Wednesday, February 18, 2009

"கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !"

அமர்க்களம் ஆறு-உ.பி/3
19.2.2009

முலாயம் சிங் யாதவின் கூற்று விஷமத்தனமானது, வதந்தியைப் பரப்புவதே அதன் நோக்கம் என்று பாஜக தெரிவித்துள்ளது. " சமாஜ்வாதியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்க கொஞ்சம்கூட வாய்ப்பில்லை." என்று பா.ஜ.க.துணைத் தலைவர் சையத் அபாஸ் நக்வி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இது போன்ற அறிக்கைகள் வாக்காளர்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டவை. சமாஜ்வாதிக் கட்சி, குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இழந்து விட்ட தனது முக்கியத்துவத்தை திரும்பப் பெற நினைக்கிறது என்றார் அவர்

பாஜகவுடன் கூட்டணி என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் காங்கிரசுடன் கூடுதலாகப் பேரம் பேசலாம் என்ற சமாஜ்வாதியின் நோக்கத்தை பாஜக முளையிலேயே கிள்ளிவிட்டது பாஜக.

முன்னர் வந்த செய்தி

தனது கட்சி பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று (புதன்கிழமை 18/2/09) அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமாஜ்வாதிக் கட்சியின் நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும் என்ற முலாயம் சிங், அந்த நிபந்தனைகள் என்ன என்று தெரிவிக்கவில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியையும், மூத்த தலைவர் வாஜ்பாயையும் இது குறித்துப் பேச சந்தித்ததாகத் தெரிவித்தார்.

காங்கிரசிற்கும் சமாஜ்வாதிக்க்குமிடையே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தி நிலவும் வேளையில் முலாயம் இவ்வாறு கூறியிருப்பது கவனத்திற்குரியதாகிறது

1 comment:

குப்பன்.யாஹூ said...

தமிழகத்திலும் இந்த காட்சிகளை விரைவில் பார்க்கலாம்.
பல சிறு கட்சிகள், தலைவர்கள், ஜாதிய கட்சிகள் அணி மாறுவார்கள் தேர்தல் சமயத்தில்.

குப்பன்_யாஹூ