யாரக் கேட்டு போர் போடறீங்க?"
வண்டியில் உட்கார்ந்துகொண்டு ஒரு அதட்டல்.
"யாரக் கேக்கணும்?"
"கார்ப்ரெஷன் ஏ.ஈ.கிட்ட சொன்னீங்களா? பர்மிஷன் வாங்கினீங்களா?"
நான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். ஏற்கனவே பார்த்தவர்தான். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர். ஓட்டுக் கேட்டு வந்தபோது பார்த்திருக்கிறேன். வெள்ளை சட்டை. பாக்கெட்டில் செருகியிருந்த பேனாவின் முனையில் அம்மா பளிச்சென்று சிரித்தார்.
"பர்மிஷன் வாங்கணும்னு எனக்குத் தெரியாது சார். சொல்லுங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்" என்றேன்.
"இது கூடத் தெரியாம, நீ என்ன படிச்சவன்?"
நான் லேசாகச் சிரித்துகொண்டேன்.
"முதல்ல நிறுத்துச் சொல்லுங்க. ஏ.ஈ. கிட்ட இல்லன்னா, எங்கிட்டயாவது சொல்லியிருக்கணுமில்லையா?"
அவர் குரலில் தெரிந்த வேகம், அதிகாரம் என்னைக் கொஞ்சம் எரிச்சலூட்டியது. மெல்ல, சில நிமிடங்களில் என் சரக்கை எடுத்துச் சொன்னேன். வண்டியை விட்டு இறங்கினார்.
"உங்களுக்குத் தெரியாதது இல்ல சார்...திடீர் திடீர்னு கூட்டம்ங்கறாங்க. அம்மா வராங்க. 100பேரக் கூட்டிட்டு வாங்கறாங்க.. எங்க போறது சார். சாப்பாடு போட்டு பொடவ குடுத்து கூட்டிணு போற செலவெல்லாம் நம்மளுதான்... உங்கள மாதிரி ஆளுங்கதான் பார்த்து செய்யணும். இந்த வட்டத்துல ஜெயிக்க, 4 லட்ச ரூபா செலவு பண்ணியிருக்கேன்.. எப்படி சம்பாதிக்கறது சார்..."
இதுதான் உண்மை செலவு. வட்டியும் முதலுமாய் எப்படியும் அதை அறுவடை செய்தே தீரவேண்டும் என்ற உந்துதல் இருக்கத்தானே செய்யும்.
கார்ப்பரெஷன் தேர்தலுக்கே இப்படியென்றால், மக்களவைத் தேர்தலுக்கு...?
யோசிக்கவே முடியவில்லை. தமிழகத்தில் இரண்டு கூட்டணிகளும் செய்யும் செலவுக்கு நிச்சயம் உண்மை கணக்கு கிடைக்கப் போவதில்லை. தி.மு.க, தன் கட்சியில் சீட் வேண்டுமென்றால், 60 லட்சம் டெபாசிட் கட்டிவிட்டு, சீட் கேளு என்றது (இப்போது அப்படி ஒன்றும் நடக்கவே இல்லையென்று கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்).
அப்படிக் கட்ட முடியாமல், வாய்ப்பு கைநழுவிப் போன ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். மாலை முழுவதும் புலம்பித் தள்ளிவிட்டார். பல்லாண்டு உறுப்பினர். தலைவர் சொன்னார் என்று, தேர்தல் நிதியாக பெரும் தொகையைத் திரட்டிக்கொடுத்தவர்.
தி.மு.க. தேர்தல் நிதியாக கிட்டத்தட்ட 30 கோடி திரட்டியிருக்கிறது. அதை இந்தத் தேர்தலில்தானே செலவு செய்யவேண்டும்? பின் எதற்கு மேலும் ஒவ்வொரு வேட்பாளரும் 60 லட்சம் கட்டவேண்டும் என்ற கேள்வி எழாமலில்லை. தி.மு.க.வுக்குள் எழுந்த இந்த நிதி சலசலப்பு இப்போது கொஞ்சம் அடங்கியிருக்கிறது.
அ.தி.மு.க தேர்தல் செலவு பற்றி மற்றொருவர் சொன்னபோது, நான் லேசாக அதிர்ந்துபோனேன். ஒவ்வொரு ஒன்றியச் செயலாளருக்கும் 3 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு பகுதியை அவர் வைத்துக்கொண்டு மீதியைக் கொண்டு தேர்தல் வேலை பார்க்கப் பணிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் ஆடிப்போய்விட்டேன்.
ஒன்று மட்டும் உண்மை. இரண்டு பக்கமும் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யப் போகிறார்கள். எல்லாம் கணக்கு வழக்கற்ற பணம். இதுதான் சமயம் என்று அதில் முங்கி எழுகிறவர்கள் ஒரு பக்கம் என்றால், இதில் உள்ள நியாயங்களை மற்றொருவர் எனக்கு விளக்கினார்... அது அடுத்த பகுதி.
~oOo~
அரசியலை விமர்சிக்க நமக்குத் தகுதியுண்டா?
விடிகாலை. நடப்பதற்காக கடற்கரைக்குப் போக, ஒரு கூட்டம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. அருகே நெருங்கிப் போக, முதுகில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி.சர்ட்டுகள் அணிந்த கட்சிக்காரர்கள். கடற்கரையின் நடைபாதையை அடைத்துக்கொண்டு மெல்ல நகரும் கூட்டம். யாரென்று புரியாமல், நானும் விறுவிறுவென நடந்துபோகத் தொடங்கினேன்.
எனக்கு முன் போனவர்களும் சரி, பின்னார் வருபவர்களும் சரி, அந்தக் கூட்டத்தை லாவகமாய்த் தவிர்த்துவிட்டு, வளைந்து சட்டென கூட்டத்தின் முன்னே போய், மீண்டும் தம் அன்றாட உடல்நலத்தைப் பேணும் அவசரத்தில் வேர்க்க விறுவிறுக்க நடந்துகொண்டிருந்தனர். நின்று பார்த்தவர்கள் நானும் ஒருவன்.
டி.ஆர். பாலு. எங்கள் தொகுதி மக்களவை வேட்பாளர். பக்கத்தில் உசேன். திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. நின்று கைகுலுக்க, 'படிச்சு பாருங்க சார்' என்று ஒரு துண்டறிக்கையைக் கொடுத்தார் பாலு. என்னைப் போல் ஓரம் நின்றுகொண்டிருந்தவர்கள், தெரிந்த ஒன்றிரண்டு முகங்களோடு கைகுலுக்கியபடி அவர் நடந்துகொண்டிருந்தார்.
துண்டறிக்கையை நான் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன். பலர், அப்படியே ஓரம் போட்டுவிட்டு நடையைக் கட்டினர். இன்னும் சிலர், தமக்கு இதெல்லாம் அநாவசியம் என்பதுபோல், முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிந்தனர்.
நிம்மதியா கூட நடக்க விட மாட்டேங்கறாங்க.. இங்கியும் வந்துடறாங்க
எனக்குப் பின்னால் வந்த மாமி, அடிக்குரலில் மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சில நொடிகளில் என்னைக் கடந்து மேலும் உடல்நலம் காக்க, ஓட்டமாக நடையைப் பயின்றுகொண்டிருந்தனர்.
மற்றொரு காட்சி. எங்கள் அடுக்ககத்தின் வாயிலில் கூட்டம். எம்ஜிஆர் திரைப்படப் பாடல்கள் யார் வருகிறார் என்பதற்குக் கட்டியம் கூறின. வாசலில் போய் நின்றுகொண்டேன்.
ஒரு திறந்த ஜீப்பில் பதர் சையது. அதிமுக தென்சென்னை வேட்பாளர். பக்கத்தில் டி.ஜெயக்குமார். சிரிக்கலாமா வேண்டாமா, கைகூப்ப வேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் பதர் சையது தேமே என்று உயர்ந்து நின்ற அடுக்ககங்களைப் பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார். அமைச்சர் ஜெயக்குமார்தான் அம்மா புகழ் பாடி ஓட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.
கல்யாண ஊர்வலமாக இருந்தாலும் சரி, இழவு ஊர்வலமாக இருந்தாலும் சரி, பெருமாள் புறப்பாடாக இருந்தாலும் சரி, வெறுமனே எட்டிப் பார்க்கும் அடுக்கக முகங்கள் இப்போதும், பதர் சையதைப் பார்த்துக்கொண்டிருந்தன.
ஜெயலலிதா ஸ்கூல் ·பிரெண்டாம்..
புடைவை நன்னா அழகா இருக்கு இல்ல...
ஜீப் எங்கள் ஏரியாவின் புகழ்பெற்ற மீனவ 'நகர்'களின் உள்ளே நுழைய, அனைத்து முகங்களும் தம் வேலையைப் பார்க்கத் திரும்பிவிட்டன. ஆனால், ஜீப்போடு வந்தவர்கள், 'நகர்'களுக்கு உள்ளே போனதும், பட்டாசு வெடித்து, சரங்கள் கொளுத்தி, ஆரத்தி எடுத்து, கொண்டாட்டமாய் வரவேற்கத் தொடங்கினர். மணமகள் ஊர்வலம்போல், வாத்தியங்கள் முழங்க, அபாரமான ஏற்பாடுகள்.
இதுதான் வித்தியாசம். ஏற்கனவே, மேல் மத்திய தர வர்க்கம், அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்டு விட்டது. கடந்த பத்தாண்டுகளில், கீழ் மத்திய வர்க்கத்துக்கும் அரசியலோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
நான் இரவு பகலாக உழைக்கிறேன், எவனோ புண்ணியவான் என் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பு கொடுத்து, வேலைகொடுத்திருக்கிறான். அவன் சோறு போடுகிறான். பின் நான் எதற்கு உனக்கு (அரசுக்கு) மதிப்பு தரவேண்டும்? உன்னிடம் நான் எதற்காகவும் வந்து நிற்கத் தயாரில்லை. நிலைமைகள் மாறிவிட்டன பாஸ்!!!
கடந்த பல தேர்தல்களில் வாக்குச் சதவிகிதம் குறைந்து வந்ததற்கு இதுவே முக்கியக் காரணம். இந்தியாவின் புகழ்மிக்க மத்திய வர்க்கமும் அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டது. கணினியும் தொழில்நுட்பமும் அவர்கள் பார்வையை மேல்நோக்கி உயர்த்திவிட, நாடாளுபவர்கள் நாசமாகப் போகக் கடவது என்ற விட்டுவிட்டார்கள்!!!
மிச்சமிருப்பது, தினக்கூலிகள், ஆலை உழைப்பாளர்கள், சிறு சிறு வேலைகள் செய்வோர் அடங்கிய அன்றாடம் காய்ச்சிகள். அவர்கள்தான் இன்னும் அரசையும் அரசியலாளர்களையும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். கூட்டம் கூட்டினால் பேச்சைக் கேட்க வருகிறார்கள். கையில் தலைவரின் முகத்தை பச்சைக் குத்திக்கொள்கிறார்கள். ஓட்டுச் சாவடிக்குப் போய், வெயிலில் நின்று தம் ஓட்டைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
இதுதான் உண்மை.
மத்தியதர வர்க்கம், செளகரியத்திலும், வெட்டிப்பேச்சிலும் செயலின்மையிலும் ஆழ்ந்துகிடக்கிறது. உண்மையில், நமக்கெல்லாம், இந்த அரசை விமர்சிக்க தகுதியே இல்லை.
வெங்கடேஷ்
Tuesday, March 10, 2009
பா.ம.க யாருடன்? சில ஊகங்கள்
காங்கிரஸ் திமுகவுடன்தான் கூட்டணி என்று அறிவித்துவிட்ட நிலையில், பா.ம.க.வின் நிலை என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரத்ததிற்குப் பின் இந்தக் கேள்வி மேலும் வலுப்பெற்றிருக்கிறது
அதை குறித்த ஊகங்களும் கிசுகிசுக்களும் ஊடங்களில் ஆரம்பித்துவிட்டன. இன்று வந்த ஊகங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் நீங்களே உங்கள் ஊகங்களை மேற்கொள்ளலாம்.
பா.ம.க.,கூட்டணி தொடர்பாக கட்சிக்குள் நடைபெறும் கருத்து வேறுபாடுகள் தான் இதுவரை எந்த முடிவும் எடுக்காததற்குக் காரணம் என்று பா.ம.க ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.பா.ம.க., கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர். திருமங்கலம் இடைத் தேர்தலில், பா.ம.க., யாருக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும் என்பது தொடர்பாக கூட்டம் நடந்த போது, தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் ஜெயலலிதா பக்கம் தான் இருந்தது என்கிறார் ஒரு சீனியர் பா.ம.க., தலைவர்.
காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறக் கூடாது என்கிறார் அன்புமணி. ஆனால் ராமதாசோ, தி.மு.க., பக்கம் போனால் பா.ம.க., பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்.இப்படி இரண்டு பட்ட கருத்துகளால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திண்டாடுகிறது கட்சித் தலைமை.
அ.தி.மு.க., தரப்பிலிருந்து ஆறு சீட்கள் தருகிறோம். ஆனால், ராஜ்யசபா சீட் தரமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,விடம் ஏழு எம்.பி., சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் பா.ம.க., தரப்பில் கேட்கப்பட்டது. ஆறு எம்.பி., சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்றுதி.மு.க.,வில் கூறினர். பா.ம.க.,வோ ஒன்பது தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் ஏழு தொகுதிகளை தரவேண்டும் என்று கறாராக உள்ளது. இதற்கான பேரம் இன்னும் படியவில்லை. எனவே தி.மு.க., கூட்டணியை பா.ம.க., இன்னமும் இறுதி செய்யவில்லை.
அ.தி.மு.க., பக்கமே போய்விடலாம் என்றால் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்தில் முடிகிறது. அதற்கு பிறகு என்ன செய்வது? என பா.ம.க., யோசிக்கிறது. இந்த முறை லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடலாம் என்று கட்சியினர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் அன்புமணி. ராஜ்யசபா மூலமாகவே, வெயிலில் பிரசாரம் செய்யாமல் எம்.பி.,யாக ஆசைப்படுகிறார் அன்புமணி.சமீபத்தில் சோனியாவை சந்தித்த பிறகு, மத்திய அரசியலிலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அன்புமணியின் ஆசை அதிகமாகிவிட்டது. இப்படி அப்பா - மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பா.ம.க., எங்கு போய்ச்சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை
தினமலர்
‘‘இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் முக்கிய இடம் வகிக்கும் பாமக கருத்து (ஜெ.யின் உண்ணாவிரதம் குறித்து) என்னவாம்...’’‘
‘உண்ணாவிரதம் நடந்த அன்னிக்கு ஜப்பான் தூதரகத்துல மனு கொடுக்க போயிருந்தாங்க... அந்த தலைவர்கள் ராமதாசிடம் நைசா பேச்சுக் கொடுத்து பாத்திருக்காங்க... ஆனா அவர் வாய திறக்கவே இல்லையாம்...’’
‘‘அப்ப எதுக்கு... இன்னைக்கு நடக்குற உண்ணாவிரதத்தை கேன்சல் பண்ணாளாம்...’’
‘‘மருத்துவரின் தந்திரத்துல இதுவும் ஒண்ணுனு சொல்றாங்க... ஜெயலலிதா ‘தனி நாடு’ என்பதை ஏத்துக்கிட்டதால அவங்களுக்கு போட்டியா உண்ணாவிரதத்தை நடத்த வேண்டாமுனு கேன்சல் பண்ணிட்டதா சொல்றாங்க...’’‘
‘இதை முதல்லயே செய்திருக்கலாமே...’’ ‘‘அப்படி விட்டுக் கொடுத்தா, அதிமுக கூட்டணியில கூடுதலா சீட் கேட்க முடியாதுல்ல...’’ என்று சொன்ன பீட்டர் மாமா, காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.
தினகரன்
“Ramadoss is bargaining hard with us,” revealed a DMK leader. “He says the AIADMK is offering him seven seats. He wants us to give him eight seats, plus a Rajya Sabha berth for his son.”
DMK sources said Ramadoss Sr wanted seven Lok Sabha seats and an RS nomination, as the AIADMK had apparently offered him eight Lok Sabha seats. However, Karunanidhi has stuck to the 6+1 formula.
After kicking out the PMK from the state-level alliance, Democratic Progressive Alliance (DPA), Karunanidhi has been shrewd enough to let the Congress woo back Ramadoss, a partner in the UPA at the Centre, for the LS polls.
For over a month, the Congress has been negotiating with the PMK and Vijayakanth's DMDK, as both the parties have far too much bitterness with the DMK to be directly holding parleys. As the Congress is keen on repeating its 2004 success, AICC president Sonia Gandhi, herself talked to Ramadoss Sr a fortnight ago to retain him in the alliance but the PMK leader is yet to make up his mind.
The AIADMK is keen to get the PMK by its side to add to its numberical strength. "PMK has been offered eight seats, including two reserved constituencies and no guarantee of a Rajya Sabha seat,'' said a source in AIADMK. As only three of the seats offered by AIADMK are said to be winnable', Ramadoss is in a dilemma, said sources close to him, hinting that the DMK offer looks better.
Times of India
அதை குறித்த ஊகங்களும் கிசுகிசுக்களும் ஊடங்களில் ஆரம்பித்துவிட்டன. இன்று வந்த ஊகங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் நீங்களே உங்கள் ஊகங்களை மேற்கொள்ளலாம்.
பா.ம.க.,கூட்டணி தொடர்பாக கட்சிக்குள் நடைபெறும் கருத்து வேறுபாடுகள் தான் இதுவரை எந்த முடிவும் எடுக்காததற்குக் காரணம் என்று பா.ம.க ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.பா.ம.க., கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர். திருமங்கலம் இடைத் தேர்தலில், பா.ம.க., யாருக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும் என்பது தொடர்பாக கூட்டம் நடந்த போது, தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் ஜெயலலிதா பக்கம் தான் இருந்தது என்கிறார் ஒரு சீனியர் பா.ம.க., தலைவர்.
காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறக் கூடாது என்கிறார் அன்புமணி. ஆனால் ராமதாசோ, தி.மு.க., பக்கம் போனால் பா.ம.க., பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்.இப்படி இரண்டு பட்ட கருத்துகளால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திண்டாடுகிறது கட்சித் தலைமை.
அ.தி.மு.க., தரப்பிலிருந்து ஆறு சீட்கள் தருகிறோம். ஆனால், ராஜ்யசபா சீட் தரமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,விடம் ஏழு எம்.பி., சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் பா.ம.க., தரப்பில் கேட்கப்பட்டது. ஆறு எம்.பி., சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்றுதி.மு.க.,வில் கூறினர். பா.ம.க.,வோ ஒன்பது தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் ஏழு தொகுதிகளை தரவேண்டும் என்று கறாராக உள்ளது. இதற்கான பேரம் இன்னும் படியவில்லை. எனவே தி.மு.க., கூட்டணியை பா.ம.க., இன்னமும் இறுதி செய்யவில்லை.
அ.தி.மு.க., பக்கமே போய்விடலாம் என்றால் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்தில் முடிகிறது. அதற்கு பிறகு என்ன செய்வது? என பா.ம.க., யோசிக்கிறது. இந்த முறை லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடலாம் என்று கட்சியினர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் அன்புமணி. ராஜ்யசபா மூலமாகவே, வெயிலில் பிரசாரம் செய்யாமல் எம்.பி.,யாக ஆசைப்படுகிறார் அன்புமணி.சமீபத்தில் சோனியாவை சந்தித்த பிறகு, மத்திய அரசியலிலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அன்புமணியின் ஆசை அதிகமாகிவிட்டது. இப்படி அப்பா - மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பா.ம.க., எங்கு போய்ச்சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை
தினமலர்
‘‘இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் முக்கிய இடம் வகிக்கும் பாமக கருத்து (ஜெ.யின் உண்ணாவிரதம் குறித்து) என்னவாம்...’’‘
‘உண்ணாவிரதம் நடந்த அன்னிக்கு ஜப்பான் தூதரகத்துல மனு கொடுக்க போயிருந்தாங்க... அந்த தலைவர்கள் ராமதாசிடம் நைசா பேச்சுக் கொடுத்து பாத்திருக்காங்க... ஆனா அவர் வாய திறக்கவே இல்லையாம்...’’
‘‘அப்ப எதுக்கு... இன்னைக்கு நடக்குற உண்ணாவிரதத்தை கேன்சல் பண்ணாளாம்...’’
‘‘மருத்துவரின் தந்திரத்துல இதுவும் ஒண்ணுனு சொல்றாங்க... ஜெயலலிதா ‘தனி நாடு’ என்பதை ஏத்துக்கிட்டதால அவங்களுக்கு போட்டியா உண்ணாவிரதத்தை நடத்த வேண்டாமுனு கேன்சல் பண்ணிட்டதா சொல்றாங்க...’’‘
‘இதை முதல்லயே செய்திருக்கலாமே...’’ ‘‘அப்படி விட்டுக் கொடுத்தா, அதிமுக கூட்டணியில கூடுதலா சீட் கேட்க முடியாதுல்ல...’’ என்று சொன்ன பீட்டர் மாமா, காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.
தினகரன்
“Ramadoss is bargaining hard with us,” revealed a DMK leader. “He says the AIADMK is offering him seven seats. He wants us to give him eight seats, plus a Rajya Sabha berth for his son.”
Hindustan Times
Being the chief architect of the Democratic Progressive Alliance, DMK president M Karunanidhi is back in business and has offered PMK founder Dr S Ramadoss, the eternal fence-sitter, six LS seats plus one Rajya Sabha seat for his son Dr Anbumani Ramadoss, according to political sources.
DMK sources said Ramadoss Sr wanted seven Lok Sabha seats and an RS nomination, as the AIADMK had apparently offered him eight Lok Sabha seats. However, Karunanidhi has stuck to the 6+1 formula.
After kicking out the PMK from the state-level alliance, Democratic Progressive Alliance (DPA), Karunanidhi has been shrewd enough to let the Congress woo back Ramadoss, a partner in the UPA at the Centre, for the LS polls.
For over a month, the Congress has been negotiating with the PMK and Vijayakanth's DMDK, as both the parties have far too much bitterness with the DMK to be directly holding parleys. As the Congress is keen on repeating its 2004 success, AICC president Sonia Gandhi, herself talked to Ramadoss Sr a fortnight ago to retain him in the alliance but the PMK leader is yet to make up his mind.
The AIADMK is keen to get the PMK by its side to add to its numberical strength. "PMK has been offered eight seats, including two reserved constituencies and no guarantee of a Rajya Sabha seat,'' said a source in AIADMK. As only three of the seats offered by AIADMK are said to be winnable', Ramadoss is in a dilemma, said sources close to him, hinting that the DMK offer looks better.
Times of India
என்னுடைய ஊகம் (இன்னொரு கோணத்தில்)
பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. கடந்த முறை போட்டியிட்டது. கடந்த முறை கடும் எதிர்ப்பிற்கிடையே அது காங்கிரசிடமிருந்த அந்தத் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை காங்கிரஸ் அந்தத் தொகுதியைத் திரும்பப் பெற முயற்சித்து வருகிறது. கோஷ்டிகளுக்குப் பெயர் பெற்ற புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தில் ஒன்று பட்டு சோனியாவை அணுகி முறையிட்டிருக்கிறார்கள்.
பாமக காங்கிரஸ் கூட்டணியில் தொடர இந்தத் தொகுதியைக் கோரும். கிடைக்காத பட்சத்தில் இதைக் காரணமாகச் சொல்லி அதிமுக அணிக்குப் போகும். அதாவது இலங்கையைவிட புதுச்சேரி பாமகவின் முடிவைத் தீர்மானிக்கும்.
கொசுறு: விடுதலைச் சிறுத்தைகள் பற்றியும் ஒரு கிசுகிசு:
""திருமாவளவன் தன்னோட தொகுதியை உறுதி செய்துட்டாருங்க...'' எனக் கூறியபடி விவாதத்தைத் துவக்கினார் அன்வர்பாய். "
"அவர் முதல்ல, கூட்டணியை உறுதி செய்துட்டாராங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி."
"அதுக்காகத் தான், சமீபத்துல முதல்வரை சந்திச்சப்ப, காங்கிரசோட எதிர்ப்பு பத்தி பேசியிருக் காரு... "அதை விடுங்க... முதல்ல நீங்க என்னோடு இருப்பீர்களா, மாட்டீங்களான்னு மட்டும் சொல்லுங்க'ன்னு முதல்வர் கேட்டாராம்..."இதை எதிர்பார்க்காத திருமாவளவன், "கூட்டணியில இருக்கேன்'னு பதில் சொல்லியிருக்காரு... அவருக்கு சிதம்பரம் தொகுதியை ஒதுக்கறது உறுதியாயிடுச்சுன்னு, கட்சிக்காரங்க பேசுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்."
"காங்கிரசை ஒழிப்பது தான் எங்கள் முதல் பணின்னு திருமாவளவன் சொன்னது எதுவும் எனக்கு ஞாபகத்துக்கு வரலைங்க...'' என சிரித்தார் அந்தோணிசாமி.
தினமலர்
Labels:
Elections 2009,
P.M.K,
கூட்டணிகள்,
தேர்தல் 2009,
பா.ம.க.
Monday, March 09, 2009
முந்துகிறதா மூன்றாவது அணி?
மாலன்
கடந்த வாரம் நிகழ்ந்த இரு முறிவுகள், (காங்-சமாஜ்வாதி, பாஜக-பிஜூ ஜனதாதளம்) தேர்தல் களத்தை மூன்றாவது அணிக்கு சாதகமாகத் திருப்பியிருக்கின்றன. ஆனால் அந்த அணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்பது இன்னமும் கேள்விக் குறிதான். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் களத்தில் குழப்பம் அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமல்ல ஆழமாகியும் உள்ளது.
நாம் தெளிவு பெற யார் யார் எங்கிருக்கிறார்கள், அவர்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் இவற்றை சட்டென்று ஒரு 'கிளான்ஸ்' பார்த்து விடலாம்.
23 கட்சிகளின் துணையோடு ஆண்ட ஐக்கிய முற்போக்கு அணியில் (காங்கிரஸ் கூட்டணியில்) 2004 தேர்தலின் போது அதனுடன் இருந்த சில கட்சிகள் இன்று அதனோடு இல்லை.உதாரணமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, மறுமலர்ச்சி திமுக, மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்று அதன் அணியில் இருப்பவர்கள்:
திமுக:
எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: பல காரணங்களால் (அவை என்ன என்று எல்லோருக்குமே தெரியும்) இப்போது இருப்பதை விடக் குறைவான இடங்களைப் பெறக்கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 16
கடிவாளம் யார் கையில்?: கருணாநிதி (குடும்பத்தினரிடம்)
ராஷ்ட்ரிய ஜனதா தளம்:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? பீகார்
என்ன வாய்ப்பு ? : நிதீஷ் குமார்- பாஜக கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தும் பாஸ்வானுடன் உரசல்கள் இருக்கின்றன. அவருடனும் காங்கிரசுடனும் உறவு தொடர்ந்தால் இப்போது இருக்கும் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது?: 24
கடிவாளம் யார் கையில்? : லாலு பிரசாத் யாதவ்
தேசியவாத காங்கிரஸ்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? :மகாராஷ்டிரம்
என்ன வாய்ப்பு ? : ஷரத் பவார்தான் அடுத்த பிரதமர் என பிரசாரம் செய்து வருவது காங்கிரசிற்கு எரிச்சலைக் கொடுக்கிறது.சிவசேனையுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டியது. காங்- தே.கா உறவு அத்தனை சுமுகமாக இல்லை. எனினும் இருவருக்கும் வேறு வழியில்லை. நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாத சம்பவம் நடந்த போது மாநிலத்தை ஆளும் காங்-தே.கா அரசு அதைக் கையாண்ட விதம் நகர்ப்புறங்களில் அந்த ஆட்சி மீது கடுப்பைக் கிளப்பியிருந்தது. இப்போது மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் பாஜக அதை நினைவுபடுத்த முயலும்.கிராமப்புறங்களில் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் கை கொடுக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 11
கடிவாளம் யார் கையில் ?: ஷரத் பவார்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
எந்தப் பேட்டையில் பிஸ்தா?: ஜார்க்கண்ட்
என்ன வாய்ப்பு?: உம்ஹூம், நோ சான்ஸ்.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: (இன்ன்மும்) சிபு சோரன் கையில்தான்
திருணாமூல் காங்கிரஸ்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : மேற்கு வங்கம்:
என்ன வாய்ப்பு ?: நந்திகிராம் கை கொடுத்திருப்பதால் தோழர்களுக்கு தண்ணி காட்டும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 1
கடிவாளம் யார் கையில் ?: மம்தா பானர்ஜி
தேசிய மாநாடு
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு & காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டு காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியைப் பிடித்தது. அநேகமாக அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 2
கடிவாளம் யார் கையில் ?: ஓமர் அப்துல்லா
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும், பாஜகவும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அது சாதகமாக பாதகமா என்பது அந்த ஆட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்/அவப் பெயரைப் பொறுத்தது. பிஜு ஜனதாதளத்துடன் உறவு முறிந்ததை அடுத்து, ஒரிசா, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய எல்லா தென் மாநிலங்களிலும் தனித்துத்தான் போட்டியிட வேண்டியிருக்கும். இன்று பாஜக கூட்டணியில் இருப்பவர்கள்:
சிவசேனா
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: மகாராஷ்டிராம்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆளும் காங்-தே கா கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வுகளை நம்பியிருக்கிறது. மத + மாநில உணர்வுகளை உசுப்பிவிட்டு ஆதாயம் பார்க்க முயற்சிக்கும். சரத் பவார் பிரதமருக்குப் போட்டியிட்டால், அத்வானியை கைவிட்டுவிட்டு அவரை ஆதரிக்கக் கூடும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 12
கடிவாளம் யார் கையில்?: பால் தாக்ரே ( ஆஸ்பத்திரியிலிருந்தாலும்)
சிரோண்மணி அகாலி தளம்:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பஞ்சாப்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆட்சியிலிருக்கிறது. அதன் பாதகங்களை(யும்) எதிர் கொள்ள வேண்டி வரும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 8
கடிவாளம் யார் கையில் ?: பாதல் குடும்பத்தினர்
ஜனதாதளம் (ஐக்கிய)
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பீகார்.
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தை ஆள்கிறது. ஆட்சிக்கு நல்ல பெயர். அதனால் கணிசமான இடங்களைப் பெறலாம்.
என்ன வாய்ப்பு ? : 8
கடிவாளம் யார் கையில் ? : நிதீஷ் குமார்
ராஷ்டிரிய லோக்தள்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உ.பி.யின் மேற்குப் பகுதியில்
என்ன வாய்ப்பு ? : மேற்கு உ.பி.யில் எப்போதுமே சில இடங்களைக் கைப்பற்றக்கூடிய வலிமை உண்டு
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 3
அசாம் கண பரிஷத்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: அசாம்
என்ன வாய்ப்பு ?: முன்பு காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த மாணவர் கட்சியாக இப்போது இல்லை. பல கூறுகளாக உடைந்து விட்டது.ஆனாலும் அசாமில் சில பகுதிகளில் இடங்களைப் பிடிக்கக் கூடும். உறுதியாகச் சொல்ல இயலாது. தேர்தலுக்குப் பின் பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டது.
2004 எத்தனை இடங்கள் பெற்றது? : 2
மூன்றாவது அணி என்பது சிலநாட்களுக்கு முன்வரை கடவுள் போல இருந்தது. அதாவது உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை. இப்போது அது ஆவி மாதிரி தோன்றுகிறது. காலில்லாத ஆவி. அது இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைப் பார்த்ததாக சத்தியம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அதைக் கண்டு உள்ளூற பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் எத்தனை பிரதமர்கள் வேண்டுமானாலும் கொடுக்கக் கூடிய ஒரே அணி அதுதான்.
இடது சாரிகள் (மார்க்சிஸ்ட், இந்திய கம். பார்வேர்ட் பிளாக், ஆர்.எஸ்.பி)
எந்தப் பேட்டைகளில் பிஸ்தா ? : மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம்,
என்ன வாய்ப்பு ? : மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் ஆட்சியில் இருக்கின்றன. நந்திகிராம், சிங்கூர் பிரசினைகளால் மேற்கு வங்கத்திலும், உட்கட்சிப் பூசலால் கேரளத்திலும் முன்பு பெற்ற அளவு இடங்களைப் பெற இயலாது.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 60
அதிமுக:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளைத் தன் பக்கம் கொண்டு வந்து விட்டதால், திமுக- காங்-கூட்டணிக்கு கடும் சவாலாக விளங்கும். திமுகவின் குடும்ப அரசியலும், 'அம்மா'விற்கு உள்ள வசீகரமும் கை குடுக்கும். அலை எதுவும் வீசாத பட்சத்தில் 20 -25 இடங்களை எதிர்பார்க்கலாம். தேர்தலுக்குப் பின் 3வது அணியிலேயே இருக்குமா என்பது கேள்விக்குறி.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 0
கடிவாளம் யார் கையில் ?: (சந்தேகமில்லாமல்) ஜெ. கையில்
ஜனதாதளம் (மதச்சார்பற்ற)
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: கர்நாடகம்
என்ன வாய்ப்பு ? :சட்டமன்றத் தேர்தலில் அடி வாங்கியது. ஆட்சியிலிருக்கும் பாஜகவை எதிர்கொள்வது எளிதாக இராது. காங்கிரசோடு ஏதேனும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொள்ளக் கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 3
கடிவாளம் யார் கையில் ?: தேவகவுடா
தெலுங்கு தேசம்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: மாநிலச் சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடப்பதால், மாநில காங்கிரஸ் ஆட்சியின் மீதான கோபதாபங்களும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பது ஒரு சாதகமான அம்சம். தெ.தே+இடதுசாரிகள்+ TRS என்பது ஆந்திரத்தில் வலுவான கூட்டணி. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை சிரஞ்சீவி அள்ளிக் கொண்டு போகாத வரையில் பிரசினை இல்லை.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: சந்திரபாபு நாயுடு
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஆந்திரத்தில் உள்ள தெலுங்கான பகுதி
என்ன வாய்ப்பு ? : தெலுங்கு தேசத்திற்குச் சொன்னவை அனைத்தும் இதற்கும் பொருந்தும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 5
கடிவாளம் யார் கையில் ? : சந்திரசேகர் ராவ் (இவ்ரை எதிர்த்து அசாரூதீன் களமிறக்கப்படக்கூடும்)
மதிமுக:
எந்தப் பேட்டையில் பிஸ்தா?: தமிழ்நாட்டின் சில தொகுதிகள்
என்ன வாய்ப்பு ?: இலங்கைப் பிரசினையில் காங்-திமுகவிற்கு எதிரான வாக்குகள் கை கொடுக்கும்.அதிமுக அணியில் இருப்பது ஒரு பலம். கட்சியை உடையாமல் காப்பாற்றும் சவாலை தேர்தலுக்கு முன்னும் பின்னும் சமாளிக்க வேண்டியிருக்கும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 4
கடிவாளம் யார் கையில்: (இன்றுவரை) வைகோ கையில்
3வது அணிக்கு வரக்கூடியவர்கள்:
பிஜூ ஜனதா தளம்:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஒரிசா
என்ன வாய்ப்பு ? : பாஜகவுடன் உறவு முறிந்ததால் இடதுசாரிகளின் உதவியை நாடுகிறது. 'நவீன் பாபு'வின் செல்வாக்கைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 11
கடிவாளம் யார் கையில் ? நவீன் பட்நாயக்
பகுஜன் சமாஜ் கட்சி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உத்தரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ? : காங்-சமாஜ்வாதி பூசல் இவருக்கு சாதகம். சட்டமன்றத் தேர்தலில் ஜமாய்த்திருந்தாலும் ஆட்சியில் இருப்பதால் அதற்கு எதிரான வாக்குகளையும் சந்திக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலைப் போலவே இப்போதும் இடங்களைப் பிடித்தால், பிரதமராக முயற்சிப்பார். ஏற்கனவே இடதுசாரிகள் இவரை வரவேற்றிருக்கின்றார்கள்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது? 19
கடிவாளம் யார் கையில் ?: மாயாவதி
சமாஜ்வாதி கட்சி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: உத்தரப்பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: தேர்தலுக்குப் பின் மாயாவதி இடதுசாரிகளை நோக்கிப் போகவில்லை என்றால் இந்தக் கட்சி அந்தப் பக்கம் சாயும்.ஆனால் 2004ல் பெற்ற அளவு இடங்களைப் பெறுவது சிரமம்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 36
கடிவாளம் யார் கையில் ? : முலாயம் சிங் யாதவ்
மக்கள் ஜனநாயகக் கட்சி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு &காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அதிகமில்லை. தேசிய மாநாடு + காங். என்பது ஜ&கா வில் வலுவான கூட்டணி.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 1
கடிவாளம் யார் கையில் ? : முப்தி முகமது குடும்பத்திடம்
பாட்டாளி மக்கள் கட்சி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாட்டின் சில தொகுதிகளில்
என்ன வாய்ப்பு? : காங்கிரசோடு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டால் திமுகவே இதனை பலவீனப்படுத்த மறைமுகமாக முயற்சிக்கும் என்ற சந்தேகத்தில் அதிமுகவோடு சேரலாம்.தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ எந்த அணிக்கும் போகலாம்..
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 6
கடிவாளம் யார் கையில்?: மருத்துவர் ராமதாஸ்
கறுப்புக் குதிரை: பிரஜா ராஜ்யக் கட்சி
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்கள்
என்ன வாய்ப்பு? : சிரஞ்சீவின் சினிமா கவர்ச்சி. காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகள் மீதுள்ள அதிருப்தி வாக்குகள், இளைய தலைமுறையின் வாக்குகள் ஆகியவற்றைக் கவர்ந்து கொள்ளக் கூடும். சட்டமன்றத் தேர்தலிலேயே அதிகம் கவனம் செலுத்தும். ஆனால் அது நாடாளுமன்ற இடங்களுக்கும் கை கொடுக்கும். ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்: சிரஞ்சீவி
தேமுதிக:
எந்தப் பேட்டையில் பிஸ்தா?: யாருக்கும் தெரியாது
என்ன வாய்ப்பு?: ஹி ஹி
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்?: விஜயகாந்த் குடும்பத்தினர்
இந்தப் பட்டியல் தரும் சித்திரத்தைப் பார்த்தால் மூன்றாவது அணி முந்துவது போல் தோன்றலாம். அது அநேகமாக 160லிருந்து 180 இடங்களைப் பிடிக்கும் என நான் நினைக்கிறேன். அப்படியானால் ஆட்சிஅமைக்க அதற்கு 100லிருந்து 120 இடங்கள் வரை தேவைப்படும்.அப்போதும் 1996ல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியைப் போல ஒன்று சாத்தியமே.
ஆனால் கட்சிகளிடம் உள்ள உள் முரண்பாடுகளை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முயலும் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு மாயாவதியை ஜெ.பிரதமராக ஏற்பாரா? தேவகவுடாவை மாயாவதி ஏற்பாரா? அந்த மாதிரி சூழலில் பவாரை முன்நிறுத்தி காங்கிரஸ் (சந்திரசேகர் பிரதமர் ஆனது போல) ஆதரவளிக்கக் கூடும். சிவசேனாவும் பவார் மராட்டியர் என்பதால் ஆதரிக்கலாம். ஆனால் இடதுசாரிகள் ஆதரிப்பார்களா? இடதுசாரிகள் ஆதரித்தால் மம்தா ஆதரிக்கமாட்டார்; மாயாவதி ஆதரித்தால் முலாயம் ஆதரிக்க மாட்டார். ஜெயலலிதா ஆதரித்தால் கருணாநிதி ஆதரிக்க மாட்டார். இந்தக் குழப்பங்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும்.
தேர்தலைவிட தேர்தலுக்குப் பின்னர்தான் குழப்பங்களும் சுவாரஸ்யங்களும் காத்திருக்கின்றன.
கடந்த வாரம் நிகழ்ந்த இரு முறிவுகள், (காங்-சமாஜ்வாதி, பாஜக-பிஜூ ஜனதாதளம்) தேர்தல் களத்தை மூன்றாவது அணிக்கு சாதகமாகத் திருப்பியிருக்கின்றன. ஆனால் அந்த அணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்பது இன்னமும் கேள்விக் குறிதான். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் களத்தில் குழப்பம் அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமல்ல ஆழமாகியும் உள்ளது.
நாம் தெளிவு பெற யார் யார் எங்கிருக்கிறார்கள், அவர்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் இவற்றை சட்டென்று ஒரு 'கிளான்ஸ்' பார்த்து விடலாம்.
23 கட்சிகளின் துணையோடு ஆண்ட ஐக்கிய முற்போக்கு அணியில் (காங்கிரஸ் கூட்டணியில்) 2004 தேர்தலின் போது அதனுடன் இருந்த சில கட்சிகள் இன்று அதனோடு இல்லை.உதாரணமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, மறுமலர்ச்சி திமுக, மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்று அதன் அணியில் இருப்பவர்கள்:
திமுக:
எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: பல காரணங்களால் (அவை என்ன என்று எல்லோருக்குமே தெரியும்) இப்போது இருப்பதை விடக் குறைவான இடங்களைப் பெறக்கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 16
கடிவாளம் யார் கையில்?: கருணாநிதி (குடும்பத்தினரிடம்)
ராஷ்ட்ரிய ஜனதா தளம்:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? பீகார்
என்ன வாய்ப்பு ? : நிதீஷ் குமார்- பாஜக கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தும் பாஸ்வானுடன் உரசல்கள் இருக்கின்றன. அவருடனும் காங்கிரசுடனும் உறவு தொடர்ந்தால் இப்போது இருக்கும் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது?: 24
கடிவாளம் யார் கையில்? : லாலு பிரசாத் யாதவ்
தேசியவாத காங்கிரஸ்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? :மகாராஷ்டிரம்
என்ன வாய்ப்பு ? : ஷரத் பவார்தான் அடுத்த பிரதமர் என பிரசாரம் செய்து வருவது காங்கிரசிற்கு எரிச்சலைக் கொடுக்கிறது.சிவசேனையுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டியது. காங்- தே.கா உறவு அத்தனை சுமுகமாக இல்லை. எனினும் இருவருக்கும் வேறு வழியில்லை. நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாத சம்பவம் நடந்த போது மாநிலத்தை ஆளும் காங்-தே.கா அரசு அதைக் கையாண்ட விதம் நகர்ப்புறங்களில் அந்த ஆட்சி மீது கடுப்பைக் கிளப்பியிருந்தது. இப்போது மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் பாஜக அதை நினைவுபடுத்த முயலும்.கிராமப்புறங்களில் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் கை கொடுக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 11
கடிவாளம் யார் கையில் ?: ஷரத் பவார்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
எந்தப் பேட்டையில் பிஸ்தா?: ஜார்க்கண்ட்
என்ன வாய்ப்பு?: உம்ஹூம், நோ சான்ஸ்.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: (இன்ன்மும்) சிபு சோரன் கையில்தான்
திருணாமூல் காங்கிரஸ்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : மேற்கு வங்கம்:
என்ன வாய்ப்பு ?: நந்திகிராம் கை கொடுத்திருப்பதால் தோழர்களுக்கு தண்ணி காட்டும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 1
கடிவாளம் யார் கையில் ?: மம்தா பானர்ஜி
தேசிய மாநாடு
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு & காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டு காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியைப் பிடித்தது. அநேகமாக அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 2
கடிவாளம் யார் கையில் ?: ஓமர் அப்துல்லா
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும், பாஜகவும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அது சாதகமாக பாதகமா என்பது அந்த ஆட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்/அவப் பெயரைப் பொறுத்தது. பிஜு ஜனதாதளத்துடன் உறவு முறிந்ததை அடுத்து, ஒரிசா, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய எல்லா தென் மாநிலங்களிலும் தனித்துத்தான் போட்டியிட வேண்டியிருக்கும். இன்று பாஜக கூட்டணியில் இருப்பவர்கள்:
சிவசேனா
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: மகாராஷ்டிராம்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆளும் காங்-தே கா கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வுகளை நம்பியிருக்கிறது. மத + மாநில உணர்வுகளை உசுப்பிவிட்டு ஆதாயம் பார்க்க முயற்சிக்கும். சரத் பவார் பிரதமருக்குப் போட்டியிட்டால், அத்வானியை கைவிட்டுவிட்டு அவரை ஆதரிக்கக் கூடும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 12
கடிவாளம் யார் கையில்?: பால் தாக்ரே ( ஆஸ்பத்திரியிலிருந்தாலும்)
சிரோண்மணி அகாலி தளம்:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பஞ்சாப்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆட்சியிலிருக்கிறது. அதன் பாதகங்களை(யும்) எதிர் கொள்ள வேண்டி வரும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 8
கடிவாளம் யார் கையில் ?: பாதல் குடும்பத்தினர்
ஜனதாதளம் (ஐக்கிய)
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பீகார்.
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தை ஆள்கிறது. ஆட்சிக்கு நல்ல பெயர். அதனால் கணிசமான இடங்களைப் பெறலாம்.
என்ன வாய்ப்பு ? : 8
கடிவாளம் யார் கையில் ? : நிதீஷ் குமார்
ராஷ்டிரிய லோக்தள்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உ.பி.யின் மேற்குப் பகுதியில்
என்ன வாய்ப்பு ? : மேற்கு உ.பி.யில் எப்போதுமே சில இடங்களைக் கைப்பற்றக்கூடிய வலிமை உண்டு
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 3
அசாம் கண பரிஷத்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: அசாம்
என்ன வாய்ப்பு ?: முன்பு காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த மாணவர் கட்சியாக இப்போது இல்லை. பல கூறுகளாக உடைந்து விட்டது.ஆனாலும் அசாமில் சில பகுதிகளில் இடங்களைப் பிடிக்கக் கூடும். உறுதியாகச் சொல்ல இயலாது. தேர்தலுக்குப் பின் பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டது.
2004 எத்தனை இடங்கள் பெற்றது? : 2
மூன்றாவது அணி என்பது சிலநாட்களுக்கு முன்வரை கடவுள் போல இருந்தது. அதாவது உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை. இப்போது அது ஆவி மாதிரி தோன்றுகிறது. காலில்லாத ஆவி. அது இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைப் பார்த்ததாக சத்தியம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அதைக் கண்டு உள்ளூற பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் எத்தனை பிரதமர்கள் வேண்டுமானாலும் கொடுக்கக் கூடிய ஒரே அணி அதுதான்.
இடது சாரிகள் (மார்க்சிஸ்ட், இந்திய கம். பார்வேர்ட் பிளாக், ஆர்.எஸ்.பி)
எந்தப் பேட்டைகளில் பிஸ்தா ? : மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம்,
என்ன வாய்ப்பு ? : மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் ஆட்சியில் இருக்கின்றன. நந்திகிராம், சிங்கூர் பிரசினைகளால் மேற்கு வங்கத்திலும், உட்கட்சிப் பூசலால் கேரளத்திலும் முன்பு பெற்ற அளவு இடங்களைப் பெற இயலாது.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 60
அதிமுக:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளைத் தன் பக்கம் கொண்டு வந்து விட்டதால், திமுக- காங்-கூட்டணிக்கு கடும் சவாலாக விளங்கும். திமுகவின் குடும்ப அரசியலும், 'அம்மா'விற்கு உள்ள வசீகரமும் கை குடுக்கும். அலை எதுவும் வீசாத பட்சத்தில் 20 -25 இடங்களை எதிர்பார்க்கலாம். தேர்தலுக்குப் பின் 3வது அணியிலேயே இருக்குமா என்பது கேள்விக்குறி.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 0
கடிவாளம் யார் கையில் ?: (சந்தேகமில்லாமல்) ஜெ. கையில்
ஜனதாதளம் (மதச்சார்பற்ற)
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: கர்நாடகம்
என்ன வாய்ப்பு ? :சட்டமன்றத் தேர்தலில் அடி வாங்கியது. ஆட்சியிலிருக்கும் பாஜகவை எதிர்கொள்வது எளிதாக இராது. காங்கிரசோடு ஏதேனும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொள்ளக் கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 3
கடிவாளம் யார் கையில் ?: தேவகவுடா
தெலுங்கு தேசம்
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: மாநிலச் சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடப்பதால், மாநில காங்கிரஸ் ஆட்சியின் மீதான கோபதாபங்களும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பது ஒரு சாதகமான அம்சம். தெ.தே+இடதுசாரிகள்+ TRS என்பது ஆந்திரத்தில் வலுவான கூட்டணி. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை சிரஞ்சீவி அள்ளிக் கொண்டு போகாத வரையில் பிரசினை இல்லை.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: சந்திரபாபு நாயுடு
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஆந்திரத்தில் உள்ள தெலுங்கான பகுதி
என்ன வாய்ப்பு ? : தெலுங்கு தேசத்திற்குச் சொன்னவை அனைத்தும் இதற்கும் பொருந்தும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 5
கடிவாளம் யார் கையில் ? : சந்திரசேகர் ராவ் (இவ்ரை எதிர்த்து அசாரூதீன் களமிறக்கப்படக்கூடும்)
மதிமுக:
எந்தப் பேட்டையில் பிஸ்தா?: தமிழ்நாட்டின் சில தொகுதிகள்
என்ன வாய்ப்பு ?: இலங்கைப் பிரசினையில் காங்-திமுகவிற்கு எதிரான வாக்குகள் கை கொடுக்கும்.அதிமுக அணியில் இருப்பது ஒரு பலம். கட்சியை உடையாமல் காப்பாற்றும் சவாலை தேர்தலுக்கு முன்னும் பின்னும் சமாளிக்க வேண்டியிருக்கும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 4
கடிவாளம் யார் கையில்: (இன்றுவரை) வைகோ கையில்
3வது அணிக்கு வரக்கூடியவர்கள்:
பிஜூ ஜனதா தளம்:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஒரிசா
என்ன வாய்ப்பு ? : பாஜகவுடன் உறவு முறிந்ததால் இடதுசாரிகளின் உதவியை நாடுகிறது. 'நவீன் பாபு'வின் செல்வாக்கைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 11
கடிவாளம் யார் கையில் ? நவீன் பட்நாயக்
பகுஜன் சமாஜ் கட்சி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உத்தரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ? : காங்-சமாஜ்வாதி பூசல் இவருக்கு சாதகம். சட்டமன்றத் தேர்தலில் ஜமாய்த்திருந்தாலும் ஆட்சியில் இருப்பதால் அதற்கு எதிரான வாக்குகளையும் சந்திக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலைப் போலவே இப்போதும் இடங்களைப் பிடித்தால், பிரதமராக முயற்சிப்பார். ஏற்கனவே இடதுசாரிகள் இவரை வரவேற்றிருக்கின்றார்கள்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது? 19
கடிவாளம் யார் கையில் ?: மாயாவதி
சமாஜ்வாதி கட்சி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: உத்தரப்பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: தேர்தலுக்குப் பின் மாயாவதி இடதுசாரிகளை நோக்கிப் போகவில்லை என்றால் இந்தக் கட்சி அந்தப் பக்கம் சாயும்.ஆனால் 2004ல் பெற்ற அளவு இடங்களைப் பெறுவது சிரமம்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 36
கடிவாளம் யார் கையில் ? : முலாயம் சிங் யாதவ்
மக்கள் ஜனநாயகக் கட்சி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு &காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அதிகமில்லை. தேசிய மாநாடு + காங். என்பது ஜ&கா வில் வலுவான கூட்டணி.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 1
கடிவாளம் யார் கையில் ? : முப்தி முகமது குடும்பத்திடம்
பாட்டாளி மக்கள் கட்சி:
எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாட்டின் சில தொகுதிகளில்
என்ன வாய்ப்பு? : காங்கிரசோடு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டால் திமுகவே இதனை பலவீனப்படுத்த மறைமுகமாக முயற்சிக்கும் என்ற சந்தேகத்தில் அதிமுகவோடு சேரலாம்.தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ எந்த அணிக்கும் போகலாம்..
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 6
கடிவாளம் யார் கையில்?: மருத்துவர் ராமதாஸ்
கறுப்புக் குதிரை: பிரஜா ராஜ்யக் கட்சி
எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்கள்
என்ன வாய்ப்பு? : சிரஞ்சீவின் சினிமா கவர்ச்சி. காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகள் மீதுள்ள அதிருப்தி வாக்குகள், இளைய தலைமுறையின் வாக்குகள் ஆகியவற்றைக் கவர்ந்து கொள்ளக் கூடும். சட்டமன்றத் தேர்தலிலேயே அதிகம் கவனம் செலுத்தும். ஆனால் அது நாடாளுமன்ற இடங்களுக்கும் கை கொடுக்கும். ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்: சிரஞ்சீவி
தேமுதிக:
எந்தப் பேட்டையில் பிஸ்தா?: யாருக்கும் தெரியாது
என்ன வாய்ப்பு?: ஹி ஹி
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்?: விஜயகாந்த் குடும்பத்தினர்
இந்தப் பட்டியல் தரும் சித்திரத்தைப் பார்த்தால் மூன்றாவது அணி முந்துவது போல் தோன்றலாம். அது அநேகமாக 160லிருந்து 180 இடங்களைப் பிடிக்கும் என நான் நினைக்கிறேன். அப்படியானால் ஆட்சிஅமைக்க அதற்கு 100லிருந்து 120 இடங்கள் வரை தேவைப்படும்.அப்போதும் 1996ல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியைப் போல ஒன்று சாத்தியமே.
ஆனால் கட்சிகளிடம் உள்ள உள் முரண்பாடுகளை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முயலும் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு மாயாவதியை ஜெ.பிரதமராக ஏற்பாரா? தேவகவுடாவை மாயாவதி ஏற்பாரா? அந்த மாதிரி சூழலில் பவாரை முன்நிறுத்தி காங்கிரஸ் (சந்திரசேகர் பிரதமர் ஆனது போல) ஆதரவளிக்கக் கூடும். சிவசேனாவும் பவார் மராட்டியர் என்பதால் ஆதரிக்கலாம். ஆனால் இடதுசாரிகள் ஆதரிப்பார்களா? இடதுசாரிகள் ஆதரித்தால் மம்தா ஆதரிக்கமாட்டார்; மாயாவதி ஆதரித்தால் முலாயம் ஆதரிக்க மாட்டார். ஜெயலலிதா ஆதரித்தால் கருணாநிதி ஆதரிக்க மாட்டார். இந்தக் குழப்பங்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும்.
தேர்தலைவிட தேர்தலுக்குப் பின்னர்தான் குழப்பங்களும் சுவாரஸ்யங்களும் காத்திருக்கின்றன.
Labels:
Elections 2009,
Third Front,
தேர்தல் 2009,
மூன்றாவது அணி
Sunday, March 08, 2009
Tamilnadu Therthal Gossips, Cartoons: 'சொல்றாங்க', கேலிச் சித்திரம் & ஊர் வம்பு
இரண்டு முத்து
நடிகர் மன்சூரலிகான்: "அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்."
கருணாநிதி: 'எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!'
இரண்டு கருத்துப் படம்
இரண்டு கிசுகிசு
நடிகர் மன்சூரலிகான்: "அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்."
கருணாநிதி: 'எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!'
இரண்டு கருத்துப் படம்
இரண்டு கிசுகிசு
- தலைவரின் மருத்துவமனைக் காட்சிகளை வைத்து ஒரு பிரசாரப் படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதாம். அவர் ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை, இந்தக் காட்சிகளை வைத்துச் சரிக்கட்டும் முயற்சியாம்!
- மத்திய உளவுத் துறை ஒரு ரகசிய சர்வே எடுத்தது. மத்திய ஆளுங்கட்சிக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு இருப்பதாகவும் இது தென் மாவட்டங்களில்தான் இன்னும் கூடுதல் என்றும் தெரிய வந்துள்ளது!
Saturday, March 07, 2009
ஜெயலலிதா உண்ணாவிரதம் எதற்காக?
மாலன்
இலங்கை உள்நாட்டுப் போர் அநேகமாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்நேரத்தில் போர் நிறுத்தம் கோரி, வரும் திங்களன்று ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் எதிரிகள் கூட 'இது காலம் கடந்த முயற்சி' என்று சொன்னாலும் அதை வரவேற்றிருக்கிறார்கள்.
காலம் கடந்த முயற்சி என்பதை ஜெயலலிதாவும் அறிந்திருப்பார்.அவர் இந்த உண்ணாவிரதத்தை அறிவித்திருப்பது இலங்கைத் தமிழர் நலனை மனதில் கொண்டல்ல, அதற்குப் பின்னால் வேறேதோ அரசியல் கணக்குகள் இருக்கின்றன என்பதை ஊகிப்பது கடினமல்ல. இந்த அறிவிப்பு காங்கிரஸ்-திமுக கூட்டணி சந்தேகத்திற்கு இடமின்றி பகிரங்கமாகக் காங்கிரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியாகியிருப்பதைக் கவனிக்கும் போது, இந்த உண்ணாவிரதம் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றிற்காக இருக்கலாம் எனத் தோன்றுகிறது:
- இலங்கைப் பிரசினை வாக்காளர்களிடையே, வெளியே புலப்படாத ஓர் கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்து, தன் கட்சியின் வாக்ககுகளைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சி
- இலங்கைப் பிரசினையை ஓர் தேர்தல் பிரசினையாக மாறி விடாமல் அதை neutralize செய்யும் ஒரு தந்திரம். எல்லாக் கட்சிகளும் ஏறத்தாழ ஒரே நிலை எடுத்துவிட்டால், அதில் விவாதத்திற்கும், பிரசாரத்திற்கும் அதிக இடமில்லாது போய் விடும்.
- காங்கிரசுடன் கூட்டணி இனி சாத்தியமில்லை என்ற நிலையில், பா.ம.கவைத் தன் அணிக்குக் கொண்டுவர வீசப்படும் தூண்டில்
- அதிமுக+ மதிமுக+பா.ம.க+இந்தியக் கம்யூனிஸ்ட்+ மார்க்சிஸ்ட் உள்ள கூட்டணி, 'இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டணி' என்ற தோற்றத்தை உருவாக்கி, இலங்கைத் தமிழர் பிரசினை காரணமாக திமுக-காங்கிரஸ் அரசுகள் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை கூட்டணிக்கு வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் உத்தி
இவற்றில் ஏதோ ஒன்றுதான் உண்ணாவிரத்தின் பின்னுள்ள நோக்கமாக இருக்க வேண்டும். நிச்சியம் இலங்கைத் தமிழர் நலன் அல்ல. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரசினையை தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல..
உண்ணாவிரதத்தோடு உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவது சந்தேகத்தை வலுவாக்குகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிதி திரட்டிய போது, அதை அங்கு எப்படி அனுப்புவார்கள் எனக் கேள்வி எழுப்பியவர் ஜெயலலிதா. இப்போது காசோலை வழியாக இல்லாமல் நிதி திரட்டுவது தேர்தல் நேரச் செலவுகளுக்காகக் 'கறுப்பை' வெளுக்கிற ஒரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறது.
எப்படி இருந்தாலும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், எந்தவித விளக்கமும் அளிக்காமல், அடிக்கடி தன் நிலைபாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொள்வது நடுநிலை வாக்காளர்களுக்கு அவர் மீதுள்ள நம்பகத்தன்மையை பலவீனமடையச் செய்யுமே அன்றி அவருக்கு அரசியல் ரீதியாக உதவாது.
Labels:
Elections 2009,
Jayalalitha,
உண்ணாவிரதம்,
தேர்தல் 2009,
ஜெயலலிதா
தேர்தல் உறவுகள்: SP & NC - PMK & DMDK
ஒரு வழியாக சமாஜ்வாடி கட்சி - காங்கிரஸ் தேர்தல் உறவுகள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்துவில் வந்திருக்கும் செய்தி சமாஜ்வாடி கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டது. இதை ஏற்கனவே என்னுடைய பதிவில் யூகித்திருந்தேன். இப்போது சமாஜ்வாடி கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸோடு நெருக்கமாக உறவாடி வருகிறது. சரத் பவாரோ சிவசேனாவோடு பேசியிருக்கிறார். மஹாராஷ்டிராவிலும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னமும் எட்டப்படவில்லை. ஒரு வேளை அது சரிவராத பட்சத்தில், சமாஜ்வாடி கட்சி - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - பாஜக கூட்டணி உருவாக வாய்ப்புண்டு. அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயா அல்லது வெளியிலிருந்து ஆதரவா என்பது இன்னமும் சில நாட்களில் தெரியும்.
இன்னமும்,தமிழ்நாட்டில் பெரிய வாக்கு வலிமை உடைய கட்சிகளாக கருதப்படும் இரண்டு கட்சிகள் (பாமக மற்றும் தேமுதிக) கூட்டணியினை அறிவிக்கவில்லை. செய்திகளின்படி பார்த்தால், பாமக பெரும்பாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியோடே இருக்குமென்று தோன்றுகிறது. அன்புமணி ராமதாஸ் ஐ.மு.கூ நன்றாக ஆண்டது என்று சொன்னதும்,ராமதாஸ் ஜெ.யின் உண்ணாவிரதத்தினை பற்றி பெரியதாக எதுவும் சொல்லததும் காரணங்களாக இருக்கலாம்.
ஒரு நிகழ்ச்சியில், தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரனும், காங்கிரஸின் மாநிலத்தலைவர் தங்கபாலுவும் சந்தித்து தனியறையில் பேசியது, காங்கிரஸ் தேமுதிகவினை ஐ.மு.கூ விற்கு இழுக்க முயல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
அடுத்த வாரம் ஒரு முக்கியமான வாரம். பல முக்கிய கூட்டணி முடிவுகள் எடுக்கப்படும். மார்ச் இரண்டாம் வார இறுதியிலிருந்து எல்லா கட்சியும் புயல்வேக பிரச்சாரத்திற்கு புறப்படுவார்கள்.
இன்னமும்,தமிழ்நாட்டில் பெரிய வாக்கு வலிமை உடைய கட்சிகளாக கருதப்படும் இரண்டு கட்சிகள் (பாமக மற்றும் தேமுதிக) கூட்டணியினை அறிவிக்கவில்லை. செய்திகளின்படி பார்த்தால், பாமக பெரும்பாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியோடே இருக்குமென்று தோன்றுகிறது. அன்புமணி ராமதாஸ் ஐ.மு.கூ நன்றாக ஆண்டது என்று சொன்னதும்,ராமதாஸ் ஜெ.யின் உண்ணாவிரதத்தினை பற்றி பெரியதாக எதுவும் சொல்லததும் காரணங்களாக இருக்கலாம்.
ஒரு நிகழ்ச்சியில், தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரனும், காங்கிரஸின் மாநிலத்தலைவர் தங்கபாலுவும் சந்தித்து தனியறையில் பேசியது, காங்கிரஸ் தேமுதிகவினை ஐ.மு.கூ விற்கு இழுக்க முயல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
அடுத்த வாரம் ஒரு முக்கியமான வாரம். பல முக்கிய கூட்டணி முடிவுகள் எடுக்கப்படும். மார்ச் இரண்டாம் வார இறுதியிலிருந்து எல்லா கட்சியும் புயல்வேக பிரச்சாரத்திற்கு புறப்படுவார்கள்.
Labels:
DMDK,
NC,
NDA,
PMK தேர்தல் 2009,
SP,
Tamilnadu Elections 2009,
UPA
மதுரையில் அழகிரி போட்டி?
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலரும், முதல்வர் மகனுமான மு.க. அழகிரி போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன
இத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என, திமுகவினர் பல்வேறு வியூகங்களை அமைத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது மு.க. அழகிரியின் தலைமையிலான தேர்தல் பணிகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன
திருமங்கலம் இடைத்தேர்தலின்போது அவர் மேற்கொண்ட வியூகங்களும் அதிமுக வேட்பாளரைவிட சுமார் 40 ஆயிரம் வாக்கு கள் கூடுதலாகப் பெற்று திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ததிலும் மு.க. அழகிரியின் பங்கு பெரிய அளவில் பேசப்பட்டது
தேர்தலில் வெற்றிக் கனியை பறித்துத் தந்த மு.க. அழகிரியை கெüரவிக்கும் வகையில், அவருக்கு மிக முக்கிய பொறுப்பான திமுக தென் மண்டல அமைப்புச் செயலர் பதவி அளிக்கப்பட்டது
மேலும், திருச்சி உள்பட தென் மாவட்ட 10 எம்.பி. தொகுதிகளும், 30-க்கும் மேற்பட்ட சட்டபேரவைத் தொகுதிகளும் மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும் என மறைமுகமாக கட்சி முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது வரும் மக்களவைத் தேர்தலில் தென் மாவட்டங்களுக்கு உள்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து மு.க. அழகிரியின் முடிவுக்கே கட்சியின் தலைமை விட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதனால், தென் மாவட்டங்களில் "சீட்' கேட் கும் திமுகவின் முக்கியப் புள்ளிகளும், கூட்டணிக் கட்சியினரும் மதுரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன
இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் மு.க. அழகிரியே போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் கருணாநிதிக்குப் பின், அரசியல் பலமும், பதவி பலமும் கட்டாயம் தேவையாக இருக்கும். எனவே, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தது போதும். நேரடியாக அரசியல் களத்தில் இறங்கவேண்டும் என்றால் "பதவி' கண்டிப்பாக தேவை என அவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது
மு.க. அழகிரி போட்டியிட்டால் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில், அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர்.
முதியோர் உதவித் தொகை, திமுகவினரால் இதுவரை 25,000 பேருக்கு மேல் வாங்கித் தரப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மதுரை திமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு செய்துள்ளனர் மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்பட்டதில், சுமார் 60,000 பேர் மருத்துவ உதவி பெற்றுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோருக்கு தனியார் சிறப்பு மருத்துவ மனைகளில் இலவசமாக மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர்.மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 67 ஆயிரம் பேருக்கு சுழல்நிதியாக ரூ.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நலத்திட்ட உதவிகளால் பயனடைந்தோரை வாக்குகளாக மாற்றி , அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அழகிரியை வெற்றி பெறச்செய்ய தி மு க வினர் வியூகம் வகுத்துள்ளனர். இதனால் இத்தொகுதியில் அழகிரி போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கூறுகின்றனர்.
இத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என, திமுகவினர் பல்வேறு வியூகங்களை அமைத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது மு.க. அழகிரியின் தலைமையிலான தேர்தல் பணிகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன
திருமங்கலம் இடைத்தேர்தலின்போது அவர் மேற்கொண்ட வியூகங்களும் அதிமுக வேட்பாளரைவிட சுமார் 40 ஆயிரம் வாக்கு கள் கூடுதலாகப் பெற்று திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ததிலும் மு.க. அழகிரியின் பங்கு பெரிய அளவில் பேசப்பட்டது
தேர்தலில் வெற்றிக் கனியை பறித்துத் தந்த மு.க. அழகிரியை கெüரவிக்கும் வகையில், அவருக்கு மிக முக்கிய பொறுப்பான திமுக தென் மண்டல அமைப்புச் செயலர் பதவி அளிக்கப்பட்டது
மேலும், திருச்சி உள்பட தென் மாவட்ட 10 எம்.பி. தொகுதிகளும், 30-க்கும் மேற்பட்ட சட்டபேரவைத் தொகுதிகளும் மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும் என மறைமுகமாக கட்சி முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது வரும் மக்களவைத் தேர்தலில் தென் மாவட்டங்களுக்கு உள்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து மு.க. அழகிரியின் முடிவுக்கே கட்சியின் தலைமை விட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதனால், தென் மாவட்டங்களில் "சீட்' கேட் கும் திமுகவின் முக்கியப் புள்ளிகளும், கூட்டணிக் கட்சியினரும் மதுரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன
இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் மு.க. அழகிரியே போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் கருணாநிதிக்குப் பின், அரசியல் பலமும், பதவி பலமும் கட்டாயம் தேவையாக இருக்கும். எனவே, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தது போதும். நேரடியாக அரசியல் களத்தில் இறங்கவேண்டும் என்றால் "பதவி' கண்டிப்பாக தேவை என அவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது
மு.க. அழகிரி போட்டியிட்டால் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில், அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர்.
முதியோர் உதவித் தொகை, திமுகவினரால் இதுவரை 25,000 பேருக்கு மேல் வாங்கித் தரப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மதுரை திமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு செய்துள்ளனர் மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்பட்டதில், சுமார் 60,000 பேர் மருத்துவ உதவி பெற்றுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோருக்கு தனியார் சிறப்பு மருத்துவ மனைகளில் இலவசமாக மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர்.மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 67 ஆயிரம் பேருக்கு சுழல்நிதியாக ரூ.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நலத்திட்ட உதவிகளால் பயனடைந்தோரை வாக்குகளாக மாற்றி , அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அழகிரியை வெற்றி பெறச்செய்ய தி மு க வினர் வியூகம் வகுத்துள்ளனர். இதனால் இத்தொகுதியில் அழகிரி போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கூறுகின்றனர்.
தினமணி 7 மார்ச் 2009
Friday, March 06, 2009
BJP Strategy: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல்
பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 46 பா.ஜனதா வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்துடன் சேர்த்து, இதுவரை 166 வேட்பாளர்களின் பெயர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருக்கிறது.
இந்தப்பட்டியலில் பெரும்பாலோர் நடப்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மக்களவையில் பணத்தை கொண்டு வந்து காட்டிய 3 எம்.பி.க்களில் ஒருவரான பக்கான்சிங் குலாஸ்தேவும் (Fagan Singh Kulste) இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இதில்
பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் வெங்கையா நாயுடு, அருண்ஜேட்லி ஆகியோர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவ தில்லை என்றும், அவர்கள் கட்சியின் தேர்தல் பணிகளை கவனிப்பார்கள் என்றும் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தற்போது ராஜ்யசபா எம்.பி.களாக இருந்து வருகின்றனர்.
அருண் ஜேட்லி
ஆகிய மாநிலங்களின் தேர்தல் பணிகளை பார்த்துக்கொள்கிறார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பொறுப்புகளையும் அருண்ஜேட்லி கவனித்துக் கொள்கிறார்.
சுஷ்மா சுவராஜ்
சாந்த குமார் மற்றும் பகத்சிங் கொசூரி
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
ஒரிசா மாநில தேர்தல் பொறுப் பாளராக வி.சதீஷும், ராஜஸ்தானைச் சேர்ந்த கட்சி தலைவர் சவுதன்சிங், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாமில் தேர்தல் பொறுப்புகளை பார்த்துக் கொள்கின்றனர்.
இந்தப்பட்டியலில் பெரும்பாலோர் நடப்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மக்களவையில் பணத்தை கொண்டு வந்து காட்டிய 3 எம்.பி.க்களில் ஒருவரான பக்கான்சிங் குலாஸ்தேவும் (Fagan Singh Kulste) இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இதில்
- கர்நாடகம் - 11 வேட்பாளர்கள்
- சத்தீஸ்கர் மாநிலம் - 11
- மத்தியப்பிரதேசம் - 12
- ராஜஸ்தான் - 12
- கர்நாடக மாநிலத்தின் தற்போதைய எம்.பி.க்கள் 9 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தற்போதைய எம்.பி.க்கள் 5 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப் பட்டுள்ளது.
- மத்தியப்பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் தற்போதைய நாடாளு மன்ற உறுப்பினர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் 8 நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்தப்படுகின்றனர்.
- சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேசத்தின் விதிஷா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
- கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் நிறுத்தப்படு கிறார்.
- அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தி (பெல்லாரி)
- பொதுப் பணித்துறை மந்திரி சி.எம். உதாழியின் மகன் சிவ்குமார் உதாதி (ஹலேரி)
- சுகாதாரத் துறை மந்திரி உமேஷ் கட்டியின் சகோதரர் ரமேஷ் கட்டி (சிக்கொடி)
- கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ரெவு நாயக் பெலமகி (குல்பர்கா)
- ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் சகோதரி யசோதரா ராஜே குவாலியர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- பிகானீர் தொகுதியின் உறுப்பினரான நடிகர் தர்மேந்திராவின் பெயர் இந்த பட்டியலில் இல்லை. தற்போது ரிசர்வ் தொகுதியாக உள்ள இது அர்ஜூன் மேக்வால் என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
- கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுவார்.
- ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் ஜலவார் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங் பார்மர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- முன்னாள் மந்திரி பக்கன் சிங் லோவ்தே (மண்டியா)
- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கின் சகோதரர் லட்சுமண் சிங் (ராஜ்கார்)
- பா.ஜனதா கட்சி யின் பொதுச்செயலாளர் தவார் சந்த் கெலாட் (டெவாஷ்)
- முன்னாள் மத்திய மந்திரி சத்யநாராயண் ஜடியா (உஜ்ஜயினி)
பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் வெங்கையா நாயுடு, அருண்ஜேட்லி ஆகியோர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவ தில்லை என்றும், அவர்கள் கட்சியின் தேர்தல் பணிகளை கவனிப்பார்கள் என்றும் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தற்போது ராஜ்யசபா எம்.பி.களாக இருந்து வருகின்றனர்.
அருண் ஜேட்லி
ஆகிய மாநிலங்களின் தேர்தல் பணிகளை பார்த்துக்கொள்கிறார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பொறுப்புகளையும் அருண்ஜேட்லி கவனித்துக் கொள்கிறார்.
சுஷ்மா சுவராஜ்
- மத்திய பிரதேசம்,
- சட்டீஸ்கர்,
- ஜார்கண்ட்
சாந்த குமார் மற்றும் பகத்சிங் கொசூரி
- ஜம்முகாஷ்மீர்,
- இமாச்சல் பிரதேசம்,
- உத்தரகாண்ட்,
- அரியானா
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
- குஜராத்,
- மகாராஷ்டிரா,
- கோவா,
- டையூ,
- டாமன் உள்ளிட்ட மேற்கு மண்டல மாநிலங்களின்
ஒரிசா மாநில தேர்தல் பொறுப் பாளராக வி.சதீஷும், ராஜஸ்தானைச் சேர்ந்த கட்சி தலைவர் சவுதன்சிங், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாமில் தேர்தல் பொறுப்புகளை பார்த்துக் கொள்கின்றனர்.
முந்தைய செய்தி: நாராயணன்: பாஜகவின் தேர்தல் முகங்கள்
Location:
Rajasthan, India
Telugu Desam & DMK: இலவச கலர் டிவி
ஆந்திர மாநிலத்தில், பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.
~oOo~
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:
~oOo~
மாநில காங்கிரஸ் தலைவர் கக்ரபாணி தங்கள் ஆட்சியின் ஆரோக்யஸ்ரீ மற்றும் இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி போன்ற திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்தாலே தங்களின் வெற்றி எளிதாகும் என்றிருக்கிறார்.
~oOo~
சிரஞ்சிவியின் பிரஜா ராஜியம்
~oOo~
சந்திரபாபு நாயுடு செய்த ஊழல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாளில் வெளியிட்டதில் இருந்து:
~oOo~
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி அல்லாத
மூன்றாவது அணியில்
மாயாவதியும் இந்த அணியில் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம்,
- காங்கிரஸ்,
- தெலுங்கு தேசம் & தெலுங்கானா ராஷ்டிர சமிதி
- பாஜக
~oOo~
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:
- கேபிள் இணைப்புடன் கூடிய இலவச வண்ணத் தொலைக்காட்சி
- பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில், வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு உதவி தொகையாக மாதம் ரூ. 2000 ரொக்கப்பணம்
- பரம ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரமும்,
- ஏழைகளுக்கு ரூ.1500-ம்,
- வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படும்.
- ஏழைக்குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின்விளக்குகள், ஒரு மின்விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- மக்களின் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- விளிம்பு நிலையாளர்களுக்கு இலவச மருத்துவ சேமநல நிதி, காப்பீடு
- முதியவர்களுக்கு உதவித் தொகை
- கணவனை இழந்த பெண்களுக்கு மாதாந்திர பென்சன்
- வெள்ளை ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 25 கிலோ இலவச அரிசி
~oOo~
மாநில காங்கிரஸ் தலைவர் கக்ரபாணி தங்கள் ஆட்சியின் ஆரோக்யஸ்ரீ மற்றும் இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி போன்ற திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்தாலே தங்களின் வெற்றி எளிதாகும் என்றிருக்கிறார்.
~oOo~
சிரஞ்சிவியின் பிரஜா ராஜியம்
- கடந்த பதினைந்து ஆண்டுகளாக அரசியலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊழல் புகார்களை சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும்
- ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்றும்
"வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது, மோசடி மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என ஜனாதிபதி பிரதிபா பட்டீலிடம், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
~oOo~
சந்திரபாபு நாயுடு செய்த ஊழல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாளில் வெளியிட்டதில் இருந்து:
- சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் செய்துள்ள முறைகேடுகளில் ஹெரிடேஜ் புட் லிட்., தொடர்பான ஊழல் குறிப்பிடத்தக்கது.
- ஒரே நிறுவனத்திற்குள் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடுவது,
- கூட்டுச் சேர்ந்து சதியில் ஈடுபடுவது ஆகிய முறைகேடுகள் நடந்துள்ளன.
- அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்துவதற்கு எதிராக கோர்ட்டில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.
- தனது ஆட்சிக் காலத்தில் நடந்த எலுரு ஊழல் தொடர்பான விசாரணைக்கும் தடை வாங்கியுள்ளார்.
- சந்திரபாபு நாயுடுவின் ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
- வேலைக்காக உணவுத் திட்டத்திலும் மோசடி நடந்துள்ளது.
- போலி முத்திரைத் தாள் தொடர்பான விஷயத்தை ஊக்குவித்துள்ளார்.
- ஸ்டான்போர்டு பல்கலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் சீட் பெறுவதற்காக சத்யம் நிறுவனம் சார்பில் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
- தெலுங்கு தேசம் கட்சியின் அடையாள அட்டை குறித்த விஷயத்திற்காகவும் சத்யம் நிறுவனத்திடம் இருந்து 80 கோடி ரூபாயை சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்.
~oOo~
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி அல்லாத
மூன்றாவது அணியில்
- தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்
- 4 இடதுசாரி கம்யூனிஸ்ட்/மார்க்சிஸ்ட் கட்சிகள்
- அ.தி.மு.க
- தெலுங்கு தேசம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி
மாயாவதியும் இந்த அணியில் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Labels:
TDP,
ஆந்திரம்,
சந்திரபாபு,
சிரஞ்சீவி,
தெலுங்குதேசம்,
தேர்தல் 2009
Location:
Andhra Pradesh, India
Subscribe to:
Posts
(Atom)